Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 70


'"உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது."

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவன தூக்கி துப்பாக்கில போட்டு சுட முடியாது.

தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்...முடி கொட்டினா வலிக்குமா???????


ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.காலேஜ் டெஸ்ட்ல பிட் 

அடிக்கலாம்.blood டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா???????

வாழ மரம் தார் போடும்.ஆனா அத வச்சு ரோடு போட முடியுமா????


பால்கோவா பாலில் இருந்து பண்ணாலாம்,ஆனா ரசகுல்லா ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?????
.................................................. ....................................

....
பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.!


எதுக்குடி என்னை அடிச்ச??

உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன்.

யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!

அய்யயோ என்ன மன்னிச்சிருங்க

சரி சரி விடு.

சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் பூரிக்கட்டையால் அடி விழுந்தது 

இப்ப எதுக்குடி அடிச்ச??

நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!
.............................................


ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான் .

ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.

அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,''எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்,'' என்றான்.
அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,கஞ்சன் சொன்னான்,''என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.''
..................................

..
..ஆங்கிலேயர் - எனக்கு பத்து குழந்தைகள் உள்ளன. இன்னும் ஒரு குழந்தை இருந்தால் கால்பந்து அணியை தொடங்கிரலாம்.

அமெரிக்கர் - எனக்கு 14 குழந்தைகள் உள்ளனர். இன்னும் ஒன்று இருந்தால் ரக்பி டீமே தயார் பண்ணிடலாம்.

அராபியர் - எனக்கு 17 மனைவிகள் உள்ளனர். இன்னும் ஒரு மனைவி இருந்தால் கோல்ப் கிளப்பே ஆரம்பிச்சுடலாம்.

இந்தியர் - எனக்கு 19 குழந்தைகள் உள்ளனர். இன்னும் ஒரு குழந்தை இருந்தால் ஒரு கட்சியே ஆரம்பிச்சிடலாம்..
.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
----------------------------------------------------------------------------------
 .இரண்டு நண்பர்கள் பாரில்…

கண்ணா: சே!. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?

விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.

கண்ணா: ஆஆ.. அப்புறம்?

விநோத்: அப்புறம் சொன்னா.. “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு
-----------------------------------------------------------------------------------

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்….

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…

வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??
---------------------------------------------------------------------------------

.கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது…

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?
-----------------------------------------------------------------------------------

மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
-----------------------------------------------------------------------------------

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
-----------------------------------------------------------------------------------

.மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
1.உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா… அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”

..................................................................................


.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?

நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்

காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே...
எப்படி செத்தாரு?

விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்ல...

 காதலி : உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"

காதலன் : "சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
.....................

No comments:

Post a Comment