Thursday, March 31, 2016

படித்ததில் சுட்டது...


🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
அப்பா இங்க வந்து பாருங்களேன்...
அம்மா வச்ச குழம்பக் குடிச்சிட்டு மீனெல்லாம்
செத்துக் கிடக்குது சட்டிக்குள்ள!!
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
யாருக்காவது குழிதோண்டவும்
மண்ணள்ளிப் போடவும் விரும்பினால்
அதை விதைகளுக்குச் செய்யுங்கள்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பிய்த்து எடுத்தாலும் பீரோவை விட்டு
வர மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில்
ஒட்டியிருக்கிறது என் பால்யம்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
உச்சிக்குப் போய்விட்டால் எல்லாப்
பக்கமும் சரிவுதான்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ஆம்பளைங்க பண்ற தண்டச்செலவுல
மறக்கமுடியாதது கல்யாணத்துக்கு
வாங்குன கோட்டு...
எப்பப் பாத்தாலும்
எரிச்சலா வேற இருக்கும்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
இனி ஒரு விவசாயி இன்னொரு
விவசாயிக்கு இப்படி கடிதம் எழுதுவார்...
"இங்கு நான் நிலத்துடன் இருக்கிறேன்,
அங்குநீ நிலத்துடன் இருக்கிறாயா என
அறிய ஆவல்"
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
நம் புகைப்படத்தைப் பார்த்து
"ஆ!... இது யாரு!" என திகைப்பதன்
சுருக்கமே ஆதார்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ரெய்னாவுக்கு 28 வயசுதான்.
கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னு
அம்மாகிட்ட சொன்னேன். அவன்
சம்பளம் எவ்வளவுன்னு டான்னு
பதிலுக்குக் கேக்கறாங்க...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ஒரு உண்மையில் சமாதானம்
ஆகாமல் பல பொய்களால் சமாதானமடைபவள்
மனைவி...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பிளாட்பார டிக்கெட் பத்து ரூபாய்க்கு வாங்கியே
பிளாட்பாரத்துக்கு வந்துடுவோம் போல..!!
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பிளாட்பாரத்துல நின்னாதான் கட்டணம்
10 ரூபாயாம். அப்படியே கீழ உக்காந்துட்டா
கேட்கமாட்டாங்களாம். பிச்சைக்காரன்
சொன்னான்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
தொட்டாச் சிணுங்கியைத் தொட்டு
விளையாடிய குழந்தையின் கரங்கள்
இன்று தொடு திரையில் சிக்கிக் கொண்டன...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ஒரு கிரகத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த்
ன்னு பேர் வச்சிருக்காங்களாம்...
எனக்கு
எங்கவீட்ல 'கெரகம்' ன்னு பேர் வச்சு
ரொம்ப வருஷமாச்சு...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
மழுங்கிப் போன அப்பாவின் கண்ணாடியை
அணிந்தபோது பூதாகரமாகத் தெரிந்தது,
எங்களுக்காகத் தொலைத்த வாழ்க்கை.!!
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
உன் அப்பா ஏழையென்றால்
அது உன் விதி.
உன் மாமனார் ஏழையென்றால்
அது உன் இளிச்சவாய்த்தனம்...

1 comment: