Monday, October 24, 2011

இந்த மனுசங்களே இப்படித்தான்...... . 2

இந்த   மனுசங்களே  இப்படித்தான் .............

இப்ப தீவளி சமயம் வேற , இந்த ஜனங்க பட்டாசை வெடிச்சு  வேணும்னே மேல போடுவானுக, அப்ப எவ்ளோ கஷ்டமா இருக்கும் நம்ம நாய் பசங்களுக்கு ? சத்தமே கொன்னுடும் பாவம் நம்ம 'கண்ட்ரி கசின்ஸ்' போய் ஒளிஞ்சிகரதத்தவிர வேற வழியே இல்லை.

இது கூட தேவலைங்க ,இவனுக பட்டாசு குப்ப கூட ,
நாஸ்தாவையும் சேத்து குப்பைத்தொட்டியில போட்டுடுவாணுக, இவனுக  சுற்றுப் புற சூழலை  மாசுப் படுத்தரதோடல்லாம நம்மளையும்
இவனுகளோட வ்யாதி வெக்கையிலே சாக வச்சிடுவாணுக போல இருக்கு.
கருமாதி பிடிச்சவனுக ..நம்ம நல்லா இருக்கறதப் பாக்கப் பிடிக்காதவணுக!  .....
..............................................................................................................

போராதக்  குறைக்கு என் வீட்டில வந்த்ருக்கற சம்மந்தி வேற இது என்னா பெங்களூரு?

மெட்ராஸ் மாதிரி பயலுக சுருசுறுப்பாவே இருக்க மாட்டேனுகறாங்க , உன்னைச் சொல்லி குத்தமில்லே , இந்த ஊரே மொள்ள மாறி மொள்ளத்த்தான் போவுது! சீக்ரமா காலிலேயே நாஸ்தா துன்னலான்னாஒருபயலுக எளிந்திருக்க  மாட்டேனுகராகளே?
இன்னா தான் நடக்குதுன்னு தெரியலையே?

ஒரு பயலுகலாவது மீனோ, முட்டையோ ,மாமிசமோ சட்டுப் புட்டுன்னு சமைச்சு போட மாட்டேனுகரான்களே? மெட்ராசுலே எல்லாப் பயலுகளும் நமக்கும் சேத்துப் பொங்கிப் போடுவானுக , அட ஒருத்தரும் இல்லேன்னா கூட நம்ம பிராமண பொம்பளைங்க தெனம் ஒரு பிடி சோறு போடுங்க!
..........................................................................................................
இவனுக வண்டி ஓட்டறதுக்கு , எடம் இல்லன்னு மரத்தெல்லாம் வெட்டி போட்டுடுவாணுக, அப்ப நம்ம எங்கதான் கூடு கட்டறது?
.........................................................................................................
சரி, போனா போறது .செலைகளைத் தான் ரோட்டுக்கு ரோடு போட்டுருக்காங்கலேன்னு போயி ஒட்காரலாம்னா, மழை காத்துக்கு எங்கே போய்  ஒளியறது ?
......................................................................................................
இவனுக செல் போன்லே பேசறதுக்குன்னு அங்கன இங்கன பெருசு பெருசா கொம்பு கொம்பா  நட்டுடுவாணுக  , அப்ப நம்ம குருவி பசங்க எங்கன போயி இருக்கும்ங்க.?
......................................................................................................

அதான் அதுகள நாங்களா பாத்து விசாவும் வேணாம், பாஸ்போர்டும் வேணாம்னு வெளி ஊருக்கு பறந்து போகச் சொல்லிட்டோம், இது எவ்ளவோ தேவல இல்லையா? வெளி ஊருகள்ள நம்ம ஊரு மாதிரி சொயநலம் இல்லீங்க!

.....................................................................................................

போற போக்கப் பாத்தா,மிருகங்கள 'ஜூல' வச்சிருக்கற மாதிரி நம்மளையும் பிடிச்சு போட்டுடுவாணுக போலல்ல இருக்கு?

......................................................................................................

1 comment:

  1. Posted by: Sriniketan
    On: 8th February 2012 03:07 AM

    Paavamaagathaan irukku namma kaakkai kuruvi enga jaadhi nu paadina Bharathiyaar naattil, indha koothaa, :-(
    Let us act before it is too late nu solla thonradhu..gavanippaargalaa.

    ReplyDelete