உலகை வலம் வருவதற்கு விநாயகரும் முருகனும் பின்பற்றிய தந்திரங்களை நாம் திருவிளையாடல் புராணம் மூலம் அறிவோம்.
ஒரு மாம்பழத்தைப் பெறுவதற்காக முருகன் மயில் மீது வலம்
வந்தார். ஆனால், அவனது அண்ணனான பிள்ளையாரோ தாய், தந்தையான
பார்வதி-பரமேஸ்வரனைச் சுற்றி வந்து ஒரு மாம்பழத்தைப் பரிசாகப் பெற்றார்.
இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது:--
பூ ப்ரதக்ஷிண ஷடகேன காசீயாத்ரா (அ)யுதேன ச
சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே
சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே
தாயை வணங்குவதானது ஆறு முறை உலகை வலம் வந்ததற்கும்,
பத்தாயிரம் முறை காசியில் கங்கையில் குளித்ததற்கும் நூற்றுக் கணக்கான முறை
ராமேஸ்வரத்தில் கடலில் குளித்தற்கும் மேலானது.
இப்போது புரிகிறதா? தாயை ஒரு முறை வணங்கிவிட்டால் ஆறுமுறைக்கு மேல் உலகை வலம் வந்ததற்குச் சமம்.
தாயிற் சிறந்ததோர் கோயிலில்லை.
சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வசனம் இருக்கிறது:--
“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”
“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”
பொருள்:--
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை.
தாய்க்கு மிஞ்சிய தெய்வமில்லை.
தாய்க்கு மிஞ்சிய தெய்வமில்லை.
மனு சொல்கிறார்: ஆயிரம் தந்தை = ஒரு தாயார்
பத்து உபாத்தியாயர்களைவிட ஒரு ஆசார்யார் (குரு) பெரியவர்;
அப்படிப்பட்ட நூறு ஆச்சர்யார்களைவிட தந்தை பெரியவர்;
ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளைவிடப் பெரியவர்.
--மனு ஸ்மிருதி 2-145
No comments:
Post a Comment