karaimodumalaigal

Saturday, August 27, 2016

'கற்பூரம் கொடிய விஷம்!


வீட்டில்
வைப்பதை தவிருங்கள்!!'

எனது நண்பரின் நண்பர் மகனுக்குநடந்தது. இதனால், அவரது வாழ்க்கைகடந்த முப்பது நாட்களாக
​ ​
ரோலர்கோஸ்டர்’ போலமாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது
என்று அவரே சொல்கிறார் இதோகேளுங்கள்:
​​
“வீட்டில் சாமி போட்டோவிற்குமுன் கற்பூரம் வைத்திருந்தோம்.
அதை ‘கல்கண்டு’ என்று நினைத்துமூடிவைத்திருந்ததை எப்படியோ
திறந்து ஒரே ஒரு துண்டுகற்பூரத்தை கடித்து
​ ​
தின்றுவிட்டான். அதை உடனடியாகபார்த்த நான் கடித்திருந்த பாதியைவாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’-என்று மனைவி கூகுளில் பார்த்துதெரிவித்த அடுத்த நிமிடமே, என்
​ ​
மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.
அது நான்கு நிமிடம் நீடித்தது.
உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக்கேட்டேன். அவர்கள் வந்தபோது,
இழுப்பு சரியாகிவிட்டது.முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தைதூங்கினால் எல்லாம்சரியாகிவிடும் என்று
​ ​
சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருகஆரம்பித்துவிட்டன. உடனே
'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு
​ ​
குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும்‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப்
பொருள் கடுமையானபாதிப்புகளை உருவாக்கக்
கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்)
மூலம் அறிந்த எமர்ஜென்ஸிமருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த
சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி
​ ​
குத்தும் போது குழந்தை எந்த
விதமான எதிர்ப்பையும் காட்டாததுஎங்களுக்கு அடிவயிற்றைக்
கலக்கியது. அதாவது அவன்
​ ​
சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன்
மோடு’க்கு
​ ​
சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல்
சென்டரின்’ குழந்தை நல அவசரசிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ்
ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து
​ ​
இறங்கும்போது “அப்பா!” – என்று
ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும்அது எனக்குத் தெம்பூட்ட
தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப்பொருளின் மூன்றாம் நிலை
கோமாவுக்கு கொண்டுசென்றுவிடும்.
அதை என் மகன்
​ ​
குறைந்த அளவு சாப்பிட்டதால்
​ ​
கோமா நிலைக்கு செல்லாமல்
​ ​
தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமானஅதிஷ்டமேயானாலும் அதுஎல்லோருக்கும் வாய்ப்பதில்லை.தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனேசிகிச்சைக்கு கொண்டுசென்றதாலும் இறையருளால் எங்கள்கண்மணியை எங்களால் காக்கமுடிந்தது.
அதுவும் கிட்டத்தட்ட 16
​ ​
மணி நேர மருத்துவப்
​ ​
போராட்டத்துக்குப் பின்தான்
​ ​
அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடியவிஷப் பொருளை வீட்டில் வைப்பதைதவிருங்கள். குழந்தைகளுக்குஎட்டா
​​
மல் பாதுகாப்பாக வையுங்கள்.அப்படி குழந்தைகள் ஏதாவதுசாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்..உடனே தாமதிக்காமல் தகுந்தமருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு
​ ​
செய்யுங்கள். பகிருங்கள் எங்கேனும் ஒர் குழந்தை காப்பாற்றபடலாம்...
Posted by mathangi at 3:30 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்

அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்:-
காயத்திரி(சகல காரியங்கள் வெற்றி அடைய)
ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்
துர்கை
(ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹேகன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
 

