Thursday, January 28, 2010
என் அம்மா வுக்கு நல்ல சென்ஸ் ஆப் ஹ்யூமர் , என் வீட்டில் எல்லாரும் ஒன்னா சேர்ந்தாலே ரொம்பவே கடி தான். அப்படித்தான் நேற்று அம்மாவுடன் டெலிபோனில் பேசும்போது எப்பவும் போல் ,'எப்டி கீறே ' நு கேட்டதுக்கு
அம்மா 'ஒரு ரூவாக்கு ரெண்டு கட்டு 'நு சொன்னாள்.
'என்னமா ,அநியாயமா வெலை ஜாஸ்தியா சொல்றே'
'நான் என்னமா செய்யரது, ஒரே மழை பெஞ்சு கீரை எல்லாம் அழுகி போச்சு'
'அதுக்கு என்தலையிலே கட்டணுமா'? '
நான் கட்டி தாம்மா கொடுக்கறேன்'
இதை நான் என் மகன் ,மருமகளிடம் சொன்ன போது, என்னுடைய ப்ளாகில் போடச் சொன்னார்கள். .
9 comments:
- hahaha .... good one :) on similar lines ... I heard one ...
A guy goes to a veggie market and ask the vendor ... "எப்படி பா உருள (potato) and he says ... "இது உன் மார்க்கெட் சாமி ... நீ எப்படி வேணும்னாலும் உருளு (roll);-))
- Your கடி is கொசுக்கடி But Satish's கடி is முதலைக்கடி !
- ரெண்டு கடியும் நான் சாப்பிடுகிற குஜராத்தி கடியை விட நல்லாவே இருக்கு .
- எப்படிடா இந்த அம்மாவால மட்டு இப்டீலாம் கடிக்க முடியுதுன்னு இம்பூட்டு நாளா தலைய பிச்சுகினு இருந்த நம்பளுக்கு படு ஷோக்கா இந்த கதை மூலமா பதில் வந்திடுச்சு.
- குஜ்ஜு கடி கூட உண்டா என்ன?
- Yes, Gujju kaDi is similar to what is known as "மோர்க்குழம்பு " in தமிழ் --not that delicious and spicy but has an "அசட்டு தித்திப்பு " and passes as an appetizer.
- என்ன சாருங்களே என்னுடைய கடியே தேவலை போல இருக்கே .ராம்ஜி , குஜராத்தி கடி வேணும்னால் ஆத்துக்கு வாங்கோ 'மூங்' கூட சமைச்சு போடறேன் .இன்னும் எங்காத்துல குஜ்ஜு சமையல் தான். பழக்க தோஷம் விடலை . எங்க ஆத்துலே, நானு , என் அண்ணன் தான் கடியில் ரொம்ப பேர் வாங்குவோம் , ரெண்டு பெரும் ஒன்னா சேர்ந்தாலே , எல்லாரும் ஒடோமாஸ் தடவிண்டு வந்துடுவாள். ஆனால் நல்ல ரசிப்பாள் எல்லோரும். அர்ஜுன் கூட 'அய்யோ , அம்மா வும், பாட்டியும் ஜுகல் பந்தி போடறலேன்னு'தலையிலே கையை வச்சிண்டுடுவான்.
- அந்த கன்றாவி சக்கரை போட்ட மோர்குழம்பை இன்னமும் சமைக்கறீங்க சிவ சிவா !
- என்ன ராம்ஜி ,இந்த 'கடி' கட்டு என் தலையை 'கடிக்காம' போகாது போல இருக்கே!
No comments:
Post a Comment