Saturday, July 30, 2011

சிறு துளிகள்



விழிக்குத் துணை என் ஒரு கண்ணாடியும் கண்களும்,
வழிக்குத் துணை என்செருப்பும் குடையும் ,
வயிற்றுக்குத் துணை ரொட்டியும் சப்ஜியும்
பழிக்குத் துணை என் பக்கத்துக்கு வீட்டு காரனும் அவன் பசங்களும்!

              *                                  *                                  *                                      
உன்னை நான் பார்த்த போது நீ மென் மலராக இருந்தாய் ,
நீ என்னை  பார்த்தபோது நான்  மெய்மறந்து இருந்தேன் , 
ஆனால் உன் அப்பன் பார்த்த போது பிணமாக நின்றேன்!

           *                                       *                                      *

வாசலில் நின்றேன் வழி மேல் விழிவைத்து 
ஜன்னலருகில் நின்றேன் கால் மேல் கால் போட்டு 
வந்தான் போஸ்ட்மேன் சைக்கிள் மணி அடித்து 
கொடுத்தான் கையில் 'அட்ரெஸ் நாட் பௌன்ட்'

              *                                    *                                     *  

பச்சை புடவை கட்டி நீஅசைந்தாட,
மழைத் துளிகள்  உன்மேல் பரவசமாக,
பச்சைக் கிளி போல் பாட்டு பாட ,
உன்னடியில்  நான் நின்றேன் ,
பாழும் மழைக்கு ஒதுங்கி! 

           *                                          *                                 *

No comments:

Post a Comment