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
சிவதூதி
ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
பாலா
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்
அம்ருதேஸ்வரி தேவி
(ஆயுள் ஆரோக்கியம் பெற)
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
வாக்பலா
(பேச்சுபிழை சரியாக)
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
சர்வமங்கள
(நல் பயணத்திற்கு)
ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
கன்னிகா பரமேஸ்வரி
(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
காமேச்வரி
(மங்களம் உண்டாக)
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
காமதேனு
(கேட்டது கிடைக்க)
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
காளிகா தேவி
(கேட்ட வரம் கிடைக்க)
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்
வாராஹி
(நினைத்தது நிறைவேற)
ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்
குலசுந்தரி
(சொத்து, கவுரவம் அடைய)
ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
சந்தோஷி மாதா
(திருமண தடை நீங்க)
ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
கவுமாரி தேவி
(சக்தி பெற)
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
கவுரிதேவி
(தியானம் சித்தி அடைய)
ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
கங்காதேவி
(ஞாபக சக்தி பெற)
ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்
சாமுண்டி
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
சித்ரா
(கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்
சின்னமஸ்தா
(எதிரிகளை வெல்ல)
ஓம் வைரேசான்யை ச வித்மஹே
சின்னமஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
சண்டீஸ்வரி
(நவகிரக தோஷங்கள் விலக)
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கௌரீஸித்தாய தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
ஜெயதுர்கா
(வெற்றி கிடைக்க)
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்
ஜானகிதேவி
(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)
ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஓம் அயோநிஜாயை வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஜ்வாலாமாலினி
(பகைவரை வெல்ல)
1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
ஜேஷ்டலக்ஷ்மி
(மந்திர சக்தி பெற)
ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
நீலஜேஷ்டாயை தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
துவரிதா
ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
தாராதேவி
ஓம் தாராயை ச வித்மஹே
மனோக்ரஹாயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
திரிபுரசுந்தரி
ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்
ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்
மஹா திரிபுரசுந்தரி
ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்
தனலட்சுமி
(செல்வம் பெற)
ஓம் தம்தனதாயை வித்மஹே
ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்
பராசக்தி
(வாக்குவன்மை பெற)
ஓம் தசவனாய வித்மஹே
ஜ்வாமாலாயை ச தீமஹி
தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்
பிரணவதேவி
ஓம் ஓம்காராய வித்மஹே
பவதாராய தீமஹி
தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்
தரா
ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
சர்வ சித்தை ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்
தூமாவதி
ஓம் தூமாவத்யை ச வித்மஹே
சம்ஹாரின்யை ச தீமஹி
தன்னோ தூம ப்ரசோதயாத்
நீலபதாகை
(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
நீளா
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
ஸ்ரீ பூ சகை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ(மகாலட்சுமி)
ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீதேவி
ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்
தேவி பிராஹ்மணி
ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
சூலினிதேவி
(தீய சக்திகளிலிருந்து காக்க)
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்
சரஸ்வதி
(கல்வியும், விவேகமும் பெருக)
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்
லட்சுமி
(சகல செல்வங்களையும் அடைய)
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபந்தாய ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் பூ ஸக்யைச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தவாசினி வித்மஹே
பத்மலோசனீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
சப்தமாத்ருகா தேவி
ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்
பகமாளினி
(சுக பிரசவத்திற்காக)
ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
பகளாதேவி
ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்
ஓம் குலகுமாரை வித்மஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்
பகளாமுகி
ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்
ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி தீமஹி
தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்
பாரதிதேவி
ஓம் நாகாராயை ச வித்மஹே
மஹா வித்யாயை தீமஹி
தன்னோ பாரதீ ப்ரசோதயாத்
புவனேஸ்வரி தேவி
ஓம் நாராயந்யை வித்மஹே
புவநேஸ்வர்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
பூமா தேவி
(வீடு, நிலம் வாங்க)
ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தராஹ் ப்ரசோதயாத்
பைரவி தேவி
ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ பைரவீ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயை வித்மஹே
பைரவைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
மகாமாரி
(அம்மை வியாதி குணமடைய)
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
மஹா வஜ்ரேஸ்வரி
(பிரச்சனைகளில் தீர்வு காண)
ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
மகாசக்தி
(மந்திர சக்தியில் வல்லமை பெற)
ஓம் தபோமயை வித்மஹே
காமத்ருஷ்ணை ச தீமஹி
தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்
மஹிஷாஸுரமர்தினி
(பகைவர்கள் சரணாகதி அடைய)
ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே
துர்காதேவ்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
மகேஸ்வரி
(சர்ப தோஷம் நீங்க)
ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே
மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்
மாதங்கி
(அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)
ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
மாத்ரு (கா)
ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே
ஸப்தரூப ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
மீனாக்ஷி
(சகல சவுபாக்கயங்களை பெற)
ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
சுந்தபப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்
முக்தீஸ்வரி
ஓம் த்ரிபுரதேவி வித்மஹே
முக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
யமுனா
ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே
தீர்தவாசினி தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்
ராதா
(அனுகிரகஹம் பெற)
ஓம் விருஷபானுஜாயை வித்மஹே
கிருஷ்ணப்ரியாயை தீமஹி
தன்னோ ராதிகா ப்ரசோதயாத்
ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே
விஸ்வஜனன்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்
வாணி
(கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் நாதமயை ச வித்மஹே
வீணாதராயை தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்
வாசவி
ஓம் வாசவ்யை ச வித்மஹே
குசுமபுத்ர்யை ச தீமஹி
தன்னோ கண்யகா ப்ரசோதயாத்
விஜயா
(வழக்குகளில் வெற்றி பெற)
ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
வைஷ்ணவி தேவி
(திருமண தடை நீங்க)
ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்
ஓம் சக்ரதாரிணீ வித்மஹே
வைஷ்ணவீதேவீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
சியாமளா
(சகல சவுபாக்யங்களும் கிடைக்க)
ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே
க்லீம் காமேஸ்வரி தீமஹி
தன்னோ சியாமா ப்ரசோதயாத்
ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்
துர்கா தேவி
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
வனதுர்கா
ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
மகாசக்த்யை தீமஹி
தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்
ஆஸூரி துர்கா
ஓம் மகா காம்பீர்யை வித்மஹே
சத்ரு பக்ஷிண்யை தீமஹி
தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்
திருஷ்டி துர்கா
ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்
ஜாதவேதா துர்கா
ஓம் ஜாதவேதாயை வித்மஹே
வந்தி ரூபாயை தீமஹி
தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத்
வனதுர்கா
ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி
தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்
சந்தான துர்கா
ஓம் காத்யாயண்யை வித்மஹே
கர்பரக்ஷிண்யை தீமஹி
தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்
சபரி துர்கா
ஓம் காத்யாயண்யை வித்மஹே
கால ராத்ர்யை தீமஹி
தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்
சாந்தி துர்கா
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஜயவரதாயை தீமஹி
தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்
Posted by mathangi at 3:30 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தெய்வீக துளிகள், மெயிலில் வந்தவை

​அறுபதாம் கல்யாணம் திருக்கடையூரில் செய்வதன் தாத்பரியம்...

-
​
​
திருக்கடையூர் காலனை ஸம்காரம் செய்து அமிர்தம்(அமிர்தகடேஸ்வரர்) அதாவது மரணமற்ற நிலையினைத் தரக் கூடிய ஸ்தலம் என்பது கோட்பாடு. இதற்கும் அறுபதாம் கல்யாணத்திற்கும் அருமையான சம்மந்தம் இருக்கிறது...மனிதன் உலகாய பற்றுகளில், பந்த பாசங்களில் மூழ்கி பிறவியின் நோக்கத்தை மறந்து போகிறான். எனவே அவனுக்கு அதை நினைவுபடுத்துவதற்காகவே அந்த ஸ்தலத்தில் அறுபதாம் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள்.
ப்ரம்மச்சரியம் முடிந்து அறுபது வயது வரை கிரஹஸ்தனாக வாழ்ந்தாயிற்று. இனி கணவனும் மனைவியும் கூடி #வானப்ரஸ்தம் எனும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொல்வதே அறுபதாம் கல்யாணம்.
பதி இறைவன், பசு ஆன்மா, இடையே தளையாக விளங்குவது பாசம் எனும் பற்றுகள்தான். இந்த பாசம்தான் பிறவியை நீளச் செய்கிறது. அதனால்தான் எமன் கையில் பாசக் கயிறு இருக்கிறது, அதை வைத்துதான் அவன் உயிர்களைக் கவர்ந்து செல்கிறான் என்கிறார்கள்.
அந்த பாசத்தை அறுத்து விட்டால் பதியும் பசுவும் இணைந்து விடும். பற்றுகளை அறுத்தவனைக் கண்டு காலன் பயப்படுவான். ஆனால், பற்றுகளை அறுப்பது அவ்வளவு எளிய காரியமில்லையே ?
என்ன செய்வது ? அதற்கான உபாயமே இந்த வானப்ரஸ்தம். அதாவது பற்றுகளை மடை மாற்றுவது. உலகாய பற்றுகளை இறைவனை நோக்கித் திசை திருப்புவது. கணவனும் மனைவியும் கூடி புண்ணிய க்ஷேத்திரங்கள், பலப்பல புண்ணிய தீர்த்தங்களுக்கெல்லாம் சென்று தங்கள் மனதை உலகாயத்திலிருந்து மெல்ல மெல்ல இறைவனை நோக்கி செலுத்த வேண்டும். அதற்கு அவர்களுக்கு இருபது வருடம் அவகாசம் தரப்படுகிறது.
அதற்குப் பிறகு #எண்பதாவது_கல்யாணம் நடக்கும். இனி நீங்கள் இருவரும் சந்நியாசம் மேற்கொள்ளத் தயாராகி விட்டீர்கள் என்பதை நினைவூட்டுவதாகும் அது. இப்படிப்பட்ட நம்பதியர்களின் நிலை என்பது ஒரு பூரணமான நிறைவான நிலையாகும். அவர்கள் மனம் இறை சிந்தனையில் நிலைத்திட இனி எந்தத் தடையுமில்லை.
அவர்கள் எமனை வென்றவர்களாகி விடுகிறார்கள். அவர்களுக்கு மரணமில்லை. எனவே அவர்கள் #இறைநிலை எனும் அமிர்தமுண்டவர்களாகி விடுகிறார்கள். முக்தி அவர்களுக்கு முன்பே தன் வாசலைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இத்தகையவர்களுக்காக இறைவன் எமன் எனும் மரண தத்துவத்தை சம்ஹாரம் செய்வதாக விளக்கப்படுகிறது. இறைவனின் பாதத் துளிகள் எனும் அமிர்தம் அவர்களுக்கு மரணமிலாத நிலையைத் தந்து விடுகிறது. மரணம் என்றால் அங்கு மறுபிறவி உண்டு. பற்றறுத்து இறை சிந்தனையில் நிலைத்திருப்பவர்களுக்கோ மரணமில்லை. அவர்கள் இறைநிலையில் தங்களை இணைத்துக் கொண்டு அந்த ஜோதியில் கலந்து விடுகிறார்கள். எனவே இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பொதுவாகவே மனிதன் உணர்வு மனதின் பிடியில் சிக்கி, புலன் இன்பங்களில் மயங்கி காலனின் வயப்பட்டு விடுகிறான். உள்ளே உணர்வறு மனம் என்று ஒன்று இருப்பதையே பெரும்பாலானவர்கள் உணருவதில்லை. அத்தகைய உணர்வறு மனதைத் தூய்மைப்படுத்தி, அதை உணர்வு மனதோடு இயைந்து செயல்பட வைத்தால் அதுவே நிறைவான வாழ்க்கை எனப்படும். அத்தகைய நிறைவான வாழ்வை வாழந்து நிறைவடைவதே நம் பிறவியின் நோக்கம் என்பதை நினைவூட்டுவதற்கே இத்தகைய சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய சடங்குகள் மூலம் தம் பிறவியின் நோக்கத்தை உணர்ந்த தம்பதியர்கள், அதற்கான முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற் கொண்டு தூய வாழ்க்கையும், போதுமென்ற மனமும் கொண்டு புலன் இன்ப நாட்டத்தை தவிர்த்து, மன அடக்கமுடையவர்களாக தெய்வீக வாழ்க்கை வாழும் பொழுது இல்லறத்தில் இருந்து கொண்டே ஞானியர்களாக வாழும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அத்தகையவர்கள் தனக்குப் பின்னால் வரும் சந்ததியினர்களுக்கு ஒளியாகவும், வழியாவும் வாழ்ந்து காட்டி விட்டு அந்தப் பேரொளியில் ஐக்கியமாகி விடுகிறார்கள்....

