Sunday, December 7, 2014

அமாவாசை


தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும்,

உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும்

முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில்

வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது.


மகாளயபட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும்.

அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமாகும்.

இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்ததாகும்.

மகாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம்

செய்ய வேண்டியது அவசியம்.
இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க

வேண்டும்.

இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும்

திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும்.

மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள், இந்தக்காலத்தில்

 தானங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது

ஐதீகம்.

No comments:

Post a Comment