Friday, May 24, 2013

கடி ஜோக்ஸ் 21

அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி சினிமா டைரக்டரா இருந்தவரா?

எதுக்கு கேட்கறீங்க?

பேஷண்டுக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் ‘பேக்கப்’னு சொல்றாரே..

...................................................................

Mba படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்.. 

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... 

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் 
கொண்டிருந்தார்....... அவரிடம் கேட்டான்… 

mba : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..? 

விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்.., 

mba : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! 
எப்படி கண்டுபிடிப்பீங்க..? 

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.. 

Mba : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..? 
__


விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என் மாட்டைகாலேஜுக்கெல்லாம் 
படிக்க அனுப்பலை.

......................................................................

என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!

...........................................................................

வேக்கம் க்ளீனர் விற்கும் சேல்ஸ்மேன் ஒரு வீட்டின் கதவை தட்டினான். 


ஒரு பெண்மணி வந்து கதவை திறந்ததும், உங்கள் கையில் உள்ள சாணம் முழுவதையும் தரையில் கொட்டிவிடுங்கள், என்று அந்த பெண்மணியிடம் சொன்னான் சேல்ஸ்மேன்.

சேலஸ்மேன்: 'மேடம்! இன்னும் 3 நிமிஷத்தில நான் எங்களது புதிய தயாரிப்பான சக்திமிக்க வேக்கம் க்ளீரைக் கொண்டு, இந்த சாணம் முழுவதையும் சுத்தப்படுத்திர்ரேன். அப்படி முடியலனா, இந்த சாணம் முழுவதையும் நானே தின்று முடிக்கிறேன்' என்றான். 

பெண்மணி: 'அப்படியா! தொட்டுக்க ஊறுகாய் தரவா? 

சேல்ஸ்மேன்: ஏன்?

பெண்மணி: வீட்ல கரெண்ட் இல்லப்பா,.

நீதி: தமிழ்நாட்ல யாரும் தம் அதி புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்கு முன்னால மின்சாரம் இருக்குதான்னு உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.
.........................................................................


SMS கடி ஜோக்குகள் :-


1) ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும். ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூடவே போகுமா?
------ பஸ் ஸ்டான்ட்ல சைக்கிள ஸ்டாண்ட் போட்டு யோசிப்போர் சங்கம்.

2) கடவுள் உங்கள் சந்தோசங்களை அதிகரிக்க செய்யட்டும் தினமும், தங்கத்தின் விலையைப் போல!
மேலும் உங்கள் வருத்தங்களை குறைக்கட்டும், நமிதா ஸ்கர்ட்டைப் போல!!

3) லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான். ----- எப்பூடி..........

4) லவ் என்பது ஏழாவது அறிவு, அது மத்த ஆறு அறிவையும் அழித்து விடும். --- வேறு எங்கும் இந்த தத்துவத்தை இதுவரை எழுதவில்லை!!

5) வாழ்க்கை என்பது 5 ஸ்டார்.
முதலாவது ஸ்டார் “SSLC Girl”
இரண்டாவது ஸ்டார் “+2 Girl”
மூன்றாவது ஸ்டார் “College Girl”
நான்காவது ஸ்டார் “Wife”
டாப் ஸ்டார் “Wife’s Sister”
.................................................

2 comments:

  1. Is there a more recent one of your blog? Please send it.
    Thanks

    ReplyDelete
  2. chithi
    u can go to the older posts and read

    ReplyDelete