இறைவனின்
கட்டளையை ஏற்றுக்கொண்டு
அவன்வேண்டுதலை
இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால்
" என்மனைவிக்குஆண்
குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை
வேண்டாம்
" என்று வேண்டிக்கொண்டான்.இறைவனும் அவனின் வேண்டுகோளைநிறைவேற்றினான்.
உங்களது
வேண்டுகோள் என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம் வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.
சுமார்
இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்கனவில்
இறைவன் தோன்றி தன வேண்டுகோளைவைத்தான்.
அவன் மகன் திருமணத்தின்
பொழுதுபெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும்
கேட்கக் கூடாதுஅந்த பெண்ணுக்கு நீ வரதட்சணைகொடுத்து
உன் மருமகளாக ஏற்றுகொள்ளவேண்டும்
என்றான் இறைவன். இதை கேட்டு
அதிர்ந்து
போனான் அவன்.
பெண்
பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமேஎன்று
தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையைகொடுத்துவிட்டு
இப்படி ஒரு பாரத்தை என்தலையில் சுமத்துகிறாயே
இறைவா என்று
கதறினான்.
" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்.
உன்னை
சுமக்க ஒரு பெண் வேண்டும்.
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்.
உன்னை
அரவணைக்க ஒரு பெண் வேண்டும்.
உன்னை
நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்வேண்டும் .
உன்
மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண் வேண்டும்.
" உன் வாழ்க்கையில்
பங்கு கொண்ட இத்தனை பெண்களும் உனக்கு பாரமாக
தெரியவில்லை
ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி
பாரமானது
?
நீ
எவ்வளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணைபெற்றவர்கள்
தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ
நினைப்பது எந்த விதத்தில்நியாயம்
?
"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே
போதும்
பெண்
பிள்ளை பாரமாகத்தெரியாது
".
No comments:
Post a Comment