Saturday, August 27, 2011

கடி ஜோக்ஸ் -1

கிரேசி மோகன் ஜோக்ஸ் ...

முன்னேபின்னே செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும் ?

உடல்: இப்படியெல்லாம் கேள்வி கேட்டு ஏற்கனவே செத்த என்னை ஏன்யா
மறு புடியும் சாவடிக்கிறீங்க! செத்ததுக்கு அப்பாலே நாம் போகறது  சுடுகாடா
இல்லே ஏற்காடா ?
எனக்கு எப்படிப்பா தெரியும்? 

 ஏம்ப்பா உனக்காச்சும் தெரியுமா?

உயிர்:  லட்சணமா  போனமா கம்னு கெடக்கறத  வுட்டுட்டு, போற நேரத்துலே அபசகுனமா கேள்வி கேட்டு ஏன் என் உசுரே வாங்கறே ,தோ பார் நீ மண்ணுலேருந்து  வந்தே மண்ணுக்கு போறே ,நான் விண்ணுலேருந்து வந்தேன் விண்ணுக்கு போறேன் அங்க வின்னுலே சுடுகாடு ,சுடாத காடு ஒரு மண்ணும் கெடையாது !"

ஆன்மா: என்ன எழவுடா இது! அங்கே புள்ளே அப்பனுக்கு கொள்ளி வச்சு காரியம் பண்ண ரெடியா மடியா சுத்திகிட்டு இருக்கான் , நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்கிறீங்களே! 

நல்லா கேட்டுக்குங்க ..யாரும் சாவரது கெடையாது .. கொஞ்ச நாள் சேர்ந்து இருந்தீங்க இப்போ பிரியபோறீங்க.

பிரிவோம் சந்திப்போம் அம்புடுதேன் ஒ கே வா ?

உடல் உயிர் கோரஸாக ..நீ சொன்ன கரீட்டதான் இருக்கும் அண்ணாத்தே!!!!!!!!!!!!!!!!!!!!!!!



 நாய்க்கு  நாலு  கால்  இருக்கலாம் .ஆனா  அதல  லோக்கல்  கால் , STD கால், ISD கால் , missed கால் கூட  பண்ண முடியாது !
 
  ..........................................................................................................................                                                                   
 கங்கை  ஆத்துல  மீன்  பிடிக்கலாம் .... காவேரி  ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா  ஐயர்  ஆத்துல மீன் பிடிக்க  முடியுமா ?
......................................................................................................................
  திருவள்ளுவர்  1330 குரல்  எழுதி இருந்தாலும்   , அவரால  ஒரு  குரலில்  தான்  பேச  முடியும் .
......................................................................................................................
 "என்ன  தான் உன்  தலை  சுத்தினாலும் , உன் முதுகை  நீ  பாக்க  முடியுமா ?"
   ............................................................................................................................................

   மீன்  பிடிக்கிறவன   மீனவன் -ன்னு  சொல்லலாம் . நாய்  பிடிக்கிறவன  நாயஅவன் - ன்னு சொல்ல  முடியுமா?
..............................................................................................................................

  என்ன தான் ஒருத்தன்  குண்டா  இருந்தாலும் , அவன  துப்பாக்கிகுள்ள  போட  முடியாது. 
................................................................................................................................

  தேள்  கொட்டினா  வலிக்கும் ... பாம்பு  கொட்டினா வலிக்கும்.. முடி  கொட்டினா வலிக்குமா?
....................................................................................................................

  ஸ்கூல்  டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ... காலேஜ்   டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்... ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க  முடியுமா?
 
..................................................................................................................................
பொங்கலுக்கு  கவர்ந்மேன்ட்ல  லீவு  குடுப்பாங்க ... ஆனா இட்லி  தோசைக்கு  குடுப்பாங்களா  ?
......................................................................................................................

  கோலம்மாவில்  கோலம்  போடலாம் . கடலை   மாவில்  கடலை  போட முடியுமா?!
 
..................................................................................................................................
 
   லைப்  ல  ஒண்ணுமே  இல்ல  நா  போர்  அடிக்கும்.... தலைல   ஒண்ணுமே இல்லைனா  களர். அடிக்கும் .
....................................................................................................................................

 பரம்பரைக்கு  உக்காந்து  சாப்பிட  பைசா  இருந்தாலும் ... பாஸ்ட்  பூட் கடைலே  நின்னுகிட்டு  தான்  சாப்பிடணும்.
.......................................................................................................................................!

  இன்ஜினியரிங் காலேஜ்ல  படிச்சு  எஞ்சினீர்  ஆகலாம் , பிரெசிடென்சி  காலேஜ்ல படிச்சு ப்ரெசிடென்ட்  ஆக  முடியுமா?
........................................................................................................................................
ஆட்டோக்கு   ஆட்டோன்னு  பேர்  இருந்தாலும் manual  தான் டிரைவ்  பண்ண முடியும்...
...........................................................................................................................................
 
தூக்க   மருந்து  சாப்பிட்டா தூக்கம்  வரும் ... ஆனா...இருமல்  மருந்து சாப்பிட்டா இருமல்  வராது!
......................................................................................................................................

 வாழ  மரம்  தார்  போடும் ! ஆனா அத  வச்சி  ரோடு  போட முடியுமா?
........................................................................................................................................

  'ஹான்ட் வாஷ் 'ன்னா  கை  கழுவறது , 'Face வாஷ்'ன்னா முகம்  கழுவறது , அப்போ  'பிரைன்  வாஷ்' ன்னா பிரைன கழுவறதா ?
....................................................................................................................

  டீ  கப்ல டீ  இருக்கும் . அப்ப வேர்ல்ட்  கப்ல  வேர்ல்ட்  இருக்குமா ?
...............................................................................................................................
  செல்  மூலமா  எஸ் எம் எஸ் அனுப்பலாம் , ஆனா
எஸ் எம் எஸ் மூலமா  செல்ல  அனுப்ப  முடியுமா?
.....................................................................................................................
பால்கோவா பாலில்  இருந்து  பண்ணலாம் , ஆனா ரசகுல்லாவ  ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?
....................................................................................................................
    பல்  வலி  வந்தா  பல்ல  புடுங்கலாம் ....ஆனா.. கால்  வலி வந்தா கால  புடுங்க  முடியுமா?! இல்ல  தலை  வலி  வந்தா, தலைதான்  புடுங்க  முடியுமா ?
.......................................................................................................................

No comments:

Post a Comment