Friday, December 12, 2014

கடி ஜோக்ஸ் 121

என் மாமியாருக்கு புதுசா பல் செட் வாங்கி குடுத்தேன்..."

"அவங்க மேல உனக்கு அவ்வளவு அன்பா ?.."

"ம்ஹும்..!.. பல் இல்லாததால், சண்டை போதும் போது அவங்க பேசறது 

தெளிவா புரியலே...அதனாலேதான்...!...".
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


பாதசாரி: சார் வாகனங்கள் போககூடாது என்று போர்டு இருக்கு. நான் இந்த

வழியாக போகலாமா?

போலீஸ்: நீங்க போகலாம் வாகனங்கள் தான் போகக்கூடாது. ஏன்

கேட்கிறீங்க?

பாதசாரி: என் பேர் மயில்வாகனம்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு முறை ரயிலில் மும்பை ,டெல்லி & சென்னையை(தமிழ்) சேர்ந்த 3 

பேர்களுக்கு நடுவில் ஒரு மிகபெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.....யார் மிக 


பெரிய பணக்காரர் என்று?மூவரும் அதை எதாவது ஒரு விதமாக சாதித்து 


காட்டவேண்டும் என்ற வெறியில் இருந்தனர்......
முதலில் மும்பை வாசி தன்னுடைய பர்ஸில் இருந்து ஒரு 500 ரூபாய்

நோட்டை சுருட்டி பற்றவைத்து சிகரெட்டை(Cigarette) குடிக்க ஆரம்பித்தார்.!!!
அடுத்து டெல்லி வாசி தன்னுடைய பர்ஸில் இருந்து ஒரு 1000 ருபாய் நோட்

எடுத்து அதை சுருட்டி பற்ற வைத்து சிகேரேட் போல் குடிக்க ஆரம்பித்தார் !!!
பின் இருவரும் சென்னை வாசியை(தமிழர்) நோக்கி திரும்பி பார்க்க

ஆரம்பித்தனர் ...!!
சென்னை வாசி தன்னுடைய briefcase ஐ திறந்தார் ..அதில் இருந்து ....
ஒரு செக்(cheque) புக் ஐ திறந்து அதில் 5 லட்சம் என்று எழுதி அவரும் அதை

சுருட்டி பற்றவைத்து அவர்களை போல் குடிக்க ஆரம்பித்தார் ...பின்

சொன்னார்.
"நண்பர்களே மிகபெரிய பணக்காரன் என்பவன் யார் தெரியுமா..தனக்கு எந்த

நஷ்டமும் இல்லாமல் போட்டியில் ஜெயிக்கிறவன் தான் என்று"
நீதி : என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் தமிழனிடம் challenge 

செய்யாதீர்கள் 

........................................................



சண்டை போட்டா கோபத்தை நான் சாப்பாட்டு மேல தான் காமிப்பேன்

...யார் கூட சண்டை போட்டேனோ அவங்க சாப்பாட்டையும் சேர்த்து 

சாப்பிட்டுருவேன்.
.............................................................



கணவன்: "இந்த புது சட்டை உன்னை மாதிரியே இருக்கு..!.."

மனைவி: "ஹ்ம்...அவ்வளவு அழகாகவா இருக்கு..?.."

கணவன்: "இல்லை..அவ்வளவு 'லூசா' இருக்கு..!.."

.....................................................................................................
"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததிலிருந்து ரொம்பத்தான்

அலட்டிக்கிறார்னு சொல்லறியே..ஏன்..?.."

"சூடா டீ கொடுத்தா கூட அதுக்குள்ளே தெர்மாமீட்டரை வச்சு பார்த்துட்டுதான்
குடிக்கிறார்..!.."
.............................................................
.
"மாப்பிள்ளைக்கு அவங்க அப்பா மேலே ரொம்ப பாசம்.."..

"அதுக்காக, வரதட்சணையா அவங்க அப்பாவுக்கு ஒரு பைக் கேட்கிறது

ரொம்ப ஓவர்..!.."

..........................................................................

"சென்னையில் காக்காவுக்கு பிடிச்ச இடம் 'வட சென்னை' தான்.."

"ஏன் அப்படி..?.."

"அதுலே தானே 'வட' இருக்கு.."
................................................

நோயாளியை நன்கு சோதித்த டாக்டர், "உங்க உடம்பு ரொம்ப மோசமாய்

இருக்கு. நீங்க நல்லா ஓய்வு எடுத்துக் கொள்ளணும். ஊட்டி

கொடைக்கானல்ல போய் இரண்டு மாதம் தங்கிட்டு வாங்க. பழங்கள் 

காய்கறிகள் நன்றாகச் சாப்பிடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு 

நாளைக்கு ஒரு கிளாசுக்கு மேலே மது அருந்தக் கூடாது" என்றார்.

இரண்டு மாதம் கழித்து டாக்டரிடம் வந்தார் அந்த நோயாளி."இப்பொழுது 

எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் டாக்டர்".
"
நன்றாகத் தேறி விட்டேன் டாக்டர். ஆனால் நீங்க சொன்னதுல ஒன்றைச்

செய்யறதுதான் எனக்கு ரொம்பத் துன்பமா இருக்குது" என்றார் நோயாளி.

"என்ன அது?"

"நாள்தோறும் ஒரு கிளாஸ் மது குடிக்கச் சொன்னீர்களே. என்னால் முடியலே. 

குமட்டிக்கிட்டு வருது. எப்படியோ துன்பப்பட்டுக் குடிக்கிறேன்".
...............................................

தண்ணில இருந்து ஏன் மின்சாரம்எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
.

No comments:

Post a Comment