ஓம்சிவாயநம...​

Posted by mathangi at 3:23 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..

------
 
விழுந்தால் அழாதே . . .எழுந்திரு 
 
தோற்றால் ......புலம்பாதே . . .போராடு 

கிண்டலடித்தால் கலங்காதே . . .மன்னித்துவிடு 
 தள்ளினால் தளராதே . . .துள்ளியெழு 
     நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .நிதானமாய் யோசி
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .எதிர்த்து நில் 
நோய் வந்தால் நொந்துபோகாதே . .நம்பிக்கை வை 
 கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .கலங்காமலிரு 
உதாசீனப்படுத்தினால் உளறாதே . .உயர்ந்து காட்டு 
 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .அடைந்து காட்டு 
 மத்தத்தில் நீ பலமாவாய் 
 சித்தத்தில் நீ பக்குவமாவாய் 
உன்னால் முடியும் .உயர முடியும் . . .
  உதவ முடியும் . . .
  உனக்கு உதவ நீ தான் உண்டு
உன்னை உயர்த்த நீ தான்நம்பு 
 உன்னை மாற்ற நீ தான்  முடிவெடு
  நீயே பாறை.நீயே உளி .
 நீயே சிற்பி . . .நீயே செதுக்கு
       நீயே விதை .நீயே விதைப்பாய்      
     நீயே வளர்வாய்  ..நீயே அனுபவிப்பாய் 
நீயே நதி.. நீயே ஓடு ...நீயே பயணி    ..
 நீயே பலம் ...நீயே சக்தி  ....நீயே ஜெயிப்பாய் 
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே
​​
Posted by mathangi at 3:23 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

