Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 68

கணவனோட பிறந்தநாள் அன்று மனைவியை அழைத்துக்கொண்டு அவன் தியேட்டருக்கு படம் பார்க்க போனான்..அதுவும் "மூன்றாம் உலகம்".. என்ற நச் படத்துக்கு.. 
.
"..ஹே ஜானி..!! என்ன மேன்.!! இன்னிக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி இருக்கே.!!! என்ன விஷேசம்..!!" என்றார் வாசலில் டிக்கட் குடுப்பவர்..
.
"..அப்போ..!! நீங்க அடிக்கடி இங வர்ர ஆள் போல இருக்கே.!!".. என்று மனைவி சந்தேகத்தை ஸ்டார்ட் பண்ணினாள்.
.
"...ஐயையோ..!! இல்ல சுதா..!! அவன் என்கூட படிச்சவன்..!! இப்போ தியேட்டர்ல வேலை பாக்குறான் டா..! அவ்ளவுதான்..!".. என்று மனைவியை கூல் பண்ண பார்த்தான்..
.
"..அடடா..! வீணாக சந்தேக பட்டுடோமே"..ன்னு மனைவி சமாதானமாகி , அவருடன் உள்ளே சென்றாள்..
.
"..பாப்கார்ன் வாங்கிட்டு போகலாம்".. என்று முடிவுபண்ணி அவன் காண்டீனை நோக்கி சென்றான்..மனைவியும் கூட பின்னாலே போனாள்..
.
"..என்ன ஜானி..!! சில்லறை இல்லையா..!! எப்ப பாரு 500 ரூபா நோட்டா தந்து எங்களை சங்கட படுத்துறே..". என்று பாப்கார்ன் விற்பவன் சொன்னதும் மனைவிக்கு நட்டுகிட்டது.. கணவன் கொலைவெறியோடு காண்டீன் காரனை முறைத்துவிட்டு இடத்தை காலிசெய்தான்.
.
மனைவி கேட்பதற்கு முன்னாலேயெ அவனே முந்திக்கொண்டு.. "..அப்டி பார்க்காதே சுதா..!! எங்க ஆபீஸ்ல பியூனா வேலை பார்த்தான்னு சொன்னேன்ல..! அவந்தான் இப்பொ இஙக வேலை பார்க்கிறான்"....அப்பிடி இப்பிடின்னு சமாளிக்க பார்த்தான்..
.
மனைவிக்கு லைட்டா சந்தேகம் வர ஆரம்பித்தது..."..பியூன் எல்லாம் வாடா போடான்னு பழகுற அழவுக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.".என்று முணுமுபுத்தபடி கோபத்தை வெளிக்காட்டிகொள்ளாமல் தியேட்டர் வாசலுக்கு சென்றாள்..
.
டிக்கட் கிழிப்பவன் ஏதாவது ஏழரையை போட்டுவிட கோட்டது என்று கொலை நடுக்கத்துடன் வாசலுக்கு சென்றான் கணவன்.
.
"..வழக்கமா படம் போட்ட அப்புறம் இருட்டுக்குள்ள தான் போவே..!! இன்னிக்கு என்ன சீக்கிரமே.. உனக்கு மச்சம்டா.. என வாசலில் டிக்கட் கிழிப்பவன் வில்லங்கத்தை ஆரம்பித்து வைத்தான்..
.
அவ்வளவுதான் மனைவிக்கு தாறுமாறாக ப்ரெஷர் எகிறி, டென்ஷன் ஆகி திடீரென தியேட்டரை விட்டு வெளியே ஓடினாள்..ஏழரை ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த கணவனும் அவளை துரத்தியபடி ஓடினான்..
.
வெளியே வந்த அவள், ஒரு ஆட்டோவை மறித்து அழுதபடி ஏறினாள்.. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த கணவனும் பாய்ந்து ஆட்டோவுக்குள் ஏறினான்..
.
"..என்ன ஜானி சார்...! வழக்கமா நச்சு ஃபிகரை தள்ளிக்கிட்டு வருவிஙக..!! இன்னிக்கு என்ன சார்!! இந்த அட்டு ஃபிகர்தான் மாட்டிச்சா..!! போங்க சார்..!! வழக்கமா போற லாட்ஜ் தானே போவணும்.. என்றான் ஆட்டோக்காரன்..
.
மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்குங்கோ..!!!!

..........................................

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தத்துவம் 1:
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, 
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?" 

தத்துவம் 2:
புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

தத்துவம் 3:
ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் கோமா ஸ்டேஜில் பேசமுடியாது

தத்துவம் 4:
நைட்ல கொசு கடிச்சா
குட் நைட் வைக்கலாம்...
ஆனா, பகல்ல கடிச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா..???

தத்துவம்5:
அண்ணனோட ஃப்ரண்ட
அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
,,,,,,,,,,,

உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .

******************************************


டாக்டரைப் பார்த்துட்டு வந்ததிலேர்ந்து என் மனைவி
வீடு பெருக்க மாடேங்கிறா…!ஏன் அப்படி?

இதுக்கு மேலே நீங்க பெருக்கக் கூடாதுன்னு டாக்டர்
சொனதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டா…!
*******************************************

நெகடிவ்: பொண்டாட்டி கூட வரும்போதா இத்தனை
ஃபிகர் நம்மளைக் கடந்து போகணும்? …ச்சை!

பாசிடிவ்: ஆஹா, நாம இன்னும் ராமன்தான்னு ‘சீன்’ போடுறதுக்கு
சூப்பரா ஒரு சிச்சுவேஷன் கிடைச்சிருக்கு,
பொண்ணைப் பாக்காதடா, மண்ணைப் பாருடா…., நிரூபி..!

******************************************************

ஆபீஸ்ல ரொம்ப இலவசமா (மன்னிக்கவும் free-a) இருக்கறவங்களுக்கு ஒரு நல்ல மனுஷன் (idea மணி-னு நினைக்கிறேன்) இந்த மாதிரி Super ஆ ஐடியா கொடுத்து இருக்கார்..சரி ஒவ்வொன்னா பாப்போம்..

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ய உங்க அலுவலதுக்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யாரு வேளையில் இருந்து விடுபட போகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்..

2. உங்க பாசுக்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்கள்..

3. உங்க யாஹு id ல இருந்து ஜிமெயில் க்கு ஒரு மெயில் அனுப்புங்க. உடனே gmaila திறந்து பாருங்க.. மெயில் வர எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.. இந்த முறைய அப்படியே திருப்பி (reverse la) செய்யுங்க..

4. உங்க கை விரல்களை எண்ணுங்க.. இன்னும் போர் அடிக்குதா, கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்க.. இன்னுமா. சரி அப்படினா பக்கத்துல உள்ளவரையும் விடாதீங்க..

5. அடுத்தவங்க வேல பாக்கும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்.. கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்.. அவ்வப்போது உங்களோட முகபாவனைகளையும் மாற்றுங்கள்.. அப்போது தான் நீங்க வேலை செய்வது போல தோன்றும்..

6. போன வாரம், அல்லது போன மாதம் வெளியான பத்திரிக்கைகள், புத்தகங்களை படியுங்கள்..

7. தேநீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட முயற்சி செய்து பாருங்கள்.

8. அலைபேசி அல்லது தொலைபேசியை எடுத்து உபயோகத்தில் இல்லாத எண்களுக்கு போன் பண்ணுங்கள்..

9. உங்கள் கணினியில் ஒரே நேரத்தில் எத்தனை applications a ஓபன் பண்ண முடியும் என்பதை சோதித்து பாருங்கள்.. முடிந்தால் உங்களது டெஸ்க்டாப் ல எவ்ளோ icon-s a போட முடியும்னு சோதியுங்கள் (full-a போட்டு பொறவு ஒன்னொன்னா delete பண்ணுங்க..

10. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள் (shift delete போட்டுராதீங்கோ ). அதை Recycle bin ல இருந்து restore செய்து விளையாடுங்கள் .. திரும்ப திரும்ப செய்து பார்க்கலாம் .

11. முக்கியமா internet இருந்தா orkut ல போய் உங்களோட friends (or friend a illathavanga read rights கொடுத்தா .) oda scrapbook ல ஏதாவது எழுதுங்க. அப்புறம் அந்த scrapbook fulla ஓபன் பண்ணி படியுங்க.. நல்லா time பாஸ் ஆகும் ..

12. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சாய்ந்து பாருங்க .. (அப்படியே தூங்கிராதீங்க).. seat la hight a கூட்டி குறைச்சி விளையாடலாம்..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“உன்னைப் பார்த்தால் ஏதோ கவலையாக இருப்பது போலிருக்கிறதே”

“ஆமாம்.. ஒரு சின்ன பிரச்சனை.. அதைத் தீர்த்து வைக்க ரொம்ப நேரமாகிவிட்டது.. அதனால் தூக்கம் கெட்டுப் போனது.. அதான் வாட்டமாக இருக்கிறது”

“என்னப்பா பிரச்சனை”

“நான் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தேனே.. குதிரை வாங்க வேண்டும் என்று .. நேற்றைக்கு சந்தைக்குப் போனேன்.. இரண்டு குதிரை வாங்கி வந்தேன்..”

“இது நல்ல விஷயம் தானே .. இதில் எங்கிருந்து பிரச்சனை வந்தது”

“இரண்டு குதிரைக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பதற்கு அளவு tape வைத்துக் கொண்டு நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்”

“அப்படியா”

“ஆமாம் அப்பா .. இரண்டு குதிரைகளையும் நிற்க வைத்து காதிலிருந்து தரை வரை எத்தனை உசரம் என அளந்து பார்த்தேன்.. இரண்டும் ஒரே உசரம்..”

” chin groove லிருந்து அளந்து பார்த்தாயோ..”

“அதையும் பார்த்துவிட்டேன்.. இரெண்டு குதிரைகளும் ஒரே உசரத்திலே தான் இருந்தன”

“குதிரையின் வயிற்றின் சுற்றளவு பார்த்தாயா”

“ம்ம்ம் அதையும் நான் விட்டு வைக்க வில்லை.. Loin, croup , flank என்பதாக ஒவ்வொரு இடத்தையும் வைத்துக் கொண்டு இரண்டு குதிரைகளின் வயிறு சுற்றளவு பார்த்தேன்.. வித்தியாசமே இல்லையப்பா”

” குதிரையின் பின் காலின் gaskin muscle முன் காலின் இடைவெளி அளந்து பார்.. அது எப்போதும் வேறுபடும்”

“அதையெல்லாம் பார்த்தாயிற்று “

“ஹாங்க்… வாலின் நீளம் பார்த்தாயா.. வாலின் நீளம்”

“அடப் போப்பா.. அதையும் பார்த்து விட்டேன்.. அது மட்டுமல்ல வால் தொடங்கும் dock இடத்திலிருந்து தரை எத்தனை உசரம். காதுகளுக்கு பின்னே இருக்கும் poll வரைக்கும் எத்தனை நீளம் எல்லாம் பார்த்து விட்டேன்.. ஒரே அளவு தான்.. “

“குதிரைகளின் barrel நடுப்புள்ளியிலிருந்து.,, தரை வரைக்கும் அளந்து பார்த்தாயா”

“ம்ம்ம் பார்த்து விட்டேன் நண்பா.. அதுமட்டுமில்லை க்ரெஸ்ட் பகுதியின் சுற்றளவு பார்த்தேன்.. whither பகுதி சுத்தளவு.. point of hip இடத்திலிருந்து தரை இருக்கும் உசரம், அங்கிருந்து மூக்கு வரை நீளம்.. குதிரைக்கு shirt , pant தைப்பதானால் என்னால் மனப்பாடமாக அளவுகளை மனதிலே வைத்துக் கொண்டு தைக்க முடியும் என்றால் பார்த்துக் கொள்”

“அடடா .. நீயும் எல்லாம் தான் செய்து பார்த்திருக்கிறாய்.. ஆனாலும் வழி கிடைக்கவில்லை.. விட்டுத் தள்ளு”

