Monday, August 29, 2011

உண்மையின் வெளிச்சம் .


உண்மை கசக்கும்,ஆனால் அதுவே எப்பொழுதும் நம்முடன் இருக்கும். நம்மால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியாது,அதுவும் அது நம்மைச் சார்ந்ததாக இருந்தால் .சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்கள் உண்மை சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாததால் அவர்களை தண்டித்தான் .அதனால் அவனை சுற்றி இருந்தவர்கள் உண்மை பேச பயந்தனர். அதனாலேயே அவன் இரண்டாம் உலகப் போரில் தோல்வி அடைந்தான்.

  அதே சூழ் நிலை நம்மில் பலருக்கும் ஏற்படும்.எந்த ஒரு மனிதனுக்குமே தன்னை சுற்றிஉள்ளவர்கள் தன்னைப் பற்றி எப்பொழுதும்"இந்திரன் , சந்திரன் " என்று புகழாரம் சூட நினைக்கத் தோணும். ,  உண்மை என்ன வென்றால், நமக்கும் ஹிட்லர் மாதிரியான தோல்வி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் நம்மால் நம்முடைய குறைகளை ஒப்புக்  கொள்ளவே முடியாது. மற்றவர்கள் நம்முடையதவறுகளையோ, நிறைகுறைகளையோ சுட்டிக் காட்டுவதும்  நாம் விரும்புவதில்லை .
 அப்படி இருக்கும்போது நமக்கு வெற்றி எங்கிருந்து கிடைக்கும்?
 இதற்கு ஒரே வழி, மனமிருந்தால் மார்கமுண்டு,அது என்ன? 

அது  தான் நம்முடைய குறைகளை தினமும் நாமேஒருமுறை நினைத்துப் பார்த்து திருத்திக் கொளவது தான். இதில் வேற்று மனிதர்கள் யாரும் இல்லை ,குற்ற உணர்வும் இருக்காது.
 உண்மையாக வாழ வேண்டுமானால் நம்முடைய குறைகளை மற்றவர்கள் நமக்கு சொல்லும் முன்பாக  நாமே  புரிந்து கொண்டும் அதை ஒப்புக்  கொண்டும்செயல் படுவது தான்.



"யார்" சொல்லுகிறார்கள் என்பதைவிட "எதைப் பற்றி"சொல்லுகிறார்கள் என்றும் "யார் சரி" என்பதைவிட "எது சரி ''என்றும் பார்க்க வேண்டும்.
தன்னுடைய குற்றங்களையும் , குறைகளையும் ஒத்துக் கொள்கிறவன் நிஜத்தில் ரொம்ப தைரியசாலி .

Sunday, August 28, 2011

எங்கே நிம்மதி?



நாளை கிடைக்கும் நிம்மதி இன்று உன்கையில் .அதனால் இன்றே நீ நிம்மதியை தேடி போ.
அது  ஒரு நிமிஷம் நீ  கண்ணை மூடி உன்னிடத்தில் நிம்மதியைக்  கொண்டு வர முயற்சி.


 உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கு நீயேன் நம்பிக்கையின்  ஒளியாகவும், சந்தோசத்தின் அன்பாகவும் ,இருக்கக்  கூடாது?

  நீஉன்னிடத்தில்இருக்கும் சந்தோசத்தை  மற்ற எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால்  அது அவர்கள்  மற்றொருவருக்கு கொடுக்கும் சந்தோசமாகத் தெரியும்.

 ஒரு மெழுகுவத்தி எப்படி மற்றொன்றை ஏற்ற உதவுகிறதோ அதைப் போல் நீ இருப்பாய்.

சந்தோசமும் நிம்மதியும்  மனித  சங்கிலி போலே , ஒன்று தொடர்ந்து மற்றொன்று .
                                                                                                                               
நீயே நம்பிக்கை நட்சத்திரமாக சந்தோசம் என்கிற இரவு  வானில் பிரகாசிப்பாய்!

உன்னைப் போல் ஒவ்வொரு மனிதனும் இப்படி நினைத்தால் உலகம் தான் எவ்வளவு சந்தோசத்துடனும் நிம்மதியுடனும் இருக்கும்!

Saturday, August 27, 2011

கடி ஜோக்ஸ் -1

கிரேசி மோகன் ஜோக்ஸ் ...

முன்னேபின்னே செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும் ?

உடல்: இப்படியெல்லாம் கேள்வி கேட்டு ஏற்கனவே செத்த என்னை ஏன்யா
மறு புடியும் சாவடிக்கிறீங்க! செத்ததுக்கு அப்பாலே நாம் போகறது  சுடுகாடா
இல்லே ஏற்காடா ?
எனக்கு எப்படிப்பா தெரியும்? 

 ஏம்ப்பா உனக்காச்சும் தெரியுமா?

