Sunday, November 23, 2014

"கண்ணா! முதலில்எனக்கு ஒரு விளக்கம்

கிருஷ்ணன்
பகவான் கிருஷ்ணனின்குழந்தைப்பருவம்முதலே, அவருக்குப் பணிவிடைகள்செய்து,தேரோட்டி, பல்வேறு சேவைகள்புரிந்தவர்உத்தவர். இவர் தனதுவாழ்நாளில்,தனக்கெனநன்மைகளோவரங்களோகண்ணனிடம்கேட்டதில்லை.துவாபரயுகத்தில்,தமது அவதாரப் பணி முடித்து விட்டநிலையில்,உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்

"உத்தவரே, இந்தஅவதாரத்தில் பலர் என்னிடம் பலவரங்களும்,நன்மைகளுமபெற்றிருக்கின்றனர்.ஆனால்,நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும்ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,எனது அவதாரப் பணியை முடிக்கநினைக்கிறேன்" என்றார்.தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,
சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்,புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கானகாரண, காரியங்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீநடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப்புரியாதவிஷயங்கள்பலஉண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறியஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில்எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீபாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள்ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும்நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட,முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்இந்தச் சூதாட்டம்என்று தடுத்திருக்கலாம்அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம்அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன்செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்;தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்தண்டனையாக,அதோடு அவனை விட்டிருக்கலாம்.தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ
சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும்
திருப்பித் தருகிறேன்என்று சவால் விட்டான்துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீகசக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள்தருமனுக்குச் சாதகமாகவிழும்படி செய்திருக்கலாம். அதையும்செய்யவில்லை. மாறாக, திரௌபதியின்துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும்நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்ஒருவன், குலமகள் சிகையைப்பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர்முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்தபிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்தநிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீசெய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக்கேட்டார் உத்தவர்.இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;மகாபாரதம் படித்துவிட்டு நாம்அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம்கேட்டிருக்கிறார் உத்தவர்.பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம்உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்மநியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன்தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர் ஏதும்புரியாது திகைத்து நிற்க, கண்ணன்தொடர்ந்தான்."துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது.ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான்வைக்கிறேன். என் மாமா சகுனி,பகடையை உருட்டிச் சூதாடுவார்என்றான்துரியோதனன். அது விவேகம்.தருமனும்அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என்சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்பகடைக்காயை உருட்டுவான்'என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும்நானும் சூதாடியிருந்தால், யார்ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும்எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான்போட முடியாதா? போகட்டும். தருமன்என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளமறந்துவிட்டான்என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால்,அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால்சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்தவிஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும்தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும்சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்கவேண்டும்என்றுவேண்டிக் கொண்டான்.என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு,அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான்அங்கு வரக் கூடாதெனஎன்னிடமே வேண்டிக்கொண்டான.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக்கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில்காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்,அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும்வைத்து இழந்தபோது, அவர்களும்துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள்கதியை எண்ணி நொந்து கொண்டும்இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிடமறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்  பிடித்தபோது, அவளாவது என்னைக்கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து,வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய,என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும்தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்எனக் குரல்கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடையமானத்தைக் காப்பாற்ற அப்போதுதான்எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்சென்றேன். அவள் மானத்தைக் காக்கவழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்னதவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்."அருமையான விளக்கம் கண்ணா!அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை.உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"என்றார் உத்தவர்."கேள்" என்றான் கண்ணன்."அப்படியானால், கூப்பிட்டால்தான் நீவருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட,ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவவரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன்."உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்மவினைப்படி அமைகிறது. நான்அதை நடத்துவதும் இல்லை; அதில்குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும்சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில்நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!அதுதான் தெய்வ தர்மம்" என்றான்."நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள்செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக்குவித்து, துன்பங்களை அனுபவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?"என்றார் உத்தவர்."உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின்உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள்உணரும் போது, உங்களால்தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச்செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத்தெரியாமல் சூதாடலாம் என்று தருமன்நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.நான் சாட்சி பூதமாக எப்போதும்,எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன்உணர்ந்திருந்தால், இந்த சூதாட்டநிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும்அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில்ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்!எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும்,பிரார்த்தனை செய்வதும்,அவனை உதவிக்கு அழைக்கும் ஓர்உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும்அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்சாட்சி பூதமாக அருகில்நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்றமுடியும்? இந்த தத்துவத்தைதான்பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.அர்ஜுனனுக்காகத் தேரைச்செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன்இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

No comments:

Post a Comment