“விட்டுத் தள்ளுவதாவது.. நடக்குமா.. அதுவும் என்னிடம் !!!! ஒரு வழியாக இரண்டு குதிரைகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடித்துவிட்டேன்”

“அது தானே பார்த்தேன்.. நீ கில்லாடியாச்சுதே.. கண்டுபுடிக்காமல் விடுவாயா.. என்ன வித்தியாசம் .. என்ன வித்தியாசம் சொல்லு”

“முன்னே மூஞ்சி நீளம் இருக்கிறதல்லவா.. அது ஒரு குதிரையை விட இன்னொன்றுக்கு இரண்டு அங்குலம் நீளமாக இருந்தது”

“சப்பாபாஷ்… சரியான ஆளப்பா நீ.. அது சரி.. ஒவ்வொருதரமும் இதை அளந்து அளந்து பார்த்துக் கொண்டா இருப்பாய்.. இந்த வித்தியாசத்தை.. பார்த்த உடன் தெரிந்து கொள்வது மாதிரி குதிரைக்கு ஏதாவது அடையாளம் செய்து வைத்தாயா”

“அந்தக் கவலை இல்லை.. கருப்புக் குதிரைக்குத் தான் வெள்ளைக் குதிரையை விட மூஞ்சி நீளம் என எனக்கு நியாபகம் இருக்கும்
.....................


காதலின் சின்னம் என்ன என்று கேட்டேன் கல்லறை என்றாள்…..
கல்லறை போக பாதை கேட்டேன் என்னை காதலி என்றாள்……..

*************************
பசங்க உள்ளம் ஒரு கோவில்.அதனால்தானோ என்னவோஅவன் “ஐ லவ் யூ…”
சொல்லும்போதெல்லாம் அவள் செருப்பைக்கழற்றி விடுகிறாள்…

***************************
அவள் கண்கள் பேசிய வார்த்தை புரிந்த எனக்கு….
அவள் உதடு பேசிய வார்த்தை புரியவில்லை……
படுபாவி மூச்சு விடாம ஆங்கிலம் பேசுறாள்….


,,,,,,,,,,,,,,,,

Maram Vaadinal Thanneer Viduven
Idhayam Vaadinal Kanner Viduven
Nee Vaadinal en UYIRAI Viduven..

..Nee SANTHOSA pada adikkadi ippadi REEL viduven...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் பக்கத்திலிருந்த நகரத்திற்கு சென்றார்கள்.அங்கு ஒரு மதுக் கடையைப் பார்த்தவுடன் உள்ளே நுழைந்தவர்கள் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.

நீண்ட நேரம் சென்றபின் ஒருவன் சொன்னான்,''டேய் மாப்பிள்ள,கடைசி பேருந்தைப் பிடித்தாவது ஊருக்குப் போக வேண்டுமே,''என்றான்.உடனே இருவரும் பேருந்து நிலையம் சென்றனர்.அப்போது கடைசிப் பேருந்து போய்விட்டிருந்தது.என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.

உற்சாகமாக ஒருவன் கத்தினான், ''பக்கத்தில்தானே பேருந்து டெப்போ இருக்கிறது!ஏதாவது ஒரு பஸ்ஸை வெளியே எடுத்து நாமே ஓட்டிக் கொண்டு நம் ஊருக்குப் போனால் என்ன?''என்று கேட்க முழு போதையில் இருந்த அடுத்தவன்,''நானே சென்று பேருந்தை எடுத்து வருகிறேன்,''என்று கூறி உள்ளே சென்றான்.நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வரவில்லை.திடீரென பல பேருந்துகளை இடித்துக் கொண்டும் சேதப்படுத்திக் கொண்டும் ஒரு பேருந்து வெளி வந்தது.அதை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.

''ஏண்டா இவ்வளவு நேரம்?''என்று இவன் கேட்க அவன் சொன்னான்,''என்ன செய்வது? நம்ம ஊருக்குப் போற பேருந்தைக் கடைசியில் நிறுத்தி வச்சிருந்தாங்க.அதைத் தேடி எடுத்து வர தாமதமாயிருச்சி,''

,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment