Friday, August 5, 2011

கடைசி விமோசனம்!





விலை  வாசிக்குப் பயந்து குடும்பத்துக்கு விமோசனம் தேடி போனான்!

கிணற்றில் விழலாம் என்றால் தண்ணி இல்லை!  

கயறில் தொங்கலாம் என்றால், கயிறு வலிமை இல்லை!

மருந்து குடிக்கலாம் என்றால் மருந்து சுத்தம் இல்லை!

மண்ணெண்ணெய் ஊற்றி சாகலாம் என்றால் மண்ணெண்ணைக்கு பெரிய க்யு !

காஸ் சிலிண்டரில் சாகலாம் என்றால் அது விலை அதிகம்!

நதியில் குதித்து போயிடலாம் என்றால் நதியே சடுகுடு ஆடுகிறது !

கடைசியில் ஒரு அரசியல் வாதியாக ஆக முடிவெடுத்தான்.

எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் வந்தது!


ஒரு கை வேண்டும் !





லஞ்சம் வாங்க இரு  கை, 
கொடுக்க ஒரு கை,
கொலை செய்ய இரு கை, 
  நீதி வழங்க ஒரு கை,
 துகில் உரிக்க இரு  கை , 
திருட  ஒருகை,
கழுத்தை திருக ஒரு கை, 
தாலி கட்ட இருக்கை,
கழுத்தை திருக ஒரு கை,
உணவு  உண்ண ஒரு கை,
தம்பட்டம் அடிக்க இரு கை, 
கொள்ளி வைக்க ஒரு கை!......

..

கைகளைக் கொடுத்த அந்த ஆண்டவன் அந்தக் கைகளைக் கட்டுபடுத்தவும் ஒரு கை கொடுத்திருக்கலாமே !

அததுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கவே இருக்கு !




நன்றாக பெருக்குகிறதேன்னு துடைப்பத்தை வரவேற்பரையிலா வைக்கிறோம்,இல்லையே?


வப்பாட்டி அழகாக இருந்தாலும் சபையில் அவள் சம்பந்தம் செல்லாது! 


நடக்க உதவுகிரதேன்னு செருப்பை தலையில் தூக்கி நடக்க நாம் என்ன பரதனா? 


 கடவுளுக்கு போட்ட பூ வாடும் வரை தான் கடவுளிடம், பிறகு அதன் இடம் குப்பை தொட்டிதான் .



நெற்றி விசாலமாக இருக்கேன்னு பொட்டை எங்கே வேணுமானாலும் வைக்க முடியுமா?

   

Sunday, July 31, 2011

சிறு துளிகள்



குட்டைக் கை தெரியாமல் இருக்க
கைக் குட்டையால் குட்டிக் கை போட்ட
கைக் குட்டைக்காரி ,
உன் கையால் குட்டு கிடைக்க , 
காத்துக்  கிடக்கும் கிட்டூர்  கிட்டு !

     *                                       *                                              

வாழைப்பழம்  வழுக்கி  கீழே விழாதே 
என்று சொன்ன வழுவூர் வசந்தா,
வாழ்க்கையில் வழுக்கி விழுந்துடாதேன்னு 
வனஜாவுக்கு வார்ன்பண்ண மறந்துட்டா !

           *                                            *                                      *
பட்டாம்பூச்சியை  பார்க்கப்போன 
பரிமளாவுக்கு பத்திக்கொண்டு 
வந்தது பக்கத்துவீட்டு படா ஜொள்ளு பார்டி 
பரமசிவ தாத்தாவைப் பார்த்து!


            *                                           *                                         *
குடிமகன்  குமாரசாமி குடிபோதையில் 
குப்பம்மாவின் குடிசைக்குள் புகுந்து 
கஞ்சி குடித்துக் கொண்டிருந்த குமுதாவை
கோடாலியால் கொலையுயிரும் குத்துயிருமாய் 
குத்திவிட்டான் தன மனதில் குடி கொள்ள மறுத்ததற்கு!


Saturday, July 30, 2011

ஒரு வரிக் கதை


கணவன் கண்ணாயிரம் கஷ்டப்பட்டு சமைப் பதை காண முடியாத கனிமொழி, கணவனுக்காக கடைக்குப்  போய்  கை நிறைய திடிர்மிக்ஸ்,அரிந்தகறிகாய்கள் ,சப்பாத்தி இடும்  மஷின்,எலக்ட்ரிக் குக்கர் சகிதம் கண்ணாளனுக்காக கலிபோர்னியாவிற்கு கால் போட்டு   பேசி கட்டி அனுப்பினாள்!


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சிறு துளிகள்



விழிக்குத் துணை என் ஒரு கண்ணாடியும் கண்களும்,
வழிக்குத் துணை என்செருப்பும் குடையும் ,
வயிற்றுக்குத் துணை ரொட்டியும் சப்ஜியும்
பழிக்குத் துணை என் பக்கத்துக்கு வீட்டு காரனும் அவன் பசங்களும்!

              *                                  *                                  *                                      
உன்னை நான் பார்த்த போது நீ மென் மலராக இருந்தாய் ,
நீ என்னை  பார்த்தபோது நான்  மெய்மறந்து இருந்தேன் , 
ஆனால் உன் அப்பன் பார்த்த போது பிணமாக நின்றேன்!

           *                                       *                                      *

வாசலில் நின்றேன் வழி மேல் விழிவைத்து 
ஜன்னலருகில் நின்றேன் கால் மேல் கால் போட்டு 
வந்தான் போஸ்ட்மேன் சைக்கிள் மணி அடித்து 
கொடுத்தான் கையில் 'அட்ரெஸ் நாட் பௌன்ட்'

              *                                    *                                     *  

பச்சை புடவை கட்டி நீஅசைந்தாட,
மழைத் துளிகள்  உன்மேல் பரவசமாக,
பச்சைக் கிளி போல் பாட்டு பாட ,
உன்னடியில்  நான் நின்றேன் ,
பாழும் மழைக்கு ஒதுங்கி! 

           *                                          *                                 *

Sunday, July 17, 2011

சுண்டு விரல் வைத்யம்


யாமினிக்கு  இது இரண்டாவது பிரசவம் , முதல் பையன் அனிருத் ஸ்கூல் போவதால் பிறந்த வீட்டுக்கு போகாமல் அவள் அம்மா வந்து அவளுடனேயே இருந்தாள்.

திடிரென்று ட்யு டேட்டுக்கு இரண்டு நாள் முன்பாக பனிக்குடம் உடைந்திடவே அவளை நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தாச்சு.

நர்ஸ் ரெம்யா, "சிஸ்டர் இந்த பேஷண்டை உடனே லேபர் வார்டுக்கு கொண்டு போங்க.""டாக்டர் அரவிந்துக்கு சொல்லி அனுப்புங்க ,இல்ல,செல்லுல கூப்பிடுங்க'"

யாமினியை லேபர் ரூமுக்கு கொண்டு போயி பெய்ன்வர ஊசியும் போட்டாச்சு.

யாமினி வலி தாங்காம கத்தவே, தயார் பண்ற ஹெட் நர்ஸ் சோதனை பண்ணப் போது குழந்தையின் சுண்டு விரல் மட்டும் வெளியே வந்ததைப் பார்த்து அதிர்ந்து  விட்டாள்.


இதற்குள் அரவிந்தும் அங்கு வரவே விஷயம் அறிந்த அரவிந்த் இந்த சுண்டு விரலை எப்படி உள்ளே தள்ளுவதுன்னு மண்டையைப் போட்டு ஒடசுன்ன்டுஇருந்தான். திடிர்னு என்ன தோனித்தோ  தெரியலை,

  யாமினியைப்பார்த்து , "உங்க வீட்டுகாரர்  ஸ்மோக் பண்ணு வாரா?

"ஆமாம்  சார் அதுக்கும் இதுக்கும் ஏதாவது? "  ன்னு இழுத்தாள்.

அங்கே இருந்த நர்சுங்களுக்கு ஒண்ணுமே புரியலை, எதுக்காக டாக்டர் இந்த கேள்வியைக்கேட்டார்னு .


"சிஸ்டர், யாமினி வீட்டுக்காரர் கிட்டே இருந்து ஒரு சிகரட் வாங்கிட்டு வாங்க"

யாமினி பயந்து போய், "குழந்தைக்கு ஏதாவது பிரச்னையா டாக்டர்?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல,யாமினி, நீங்க கொஞ்சம் ஒத்துழைத்தால்  போதும் , எல்லாம் சரி பண்ணிடலாம்"


சிஸ்டரும் கொண்டுவர, அதை பத்தவச்சி குழந்தை சுண்டு விரல் கிட்டே எடுத்துண்ண்டு போன உடனே   சுண்டு விரல் தன் இச்சையாக உள்ளே போச்சு !


பின்ன என்ன? எல்லாருமா சேர்ந்து கை தட்டி, கை கொடுத்தார்கள் !