உயிர்:  லட்சணமா  போனமா கம்னு கெடக்கறத  வுட்டுட்டு, போற நேரத்துலே அபசகுனமா கேள்வி கேட்டு ஏன் என் உசுரே வாங்கறே ,தோ பார் நீ மண்ணுலேருந்து  வந்தே மண்ணுக்கு போறே ,நான் விண்ணுலேருந்து வந்தேன் விண்ணுக்கு போறேன் அங்க வின்னுலே சுடுகாடு ,சுடாத காடு ஒரு மண்ணும் கெடையாது !"

ஆன்மா: என்ன எழவுடா இது! அங்கே புள்ளே அப்பனுக்கு கொள்ளி வச்சு காரியம் பண்ண ரெடியா மடியா சுத்திகிட்டு இருக்கான் , நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்கிறீங்களே! 

நல்லா கேட்டுக்குங்க ..யாரும் சாவரது கெடையாது .. கொஞ்ச நாள் சேர்ந்து இருந்தீங்க இப்போ பிரியபோறீங்க.

பிரிவோம் சந்திப்போம் அம்புடுதேன் ஒ கே வா ?

உடல் உயிர் கோரஸாக ..நீ சொன்ன கரீட்டதான் இருக்கும் அண்ணாத்தே!!!!!!!!!!!!!!!!!!!!!!!



 நாய்க்கு  நாலு  கால்  இருக்கலாம் .ஆனா  அதல  லோக்கல்  கால் , STD கால், ISD கால் , missed கால் கூட  பண்ண முடியாது !
 
  ..........................................................................................................................                                                                   
 கங்கை  ஆத்துல  மீன்  பிடிக்கலாம் .... காவேரி  ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா  ஐயர்  ஆத்துல மீன் பிடிக்க  முடியுமா ?
......................................................................................................................
  திருவள்ளுவர்  1330 குரல்  எழுதி இருந்தாலும்   , அவரால  ஒரு  குரலில்  தான்  பேச  முடியும் .
......................................................................................................................
 "என்ன  தான் உன்  தலை  சுத்தினாலும் , உன் முதுகை  நீ  பாக்க  முடியுமா ?"
   ............................................................................................................................................

   மீன்  பிடிக்கிறவன   மீனவன் -ன்னு  சொல்லலாம் . நாய்  பிடிக்கிறவன  நாயஅவன் - ன்னு சொல்ல  முடியுமா?
..............................................................................................................................

  என்ன தான் ஒருத்தன்  குண்டா  இருந்தாலும் , அவன  துப்பாக்கிகுள்ள  போட  முடியாது. 
................................................................................................................................

  தேள்  கொட்டினா  வலிக்கும் ... பாம்பு  கொட்டினா வலிக்கும்.. முடி  கொட்டினா வலிக்குமா?
....................................................................................................................

  ஸ்கூல்  டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ... காலேஜ்   டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்... ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க  முடியுமா?
 
..................................................................................................................................
பொங்கலுக்கு  கவர்ந்மேன்ட்ல  லீவு  குடுப்பாங்க ... ஆனா இட்லி  தோசைக்கு  குடுப்பாங்களா  ?
......................................................................................................................

  கோலம்மாவில்  கோலம்  போடலாம் . கடலை   மாவில்  கடலை  போட முடியுமா?!
 
..................................................................................................................................
 
   லைப்  ல  ஒண்ணுமே  இல்ல  நா  போர்  அடிக்கும்.... தலைல   ஒண்ணுமே இல்லைனா  களர். அடிக்கும் .
....................................................................................................................................

 பரம்பரைக்கு  உக்காந்து  சாப்பிட  பைசா  இருந்தாலும் ... பாஸ்ட்  பூட் கடைலே  நின்னுகிட்டு  தான்  சாப்பிடணும்.
.......................................................................................................................................!

  இன்ஜினியரிங் காலேஜ்ல  படிச்சு  எஞ்சினீர்  ஆகலாம் , பிரெசிடென்சி  காலேஜ்ல படிச்சு ப்ரெசிடென்ட்  ஆக  முடியுமா?
........................................................................................................................................
ஆட்டோக்கு   ஆட்டோன்னு  பேர்  இருந்தாலும் manual  தான் டிரைவ்  பண்ண முடியும்...
...........................................................................................................................................
 
தூக்க   மருந்து  சாப்பிட்டா தூக்கம்  வரும் ... ஆனா...இருமல்  மருந்து சாப்பிட்டா இருமல்  வராது!
......................................................................................................................................

 வாழ  மரம்  தார்  போடும் ! ஆனா அத  வச்சி  ரோடு  போட முடியுமா?
........................................................................................................................................

  'ஹான்ட் வாஷ் 'ன்னா  கை  கழுவறது , 'Face வாஷ்'ன்னா முகம்  கழுவறது , அப்போ  'பிரைன்  வாஷ்' ன்னா பிரைன கழுவறதா ?
....................................................................................................................

  டீ  கப்ல டீ  இருக்கும் . அப்ப வேர்ல்ட்  கப்ல  வேர்ல்ட்  இருக்குமா ?
...............................................................................................................................
  செல்  மூலமா  எஸ் எம் எஸ் அனுப்பலாம் , ஆனா
எஸ் எம் எஸ் மூலமா  செல்ல  அனுப்ப  முடியுமா?
.....................................................................................................................
பால்கோவா பாலில்  இருந்து  பண்ணலாம் , ஆனா ரசகுல்லாவ  ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?
....................................................................................................................
    பல்  வலி  வந்தா  பல்ல  புடுங்கலாம் ....ஆனா.. கால்  வலி வந்தா கால  புடுங்க  முடியுமா?! இல்ல  தலை  வலி  வந்தா, தலைதான்  புடுங்க  முடியுமா ?
.......................................................................................................................

Friday, August 26, 2011

பழமொழிகள்


 பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது ., சீதை சிரிச்சு கெட்டாள்.

  எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.

கட்டுப்போனைக்கு  சிவராத்ரி விரதமா ?

உழக்கு மிளகு கொடுப்பானேன் ,ஒளிந்திருந்து மிளகு சாறு  குடிப்பானேன்? 

சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் தின்கிரதாம் .

  வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல. 



பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை பொத்தல் இலை என்கிறான்.

  உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.

  கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .வயிறே வைகுண்டம் .

கொடுக்கிறது கோத்திரத்தில் கிடையாது, வாங்குறது வம்சத்தில் உண்டு.

  சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .

  குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .

  வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச்  செல்வம் முருங்கை.

  பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்.

  தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்.

உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல .

அடிங்கரதுக்கு பொண்டாட்டிய க் காணோம் ,ஆறாவது குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாமாம்.

  கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?

  ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான் !

சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயைகட்டிகொண்டு எதிரே வந்தாளாம் . 

  பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !

  ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே.

  செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?

கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .

துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?

திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?

ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .

பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.

குறையச் சொல்லி , நிறைய அள.

அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.

அறைக்காசை ஆயிரம் பொன்னாக்கிரவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.

ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு
நாளாச்சுது .

ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேறு
நாளாச்சுது.


Wednesday, August 24, 2011

நம்பிக்கை

 நம்பிக்கைதான் வாழ்க்கையின் தும்பிக்கை.  நம்பிக்கைஇருக்கும் வரை ஒருவனுக்கு வாழ்க்கை வாழத் தோணும், நல்லது நடக்கும் என்று நினைத்தே ஒவ்வொரு   நல்ல செயலையும் செய்யத்தோணும். அதனாலேயே மனிதன் கனவுகளை நனவாக்கப் பார்க்கின்றான். ஒட்டகத்திற்கு பாலைவனத்திலும் தண்ணீர் கிடைக்கும் .


  அதுவே ஒரு உந்து சக்தியாக துரத்தி குறி பார்த்து அம்பு எய்த உத்வேகத்தைக் கொடுக்கிறது. பயிற்சி செய்ய செய்ய அதை முழு பரிமாணத்திற்கு கொண்டு வரவும் காரியத்தை கணக் கச்சிதமாக முடிக்கவும் செய்கிறது.விவசாயிக்கு  மழை மேகம்  போலே சாதாரண மனிதனுக்கு நம்பிக்கை . 

தாய் குரங்கு தன குட்டியை எப்படி முதுகில் கீழே விழாமல் சுமக்கும் என்று குட்டிக்கு நம்பிக்கையோ அப்படியே மனிதனுக்கும் .நம்பிக்கை  ஒரு மாற்றத்தையும் ஒரு திருப்பு முனையும் கொண்டு வரும் என்ற எதிர்ப்பார்ப்பே எப்பேர்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அணையா தீபமாக 
ஒருசுடராககொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் !

சுகப் பிரசவ ஸ்லோகங்கள்


பெண்கள் கருவுற

காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப் பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.

கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்//


கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே//


மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்//
.............................................................................................................................

தினமும் காலையில் குளித்து விட்டு இந்த ஸ்லோகங்களை தவறாமல் சொல்லி வந்தால் சுகப் பிரசவம் ஆகும்.
மனப்பாடம் ஆன பிறகு  சொல்லிக் கொண்டே இருக்கலாம். 
..................................................................


Mathru boodeswaro devo
Bakthanaa mishta thayaka
Sukanthi kunthala naavaha
Suka Prasava Mrichchathuhu.
        *                 *                     *

Hima vathyuththarey parthavey
Surathaa nama yakshini
Tasyaha smarana mathrena
Visalya karpini paveth.

*                            *                           *
Hey sankara smarahara
Bramahathathi natha
Mannatha samba sasisooda
Harathri soolin
Sambo sukaprasavakrutha
Pavame thayalo
Shri mathrubootha

Monday, August 22, 2011

இது ஏன்


போனில் பேசுகிறவர்கள் அடுத்த பக்கம் இருப்பவர் பார்க்க முடியாது  என்று தெரிந்திருந்தும் கை அசைத்து  சைகையில் பேசுவது ஏன்?

   நம்மிடம் சில்லறை இல்லாவிட்டால் கடைக் காரரிடம் அடுத்த முறை தருவதாகச் சொல்லிவிட்டு அவர் அதை ஒப்புக்கொள்ள எதிர் பார்க்கிறோம். ஆனால் அதே கடைக்காரர் நம்மிடம் சில்லறைஇல்லை  என்றால் நாம் உடனே அந்த சில்லறைக்கு வேறு எதாவது
வாங்கிவிடுகிறோம்.அவர்  நம்மை  நம்பணும் ,ஆனால் நாம்அவரை  நம்புவதில்லை  அது ஏன்?

 நாம் கால் கடுக்க க்யூவில் நிற்கும் சமயம் யாராவது வந்து நடுவில் புகுந்தால் உடனே அவரை திட்டித் தீர்த்து விடுகிறோம். அதே நம்ம பண்ணும் போது யாராவது திட்டினால் நமக்கு பிடிப்பதில்லை. அது ஏன்?

குடை எடுத்துக் கொண்டு போனால் அன்று மழை வருவதில்லை., ஆனால் ஒரு நாள் எடுத்துக்கொண்டு போக மறந்தால், அன்று  மழை   வெளுத்து வாங்குவது ஏன்? 

 வம்பு கிடைக்கும் சமயம் பார்த்து செல் போனில்கரன்சி தீர்ந்தோ அல்லது பாட்டரி கம்மியாவது ஏன்

 ரயிலிலோ ,பஸ்ஸிலோ அல்லது  விமானத்திலோ ,
ஜன்னல் சீட்டுக் கிடைக்குமான்னு மனம் கிடந்து அலைவது ஏன்?

Sunday, August 21, 2011

பழமொழிகள்

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

  அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.

* அகத்தினழகு முகத்தில் தெரியும்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
* அடியாத மாடு படியாது.
* அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
* அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளம்பாது.
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வைக்கோற் போர் நாய் போல.

Saturday, August 20, 2011

உன்னால் முடியும்!

வாழ்க்கையை தற்போதைக்காகவும் இன்றைக்காகவும்  வாழு.உன்னையே நம்பு. யாருக்காகவும் உன்  வாழ்க்கையை மாற்றாதே.நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ , அப்படியே வாழ்.

  நீஇன்னும் அதே சிறு பிள்ளையா இல்லை மாறி விட்டாயா?  நீ சிறு பிள்ளையாக இருந்த போது பட்டாம்பூச்சி பின்னாடியும் ,காத்தாடி பின்னாலேயும் ஓடி விளையாடினாய். வயது ஆக, ஆக உன்னில் மாற்றம் கண்டாய்.

எப்படி நீ ? இன்னும் அதே சிறு  பிள்ளையா இல்லை மாறி விட்டாயா?
 உனக்கே தெரிந்திருக்கும்   உன்  வீட்டு பெரியோர்கள்  உன்னைக் கண்டித்து  வழி வகுத்தார்கள்.  அதை சரிவர செய்து கொண்டு தப்பு நடந்த போது   .உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன்னிடம் சில நெறி முறைகளை எதிர்பார்த்தார்கள்  அதை  புரிந்துகொண்ட நீ   அவர்கள் உன்னைக் கண்டித்து வழி வகுத்த போது நல்லதற்கே என்று பொறுமையாக இருந்தாய் .அதனால் தான் நீஒரு நல்லமனிதனாக ஆனாய். உன்னிடம்   இருந்த சிறுபிள்ளைத் தனமும் தனமும் உன்னைவிட்டு போயேவிட்டது.

 இந்த மாற்றத்தில் உன்னை   பற்றிய நிறை குறைகளைஅறிந்திருப்பாய். அதே சமயம் மற்றவர்கள் உன்னைவிட அதிக பலசாலிகளாகவும் புத்திமான்களாகவும்தோன்றுவார்கள் .அதுரொம்ப நியாயமானதே.ஆனால் இதுவே உன்னை  அதற்காக   பலஹீனமாக ஆக்கக்கூடாது .

.அவர்கள் பலசாலிகளோ இல்லையோ நீ  அதற்காக ஒன்றும் செய்ய முடியாது .செய்வதும் உன்  கையில் இல்லை.அப்போது நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான் ,அது உன்னை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதும் உன்னில்மாற்றம்.கொண்டு வருவதும் தான்.
அதை இப்பொழுதே உடனே செய்.உன்னுள் இருக்கும் நெருப்பு பொறியை அணைய விடாதே !

 நீ சிறு வயது முதல் இப்பொழுது வரை செய்த நல்லது, கெட்டது எல்லாவற்றையும்  ஒரு  முறை அலசிப்  பார்த்து  கெட்டதைக் களைந்து விடு. நீ செய்த  முயற்சிகளும், முடிந்த செயல்களும் உன்னை உற்சாகப் படுத்தும் .உன்னை நினைத்து பெருமைப் படு. உன்னைப் பற்றிய உண்மையும் தெரிய வரும். உன் மனது தூய்மை அடைந்து  விடும் .  உன்னுள் இருக்கும்  உந்து சக்தியை வெளிக் கொண்டு வந்து உன்னையே நம்பு.

Wednesday, August 17, 2011

வாழ்க்கை இது தானடா !



உண்மையாகவே  நீ  யாரையாவது  நேசித்து  அவர்கள்  உன்னை  
 நேசிக்கவில்லை  என்றாலும் ,நீ ஒருவரை  நேசித்து அவர்களிடம்  சொல்ல நினைத்து சொல்ல முடியாமல்  போனாலும்  உன்  வருத்தம் மனவருத்தமே! .


*                                                 *                                                 *

 உனக்கு  வேணுமானாலும்  உன்  வாழ்க்கையில்  ஒருவர்  
முக்கியமானவராக இருக்கலாம்,அனால்  அவருக்கு  நீ முக்கியமாக   
 இருக்க வேண்டும்  என்று  எந்த  சாஸ்திரத்திலும் சொல்லவில்லை!.

*                                                 *                                                 *

 உன்னுடைய   நெருங்கிய   தோழியோதோழனோ   எப்பொழுதுமே
 வளவள   என்று   பேசிக்  கொண்டே  இருக்கணும்   என்றில்லை சும்மா 
 வெறுமனே   ஒருதருக்கொருவர்  அருகில்  இருந்தாலே  அது  யானை  
 பலத்திற்கு   சமானம்! . 

*                                                *                                                 *

 வாழ்க்கையில் சிலவற்றை  நாம்  இழக்கும்  போது  தான்  அதன்  மதிப்பே 
 தெரிகிறது , அதே  போல்  சிலவற்றை நாம் பெரும்  வரையும்  அதன் 
 மகத்துவம்   தெரிய  வருவதில்லை! 

*                                                *                                                     *
 
  நொடிப்பொழுதில்  சிலவற்றை பெற  முடியும் , மணிப்   பொழுதில்  சிலரை  நோக  அடிக்க  முடியும், ஒரே  நாளில்  சிலரிடம்  அன்பு  செலுத்தமுடியும் , ஆனால்   மறக்க  மட்டும்  வாழ்நாளே  வேணும்! 

*                                               *                                                     *

அழகை  நினைத்து  பெருமைப்  படாதே , அது   சில  நாட்கள்  தான்  இருக்கும் , பிறகு  அது உன்னை பார்த்து  சிரிக்கும்.பணத்தைப்  பார்த்து போகாதே , அதுவும்  வெகு  சீக்கிரம்  உன்னை விட்டுப்  போகும் .அதனால் உன்னை சிரிக்க வைக்கும்  சிலரிடம் போ, அவர்களே  உன் வாழ்வில்  பிரகாசத்தை  தர முடியும்!

*                                              *                                                     *

கனவு  காண், ஆனால் அது வெறும்  கனவு தான் என்று மட்டும்  நினை .
உனக்கு என்னவாக  ஆகவேண்டுமோ  அதற்காக  பாடுபடு ,ஏன்  என்றால்  வாழக்கை  ஒருத்தருக்கு  ஒரு முறை  தான் , அதற்கான  சந்தர்ப்பமும்   ஒரு முறை தான் வரும் 

*                                            *                                                 *

 உன்னை யார்  எப்படியெல்லாம்   நடத்த  வேண்டும் என்று நினைக்கிறாயோ  அதே போல் அடுத்தவரையும்  நீ நினைக்க  வேண்டும். அதன் படி  செயல்  படு. தன்னை   போல் பிறரை  நினை. 

*                                                    *                                                                  *

அவசரத்தில்  விழுந்த  வார்த்தை விவாதத்தை கிளரும் சுடு  சொல் , வாழ்கையை  சுடும். சமயத்தில்  சொன்ன  சுகமான வார்த்தை  சுகத்தை  தரும் , பரிவான  வார்த்தை  பல  காயங்களுக்கு  மருந்தாகும்!

*                                               *                                *
வாழ்க்கைக்கு  வேண்டிய  நல்லதெல்லாம்  கிடைக்க  , 
எல்லா  சமய சந்தர்பங்களையும் ஒன்று  விடாமல் நழுவவிடாமல்  அள்ளிக்  கொண்டு  போகிறவர்கள்  தான்  சாமர்த்திய  சாலிகள்! .
அவர்கள்  போகும் பாதையை  வழி  வகுத்துப்  போகிறவர்கள்,அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்.

 *                    *                  *

Tuesday, August 16, 2011

உன் வாழ்க்கை



அன்பு , இதழ்களில்  ஆரம்பித்து , 
முத்தத்தில்  வளர்ந்து , 
கண்ணீரில்  முடிவடைகிறது . 

  பிறந்த போது நீ அழுதாய் ,
தாய் ஆனந்தக்  கண்ணீர் வடித்தாள்!

 நீ இறக்கும்  போது  , 
உன் இதழ்களில் புன்னகையும் 
உன்னைக்  சுற்றி  இருப்பவர்களின் 
கண்களில்  கண்ணீரும் . 
இது தான் வாழ்க்கையடா !

"கொஞ்ச" நாள் விருந்தாளி


"என்னடி அலமு , இது கூத்து , எப்பப்பாரு அந்த சனியன் பிடிச்ச   அலெக்ஸை மடியிலே  போட்டு ,கட்டிண்டு  கொஞ்சறதும் ,முத்தம்கொடுக்கிறதும்
ம் .......ம்..........ம்   பார்க்க  சகிக்கலை "


"என்னதான்  செல்லம்  கொடுத்தாலும்  அடுத்த  வாரம்  கல்யாணம்  பண்ணிண்டு  போறவ  இப்படியா  எல்லார் முன்னாலேயும்  கொஞ்சுவா?" . 
"எனக்கு  கொஞ்சம்  கூட  பிடிக்கலை , நீயும்  மாப்பிளையும்  சேந்து  இந்த  மஞ்சுவை குட்டிசுவரா  ஆக்கிட்டீங்க !"
   
"ஏம்மா இப்டி  புலம்பறே , இப்ப  என்ன  ஆச்சு?" "மஞ்சு  கல்யாணம் ஆகி சிங்கப்பூர்  போனா இதெல்லாம்  எப்படி  அவாத்துல முடியும் , எதோ  இங்க  இருக்கிற  வரைக்கும்  பகிங்கரமா கொஞ்சரா , போனா போறது  சிறுசுன்னு  விடாம , ஏன் இப்டி பதட்டம்  ஆகிறே?

"என்னவோ போ அலமு நீயாச்சு, உன் பொண்ணாச்சு, சிவா,சிவா ராம, ராமா."

"அம்மாநீ ஒன்னும் கவலைப் படாதே ,எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகி விடும், என்ன பண்றது, மஞ்சுவோட மாமியாருக்கும் ,மாமனாருக்கும் நாய்னாலேபிடிக்காது, அதான் அவ இருக்கிற வரைக்கும் கொஞ்சட்டுமேன்னு சும்மா இருக்கோம்.
*                                     *                                                 *                           *

Saturday, August 13, 2011

பெருஞ்சுமை

நீ வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதை காட்ட நிறய வழிகள் இருக்கு, உன் துன்பத்தையும்  துக்கத்தையும் மறைத்து சிரிக்கலாம்!

ஆனால் உண்மை என்ன என்று  நீயே அறிவாய்! .

மனச்சுமையை யாரிடமும் காண்பிக்க முடியாவிட்டால், அது பெரிய  சுமையாகதான் போய் முடியும்.

மனவருத்தம் ஏன் வருகிறது,எதனால் வருகிறது  என்று , பார்த்தால்,அதற்கு காரணம் நம்மிடமே இருக்கும். 

நம்முடைய ஆசா பாசங்களினாலேயே சந்தோசமும் வருத்தமும் வருகிறது.சந்தோசத்தை கொண்டாடுகிற நாம் வருத்தத்தை  மட்டும் மனசுக்குள்ளேயே பூட்டி வைக்கப் பார்க்கிறோம். 

சில சமயம் நம்முடைய அதிக எதிர் பார்ப்புகளே கூட நம்முடைய இயலாமைக்கு காரணமாக இருக்கும்.

  ஒன்றை  நன்றாக தெரிந்து வைத்துக்  கொள்ள வேண்டும் அது என்னவென்றால், நாம்  இழுத்து பிடித்து வைக்கும்   ஒவ்வொன்றுக்கும்  , சிலதை  விட்டுக்  கொடுக்க  நேரிடும் . அப்படி  கொடுக்கும்  போது  நமக்குள்   இருக்க  வேண்டியது  புரிந்து  கொள்ளக் கூடிய மனோபாவமே தவிர  மனதிடம்  இல்லை !

  தெரிந்தோ , தெரியாமலோ , நாம் எல்லோருமே  ஒரு விதத்தில் யாருக்காவது தேவதைப்போல் இருந்திருப்போம்.

 எவ்வளவு  கஷ்டங்கள்  வந்தாலும்  தனிமையில் யோசித்தால் ஒரு மூலையில் மன  சந்தோசம்  நம்முள்  இருக்கு ,அந்த சந்தோசத்தை யாராவது  வந்து  தரனும்  என்றுநினைக்கக் கூடாது . எதிர் பார்க்கவும் கூடாது. அதைத் தேடிபோனால் விடை கிடைக்கும். 

அந்த சந்தோசம் என்பதுகெட்டதிலும் நல்லதை நினைக்க சொல்லும்.
அப்பொழுதெல்லாம் நமக்கு கிடைத்த சின்ன சின்ன  சந்தோசங்களைக் கொண்டு வாழ்க்கை எனும் புஸ்தகத்தை புரட்டிப் பார்க்கணுமே தவிர,கடைசி பக்கத்தை புரட்டக் கூடாது.

     நல்லது  கிடைக்க  சில சமயம் நல்லதையும் கெட்டதையும்  இழக்க நேரிடும் .அப்பொழுதேல்லாம் நமக்கு தேவை  நம்முள் ஒரு சக்தி .

 நம்முடைய குறைவுகளை நம்முடைய   நிறைவுகளாக  மாற்றப்  பார்க்கணுமே தவிர சும்மா குறை சொல்வதில் ஒருஅர்த்தமும் இல்லை.. 

நாம் இஷ்டப்பட்டாலும் படாவிட்டாலும்  , வாழ்க்கை   ஓடிக்  கொண்டே  இருக்கும் அதனால் , பழைய  உலகத்திலிருந்து   வெளியே வந்து   புதியதை  அனுபவிக்க வேணும்.

இது உன் பெயரில் சத்தியம்!




என்னவளே , ஒன்றிரண்டு கள்ளி செடிகளுக்கு நடுவில் மலரும் 
 ஒரு அழகிய பூ நீ!என்னுடைய  கஷ்டமான மழைக்காலத்தில்,என் வீட்டு மரணம் என்னை அடிமைப்படுத்தும் போதும்,உயிருடன் உறவுகள் மடிந்து போகும் போதும் , நான் ஆடி மாசக் காற்றில் ஆடும் துணி போல ஆடிவிடுகிறேன்.

ஆனால்   உன்னை நினைத்துப் பார்க்கும் போதும் அதுவும்  நீ   அருகில் இருக்கும் போதும், எனக்கு எங்கிருந்து தான் மனத் தெம்பு வருகிறதோ ,
 நான் உன்னிடத்தில் என்னை தரும் போதும், எல்லாத்தையும் மறந்து சுகமாக உறக்கம் என்னை தழுவும்  போதும்தான் நான் நினைப்பேன் .

  உன்னை எக்காரணம் கொண்டும் யாருடனும் ஒப்பிட்டோ, சேர்த்தோ,சம்பந்தப் படுத்தியோ பேசுவதில்லை என்று. நான் உன்னை   இழக்க விரும்பலை,என்ன ஆனாலும் உன்னை நான்கை விட மாட்டேன். இது உன் பெயரில் சத்தியம்! 

என்று  சொல்லி நம் கதாநாயகன் தன்னுடைய பஞ்சுத் தலையணையை எடுத்து முத்தமிட்டான்!

Saturday, August 6, 2011

சின்னதுளிகள்




முகம்  பார்க்க  போனேன் , ஆனால் தெரிந்ததோ உன்முகம் ,
பெயர் எடுக்கப் போனேன், வந்ததோ  உன் பெயர், 
உன்னை அள்ளி முத்தமிட காத்திருந்தேன் ஒம்பது மாசம்.
இனிமேலும்  முடியாது கண்ணே.
வந்து விடு என்னிடத்தில் .
உன்னை வாரி அணைக்க கைகள் காத்திருக்கின்றன.
வருவாயோ என்செல்ல மகளே!
*                                       *                                          *                 
இருட்டறையில் தான் எத்தனை சுகம், எத்தனை நிம்மதி!
நான் என் எதற்காக வெளியே வரவேண்டும் தாயே சொல்லு?
நன்றி கெட்ட என் அப்பனையும் அவன் சல்லாபத்தையும் காணவா? 
வேண்டாம் தாயே நீபட்ட கொடுமை போதும், 
நான் சுகமாக இங்கேயே இருக்கிறேன்!
என்னை இங்கே வாழ விடு!
 *                                         *                                           *

கேடு கெட்ட மானிடனே எதற்காக இந்த நில அபகரிப்பு?
உனக்கு தெரியாதோ   எல்லாருக்கும் வேண்டியது ஆறடி நிலம் தான்!


கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்!

திரௌபதி ஐயோ பாவம் ,ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து கணவன் மார்களை வைத்து எப்படித்தான் சமாளித்தாள் என்று வியக்க வேண்டியதாக இருக்கு!

 எந்தக்  கணவனுடன் இரவைக் கழிப் பது என்று சீட்டு போட்டுப் பார்த்திருப்பாளோ? இல்லை அகர வரிசைப் படி சென்றிருப்பாளோ? 

அவளுக்குப் பிடித்தவன் அர்ஜுனன் ஆச்சே?அவனிடம் நிறைய  நாள் இருந்திருப் பாளோ? யாருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்திருக்கும்?

 எப்படி எல்லோருடனும் முகம் சுளிக்காமல் சமரசமாக இருந்திருப்பாள்?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்?

பாண்டவர்கள் எங்கெல்லாம் பிக்னிக் போயிருப்பார்கள்? ஷாப்பிங்கிற்கு எங்கே சென்றிருப்பார்கள்?பாஞ்சாலிக்கு புடவை நகையைத்தவிர என்ன வெல்லாம் வாங்கித் தந்திருப்பார்கள்? பாஞ்சாலிக்கு தேர் ஓட்டத் தெரியுமோ? 

பஞ்சபாண்டவர்களுக்கு வாக்குப் பட்டு, பாய் போட்டு, பஞ்சணையில் படுத்து முந்தானை விரித்து, கடைசியில் கிடைத்தது என்ன? 

 கணவன் மார்கள் பகடை சூதாட்டத்தில் தங்களை இழக்க, மனைவியையும் பணயம் வைத்து அவளை மான பங்கம் பண்ணும் அளவுக்கு கொண்டு வந்தது தான்.

அவளும் எல்லோரிடமும் கூவிகெஞ்சியும் எல்லோரும் கையை விரித்தும் தலை குனிந்தும் அவர்களுடைய கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தவே,  ஒரு விஷயம் நன்றாக தெரிந்து கொண்டாள்.

இந்தக்  கையாலாகத பஞ்ச பாண்டவர்களை விட ஆபத் பாந்தவன் ,அனாத ரக்க்ஷகன் கண்ணனையே நம்புவது என்று தான்.

அவனும் சளைத்தவன் இல்லை, சும்மா வந்தானா?
அவள் இரண்டு கைகளையும் மனத்தைக் காக்க மார் மேல் வைத்தது எப்படி போதும்? இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமேன்னு வரவே இல்லை!

அவளும் தன்னை மறந்து இரண்டு கைகளையும் விட்டு" நீ தான் '"என்று கைகளை கூப்பி அவனை வேண்டவே அவன் வந்து மானபங்கம் ஆகாமல் இருக்க அவள் வஸ்திரத்தை வளர்த்தான். 

அவர்கள் கையை விரித்ததற்கும்  கண்ணன் அவன் சக்தியை காட்டியதற்குமாக சேர்ந்து சபதம் எடுத்தாள்.

விரித்த கூந்தலை முடிவதில்லை என்று. !
அன்று ஆரம்பித்த சகாப்தம் தான்.

*                                                              *                                                                * 

இன்னும் சில வருடங்களில் நிறைய மகளிர் மார்கள் பாஞ்சாலி போல் கணவனை பங்கேற்கப் போகிறார்கள். அப்போது எந்த கணவனுக்கும் உரைக்காது,பெண்கள் சிசு ஹத்தியினால் எவ்வளவு கஷ்டம் ,நஷ்டமும் என்று!

இங்கே சீட்டு வேண்டாம், அகரவரிசை வேண்டாம்,கம்ப்யுட்டர் கணக்குப் போட்டு கால நிர்ணய செய்து ஸ்வைப் கார்ட் மூலம் ரூமிற்குள் போக அனுமதிக்கும்!

இந்தக் கால பாஞ்சாலிக்குப் பிடிக்கவில்லை என்றால், ஸ்வைப் கார்டை "டி  ஆக்டிவேட் "செஞ்சி விடலாம்.  

ஆகா பிற்கால பாஞ்சாலிகளே, உலகம் உங்கள் கையில் வரப் போகிறது , விட்டுக் கொடுக்காதீர்கள் உங்கள்  பொன்னான ,பெண் வாரிசுகளை !
உங்களுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர வேண்டாம், செய்வீர்களா தோழிகளே?


Friday, August 5, 2011

சின்னதுளிகள்

சின்னக்  குழந்தை வெண்ணிலவைப் பார்த்து கேட்டது,
வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?
என் வீட்டில் தஞ்சம் புகுவாயா?
வெண்ணை கொண்டு தருவாயா?
விட்டில் பூச்சி பிடிப்பாயா?

         *                                           *                                   *

ஜனங்கள் இரவு பகல் பார்க்காமல் எல்லாமே ஒரே போல் செய்கிறார்களே, பிறகென்ன, நீ தனி நான் தனி ?
நாம் என் ஒன்று சேரக்  கூடாதுன்னு?
இரவு பகலைப் பார்த்து கேட்டது.

*                                                      *                                                   *

மயக்கும் மாலை பொழுதில், 
அருகில் நீ இருந்தால்,
இனிக்கும் இன்ப இரவில் 
அவள் இருந்து போகட்டுமே?

*                                                            *                                                 *
கடவுளிடம் முறையாட போனேன்,
ஆனால் அங்கு கண்ட காட்சியோ வேறு.
என்னை மெய் மறந்து நின்றேன்,
ஆஹா!கல்யாணக் கோலத்தில் 
 முருகனும் வள்ளியும்,
விடைக்  கிடைத்தது  வேறென்ன ,
இரண்டாம் கல்யாணக் கொட்டு மேளம்  தான்!

*                                          *                                          *