Saturday, August 20, 2011

உன்னால் முடியும்!

வாழ்க்கையை தற்போதைக்காகவும் இன்றைக்காகவும்  வாழு.உன்னையே நம்பு. யாருக்காகவும் உன்  வாழ்க்கையை மாற்றாதே.நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ , அப்படியே வாழ்.

  நீஇன்னும் அதே சிறு பிள்ளையா இல்லை மாறி விட்டாயா?  நீ சிறு பிள்ளையாக இருந்த போது பட்டாம்பூச்சி பின்னாடியும் ,காத்தாடி பின்னாலேயும் ஓடி விளையாடினாய். வயது ஆக, ஆக உன்னில் மாற்றம் கண்டாய்.

எப்படி நீ ? இன்னும் அதே சிறு  பிள்ளையா இல்லை மாறி விட்டாயா?
 உனக்கே தெரிந்திருக்கும்   உன்  வீட்டு பெரியோர்கள்  உன்னைக் கண்டித்து  வழி வகுத்தார்கள்.  அதை சரிவர செய்து கொண்டு தப்பு நடந்த போது   .உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன்னிடம் சில நெறி முறைகளை எதிர்பார்த்தார்கள்  அதை  புரிந்துகொண்ட நீ   அவர்கள் உன்னைக் கண்டித்து வழி வகுத்த போது நல்லதற்கே என்று பொறுமையாக இருந்தாய் .அதனால் தான் நீஒரு நல்லமனிதனாக ஆனாய். உன்னிடம்   இருந்த சிறுபிள்ளைத் தனமும் தனமும் உன்னைவிட்டு போயேவிட்டது.

 இந்த மாற்றத்தில் உன்னை   பற்றிய நிறை குறைகளைஅறிந்திருப்பாய். அதே சமயம் மற்றவர்கள் உன்னைவிட அதிக பலசாலிகளாகவும் புத்திமான்களாகவும்தோன்றுவார்கள் .அதுரொம்ப நியாயமானதே.ஆனால் இதுவே உன்னை  அதற்காக   பலஹீனமாக ஆக்கக்கூடாது .

.அவர்கள் பலசாலிகளோ இல்லையோ நீ  அதற்காக ஒன்றும் செய்ய முடியாது .செய்வதும் உன்  கையில் இல்லை.அப்போது நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான் ,அது உன்னை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதும் உன்னில்மாற்றம்.கொண்டு வருவதும் தான்.
அதை இப்பொழுதே உடனே செய்.உன்னுள் இருக்கும் நெருப்பு பொறியை அணைய விடாதே !

 நீ சிறு வயது முதல் இப்பொழுது வரை செய்த நல்லது, கெட்டது எல்லாவற்றையும்  ஒரு  முறை அலசிப்  பார்த்து  கெட்டதைக் களைந்து விடு. நீ செய்த  முயற்சிகளும், முடிந்த செயல்களும் உன்னை உற்சாகப் படுத்தும் .உன்னை நினைத்து பெருமைப் படு. உன்னைப் பற்றிய உண்மையும் தெரிய வரும். உன் மனது தூய்மை அடைந்து  விடும் .  உன்னுள் இருக்கும்  உந்து சக்தியை வெளிக் கொண்டு வந்து உன்னையே நம்பு.

No comments:

Post a Comment