Saturday, August 27, 2016

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..

------
 
விழுந்தால் அழாதே . . .எழுந்திரு 
 
தோற்றால் ......புலம்பாதே . . .போராடு 

கிண்டலடித்தால் கலங்காதே . . .மன்னித்துவிடு 
 தள்ளினால் தளராதே . . .துள்ளியெழு 
     நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .நிதானமாய் யோசி
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .எதிர்த்து நில் 
நோய் வந்தால் நொந்துபோகாதே . .நம்பிக்கை வை 
 கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .கலங்காமலிரு 
உதாசீனப்படுத்தினால் உளறாதே . .உயர்ந்து காட்டு 
 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .அடைந்து காட்டு 
 மத்தத்தில் நீ பலமாவாய் 
 சித்தத்தில் நீ பக்குவமாவாய் 
உன்னால் முடியும் .உயர முடியும் . . .
  உதவ முடியும் . . .
  உனக்கு உதவ நீ தான் உண்டு
உன்னை உயர்த்த நீ தான்நம்பு 
 உன்னை மாற்ற நீ தான்  முடிவெடு
  நீயே பாறை.நீயே உளி .
 நீயே சிற்பி . . .நீயே செதுக்கு
       நீயே விதை .நீயே விதைப்பாய்      
     நீயே வளர்வாய்  ..நீயே அனுபவிப்பாய் 
நீயே நதி.. நீயே ஓடு ...நீயே பயணி    ..
 நீயே பலம் ...நீயே சக்தி  ....நீயே ஜெயிப்பாய் 
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே
​​

No comments:

Post a Comment