Saturday, December 13, 2014

ஒரு பெரிய கலவரம்

பாஸ் நேத்து நைட் ஒரு பெரிய கலவரம் இங்க ஒரு நூறு பேரு இருப்பானுங்க 

என்னை ரவுண்ட் பண்ணிட்டாங்க நான் ஒரு ஆளு கொஞ்சங்கூட 

பயப்படலை .

என்னா ஆயிடும் இன்னைக்கு மோதி பார்த்துடுவோம்கிற முடிவுல நானும் 

ரெடி ஆனேன் பூரா பயபுள்ளைகளும் என் முன்னாடி வந்து நின்னானுங்க,நான் 

சொன்னேன்'டேய் நான் அடிக்க போறது ஒரு அடிதான் அந்த அடியை 

வாங்கின நீ ஓரே அடியா போயிடுவேடான்னு பஞ்ச் டயலாக்கெல்லாம் 

சொன்னேன் பயபுள்ளைங்க கேட்கிற மாதிரி தெரியலை முதல்ல ஒருத்தன் 

முன்னாடி வந்தான் ஒரே அடிதான் சத்துன்னு அங்கனக்குள்ளேயே அவன் 

சுருண்டு விழுந்துட்டான் அதக்கபுறமா ஆரம்பம் ஆச்சு நம்ம கச்சேரி அடிக்கிற

அடில ஒவ்வொருத்தனும் தெரிச்சுபோய் விழுந்தானுங்க லெப்டுல ஒரு 

போடு ரைட்டுல ஒரு போடு அதிலேயே பத்து பயலுக காலி ஒருத்தனை நடு 

நெஞ்சில ஒரே மிதி அங்கேயே அவன் ரத்தம் கக்கி செத்துட்டான் ஒருத்தன் 

காலை பிடிச்சி கிர்ன்னு தலை மேல தூக்கி சுத்தி தரையில அடிச்சேன் அவன் 

மூளை சிதறிப்போய் விழுந்துச்சு என்னோட இந்த வெறிதனமான 

வேட்டையை பார்த்துட்டு மீதி இருக்கிறவனுங்களெல்லாம் மிரண்டுடானுங்க

 உடனே அவன் ஆளுங்களுக்கு சிக்னல் குடுத்திட்டான் அங்கிட்டு இருந்து ஒரு

 ஆயிரம் பேர் வந்தானுங்க நான் பார்த்தேன் சரி இனிமேலும் பொருக்க 

முடியாது ஆயுதத்தை எடுத்திட வேண்டியதான்ட்டு ஓடிபோய் பீரோவை 

திறந்தேன் இவனுங்களும் என்னை விடாம துரத்திட்டே வந்தானுங்க உள்ள 

இருந்து பாக்ஸை எடுத்தேன் அதை பார்க்கவும் கொஞ்ச பயலுங்க பயந்து 

திரும்பி ஓடினாங்க நான் மெதுவா அதை எடுத்து பத்த வச்சேன் கொஞ்சம்

 கொஞ்சமா தீ பரவுச்சு நெருங்கி போச்சு தீஉடனே ப்பூ ஊதி அணைச்சிட்டு 

பக்கத்துல வச்சிக்கிட்டேன் உடனே வந்தவனுங்கெல்லாம் தொப் தொப்புன்னு

 விழுந்தானுங்க நான் அப்பாடா இனிதான் நிம்மதின்னு போய் படுத்து 

தூங்கினேன் பின்ன என்ன பாஸ் ஒரு மனுஷன் எத்தனை கொசுவைத்தான் 

கையில அடிச்சு சாகடிக்கிறது அதான் கொசுவர்த்தியை பத்த வச்சிட்டு போய் 

படுத்துக்கிட்டேன்.



No comments:

Post a Comment