Wednesday, December 10, 2014

சமையலறையின் சில ஆலோசனைகள் :


ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின், பெருங்காயத் தூள் போட்டால் 
மணம் ஊரைத் தூக்கும்.கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் 
ோது,தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.
கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது கொஞ்சம்

கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.
மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் 
பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில்

இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்'சென்று இருக்கும்.
பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை 
முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை   
எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு,காய் 
நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.
அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் 
எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா? கவலை  வேண்டாம். டைல்ûஸ  
சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடு 
பின்னர்  வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து 
பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப் 
பாருங்களேன். 'பளிச்'சென்று ஆகிவிடும்.
கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு 
வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.
கேரட் அல்வா செய்யும்போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 
பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிதுநேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் 
சுலபமாகத் தோலை நீக்கிவிடலாம்.
வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு 
தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.
பஞ்சு போன்ற இட்லிக்கு கிரைண்டரில் உளுந்தம் பருப்பு பாதி மசிந்ததும் 
ஏழெட்டு ஐஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் வரும். 
இட்லியும் பூப்போல மெத்தென்றிருக்கும். என்ன??

No comments:

Post a Comment