Friday, December 12, 2014

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிந்தனை துளிகள்....

எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ

 ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் 


பைத்தியமா? இல்லை மற்றவர்களா?

அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் 

இருக்காதவரை.ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை 

நிறுத்த கூடாது.

 கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு 

முட்டாள்கள்.
 கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.

A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z

அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை

மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.

 ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.
மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு 

தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான்

பயன்படுத்தப்படும்.

ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே

இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.
தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள்.

காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று

இன்கம்டாக்ஸ்.
சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய்

அல்ல.

 கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும்,

மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.
நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் 

நடக்காததால்தான்.

 சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை

வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான

பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான்

தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.
உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள

முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு

இருந்ததாவென அறிய ஆவல்.

வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.
 உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே

வழிகாட்ட சிறந்த வழி.

நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.

நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.

எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய்

வந்துவிடுகின்றதே.

No comments:

Post a Comment