" ஏற்றமும் , இறக்கமும் உள்ளது வாழ்க்கை


​
" ஏற்றமும் , இறக்கமும் உள்ளது வாழ்க்கை என உணர்த்தியது "...
👉 *பரமபதம்* 👈

" எண்ணிக்கையில் கூட்டலையும் , பெருக்கலையும் விளையாட்டாய் கற்றுக் கொடுத்தது "...
👉 *கிட்டிபுள்* 👈
" வெட்டி வெளியில் எறிந்தாலும் , மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிக் கொடுத்தது "...
👉 *தாயம்* 👈
" அடுக்கியது சரித்து , மீண்டும் அடுக்கி அழித்தலும் , ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது "...
👉 *ஏழுகல்* 👈
" வேறு வழியில்லை என்ற நிலை வரும்வரை போராடு என பொட்டில் செதுக்கியது "...
👉 *சதுரங்கம்* 👈
" ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும் , ஒளிந்து தனிமை நேரப் பெருமையையும் பெற்றுத் தந்தது "...
👉 *கண்ணாமூச்சி* 👈
" அடுத்தவர்க்கு சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் என நெறி ஊட்டியது "...
👉 *நொண்டி* 👈
" இருக்குமிடத்தில் எடுத்து , இல்லாவிடத்தில் நிரப்பும் குணம் , மனம் பதித்தது "...
👉 *பல்லாங்குழி* 👈
" நண்பன் உயரம் போக முதுகும் , தோளும் கொடுத்து குனிந்து , பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது " ...
👉 *பச்சைகுதிரை* 👈
அதனால் தானோ என்னவோ அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை ...
-------
இறைவன் இருக்கின்றானா...
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?” குரு கேட்டார்.
சீடன் பதில் சொன்னான்.
“இறைவனை அறிவதுதான் ஆன்மிகத்தின் நோக்கம்.”
“அப்படியா?”
“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள். அப்படித்தானே இருக்க முடியும்?”
“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”
“இல்லை. ஆனால் முயன்றுகொண்டிருக்கிறேன்.”
“நல்லது. உண்மையிலேயே இறைவனை அறிந்துகொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”
சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.
“கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”
“எதனால் சந்தேகம் வருகிறது?”
“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”
“நல்லது. எப்போது நீ உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். ஆண்டவனைத் தெரிந்துகொள்ள விரும்புகிறாயா!”
“ஆமாம் குருவே.”
“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”
“ஆமாம் குருவே.”
“அன்புள்ள சீடனே, நீ இறைவனைத் தெரிந்துகொள்வதற்கு ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.”
“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”
“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அறிய முடியாது. ஆனால் இறைவன் உன்னை அறிவான்.”
“இது குழப்பமாக இருக்கிறதே.”
“ஒரு குழப்பமும் இல்லை. ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”
“ஆம்.”
“ஆனால் ராஜாவை அறிய வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்.
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.
உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். நடக்குமா?”
“நடக்கும் குருவே.”
“இப்போது ராஜாவும் இவனைத் தெரிந்துகொண்டார். இவனும் ராஜாவைத் தெரிந்துகொண்டான். இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் பார்ப்பது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவான்.
எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு. சரிதானே.”
“சரிதான் குருவே.”
“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் பலிக்கும். போய் வா.”
சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...
நம்
எண்ணங்களும்
செயல்களும்
பேச்சுகளும்...
யாரையும்
எந்த விதத்திலும்
பாதிக்காமல்...
நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...
நற்செயல்கள்
செய்து வருவோமெனில்...
இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை...
அவன் நம்மை தேடி வருவான்...
Posted by mathangi at 3:17 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

கடி ஜோக்ஸ்

 *யார், யார் எப்படி பேசுவார்கள்*
*கிரிக்கெட் வீரர்* - "ஓவரா" பேசுவார்
*போட்டோகிராபர்* - "டெவலப் பண்ணி" பேசுவார்
*ரவுடி* - "அடிச்சுப்" பேசுவார்
*ஹோட்டல் சர்வர்* - "சூப்"பரா பேசுவார்
*வக்கீல்* - "பீஸ்புல்லா"  பேசுவார்
*ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்* – "காரசாரமா" பேசுவார்
*ஐஸ் விக்கிறவர்* – "குளிரக் குளிரப்" பேசுவார்
*டெய்லர்* – "கட் பண்ணிப்" பேசுவார்
*பூக்கடைக்காரர்* - வார்த்தையை "அளந்து" பேசுவார்
*டயட்டீஷியன்* - "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்
*பேங்க் மேனேஜர்* – "இண்ட்ரஸ்டா" பேசுவார்
*பியூட்டீஷியன்* – "அழகாப்" பேசுவார்
*கசாப்புக் கடைக்காரர்* – "வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்
*ஸ்வீட் கடைக்காரர்* – "இனிக்க இனிக்கப்" பேசுவார்
--------------------
கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''
டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''
2. "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"
3.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.
4.பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா:  பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
5(கல்யாண மண்டபம்)
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"
6.ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.
 
7. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!
8 . ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MY CROW SOFT
9 . ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.
10 . ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.


-----------------------

: நம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும், ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?
ஃபேன்: நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனு என்ன இப்டி சுத்தவிடுற!
_
டிவி: ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க!
_
தலையனை: நாளக்காவது குளிடா! நாத்தம் கொடல புடுங்குது!
_
ஃப்ரிட்ஜ்: சாம்பார் புளிக்கொழம்பு மீந்து போன காய்கரி இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா!
_
ட்யூப் லைட்: நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்ன போடுறியா!
_
கண்ணாடி: தயவு செஞ்சு குளிக்காம வந்து ஏ முன்னாடி நிக்காத!
_
மிக்ஸி: மூடிய மூடாமத்தா ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்.
_
வால்க்ளாக்: இப்ப என்ன பாத்து என்ன கிளிக்க போற!
_
வாசிங்மெஷின்: நாயே நாயே! பாக்கெட்ல காசு பணம் இருக்கானு செக் பண்ண மாட்ட!
_
மிதியடி: என்னத்தடா மிதிச்சுட்டு வந்த, மரியாதையா என்ன தாண்டி அப்டியே ஓடிப்போய்டு!
_
சேவிங் ட்ரிம்மர்: இப்ப அங்க என்ன வளந்து தள்ளிடுச்சுனு போட்டு சொரண்டி எடுக்குற!
_
மொபைல் சார்ஜர்: வாய தொற அப்டியே அதுல கொஞ்சோ சார்ஜ் ஏத்தி விடுறேன்!
_
பாத்ரூம் விளக்கமாறு: தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்க!
_
அயன்பாக்ஸ்: அப்டியே கொஞ்ச மூஞ்சிய காட்றது!
_
சர்ட் ஆன்கர்: வெண்ண மகனே, ஓ சட்ட காலர கொஞ்ச பாரு! ஓ ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு....-
Posted by mathangi at 3:16 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

குருப்பெயர்ச்சி: எந்த ராசிக்கு எவ்வளவு மார்க்?!

Conversation opened. 1 read message.
குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?
பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும்.
இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி (2.8.16) செவ்வாய்க்கிழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், நேத்திரம், ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், புதன் ஹோரையில், இரண்டாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில் ஆந்தை துயில் கொள்ளும் நேரத்தில், தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் காலை மணி 9.24-க்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து உபய வீடான கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 1.9.17 வரை கன்னி ராசியில் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.
இந்த குருப்பெயர்ச்சியால், எந்த ராசி எப்படி இருக்கும், எந்த ராசி எத்தனை மதிப்பெண்கள் பெறும், என்பதைப் பார்க்கலாம். இந்த துர்முகி வருடம் ஆடி மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் குறித்து விவரிக்கிறார் 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்.

மேஷம் 55/100

எதையுமே உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும் என்றாலும், அதற்காக அஞ்ச வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

ரிஷபம் 80/100

எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மிதுனம் 60/100
யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுபவர்கள், நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பிரச்னைகளை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம்.

கடகம் 70/100

உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள், நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.
சிம்மம் 85/100

காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்கள் நீங்கள். இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.
கன்னி 52/100

கலாரசனை உள்ளவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.
துலாம் 70/100

நடுநிலைமை தவறாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றியதுடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் 83/100

கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு 58/100

வளைந்து கொடுக்கத் தெரியாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

மகரம் 90/100

மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மன இறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம் 73/100

மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும், பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மீனம் 87/100

இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், தன்னம்பிக்கை கூடும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும்.  பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.







​​

-


Posted by mathangi at 3:15 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

இறைவன் நம்மை தேடி வருவார்..."


புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல
​​
முடியுமா?”
புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”
“அப்படியா?”
“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”
“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”
“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”
“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”
சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.
“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”
“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”
“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”
“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”
“ஆமாம் குருவே.”
“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”
“ஆமாம் குருவே.”
“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”
“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”
“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து  அடைவான்.”
“இது குழப்பமாக இருக்கிறதே.”
“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”
“ஆம்.”
“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.
உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”
“நடக்கும் குருவே.”
“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.
எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”
“மிகவும் சரிதான் குருவே...”
“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”
சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...
நம்
எண்ணங்களும்...
உணர்வுகளும்...
சிந்தனைகளும்...
சொல்களும்...
செயல்களும்...
நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...
நல்லது செய்யுமெனில்...
இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை...
இறைவனே நம்மை தேடி வருவார்...​
Posted by mathangi at 3:08 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

கன்னிகாதானம் என்றால் என்ன?


வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!
இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. 'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனயும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.
ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!
ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் உணர்த்துகிறது.

தொகுத்தளித்தவர் ,  திரு.Pazhaveri Sriraman அவர்கள்......!!!
Posted by mathangi at 3:07 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )

​வறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.


(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்)
பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் பாண்டுரங்கனிடமும் அவரது அடியார்களிடமும் மிகுந்த பக்தியோடு சேவை செய்து வந்தாள்.

அன்று கீர்த்தனை முடிந்ததும் பாகவதர்களுக்காக உணவு சமைக்க ஜனாபாய் இல்லத்திற்கு விரைந்து வந்தாள். அடுப்பிற்காக வைத்திருந்த வறட்டிகளை அடுத்த வீட்டுக்காரி அபகரித்திருந்தது அவளுக்கு தெரிந்தது. ஜனாபாய் வறட்டிகளைக் கேட்க அந்த பெண் மறுக்க இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வந்துவிட்டது. அங்கு வந்த நாம தேவர் அதிர்ச்சி அடைந்தார்.

"உன் வறட்டிகளை நான் எடுக்கவில்லை" என்று அந்த பெண் மறுக்க, "இல்லை நீதான் எடுத்திருக்கிறாய், அதை நான் நிரூபிப்பேன்" என்று ஜனாபாய் தந்தையிடம் உரைத்தாள்.

அடுத்த வீட்டிலிருந்து எல்லா வறட்டிகளும் கொண்டுவரப்பட்டன. ஜனாபாய் இறைவனிடம் "பாண்டுரங்கபிரபு, தீன தயாளா, அடியார் தொண்டில் ஈடுபடும்போதும், வறட்டி தட்டும்போதும் 'விட்டல், விட்டல்' என்று உன் நாமத்தை நான் ஜெபிப்பது உண்மையானால் நீ அதை நிரூபித்து அருள வேண்டும்" என்று வேண்டினாள்.

ஜனாபாய் வறட்டிகளை ஒவ்வொன்றாக கீழே போட்டார். ஜனாபாயின் வறட்டிகள் 'விட்டல், விட்டல்' என்ற திருநாம ஒலியுடன் கீழே விழுந்தன. மற்றவை வெறும் சத்தத்தை மட்டும் எழுப்பின.

கூடியிருந்த மக்கள் "ஆஹா என்னவோர் அற்புதம், ஜனாபாயின் வறட்டிகள் கூட விட்டலின் நாமத்தை கூறுகின்றனவே" என்று வியந்தனர்.

ஜெய், பாண்டுரங்க விட்டல் பிரபு கீ ஜெய்!​
Posted by mathangi at 3:06 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தெய்வீக துளிகள், மெயிலில் வந்தவை
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Large Visitor Map

Feedjit

My Blog List

  • Lokabhiramam
    చెట్లు, మొక్కలకు నొప్పి తెలుస్తుందా?
    3 days ago
  • This Iyer is a little funny ...
    2024 a Recap
    1 year ago
  • THINNAITALKS
    நான் கண்ட பாரதி-2
    10 years ago
  • IndusLadies - Global Online Community of Indian Ladies

Labels

  • அறுசுவை சமையல் குறிப்புகள் . (17)
  • கரை மேல் தெறித்த அலைத் துளிகள் (68)
  • கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது ) (846)
  • கரை மேல் விழுந்த அலைத்துளிகள்[ padithadil pidithadhu ] (269)
  • கரையை தொட்ட அலைகள் (21)
  • கரையைத் தேடும் மீன்கள் (1)
  • சமையல் குறிப்புகள் (51)
  • சின்ன கதைகள் (49)
  • சேர்ப்புகள் (5)
  • தெய்வீக துளிகள் (1052)
  • மகா பெரியவா (1229)
  • மருத்துவக் குறிப்புகள் (243)
  • மெயிலில் வந்தவை (2563)

Pages

  • Home

Total Pageviews

Followers

Blog Archive

About Me

My photo
mathangi
medium built and height, with the features intact, stern looking female with inbuilt humour.
View my complete profile
Picture Window theme. Theme images by compassandcamera. Powered by Blogger.