Friday, August 26, 2011

பழமொழிகள்


 பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது ., சீதை சிரிச்சு கெட்டாள்.

  எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.

கட்டுப்போனைக்கு  சிவராத்ரி விரதமா ?

உழக்கு மிளகு கொடுப்பானேன் ,ஒளிந்திருந்து மிளகு சாறு  குடிப்பானேன்? 

சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் தின்கிரதாம் .

  வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல. 



பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை பொத்தல் இலை என்கிறான்.

  உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.

  கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .வயிறே வைகுண்டம் .

கொடுக்கிறது கோத்திரத்தில் கிடையாது, வாங்குறது வம்சத்தில் உண்டு.

  சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .

  குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .

  வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச்  செல்வம் முருங்கை.

  பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்.

  தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்.

உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல .

அடிங்கரதுக்கு பொண்டாட்டிய க் காணோம் ,ஆறாவது குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாமாம்.

  கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?

  ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான் !

சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயைகட்டிகொண்டு எதிரே வந்தாளாம் . 

  பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !

  ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே.

  செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?

கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .

துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?

திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?

ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .

பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.

குறையச் சொல்லி , நிறைய அள.

அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.

அறைக்காசை ஆயிரம் பொன்னாக்கிரவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.

ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு
நாளாச்சுது .

ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேறு
நாளாச்சுது.


1 comment: