கடகம்
வசீகரப் பேச்சும், வழிநடத்தும் திறனும் மிக்க கடகராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை 5ம் வீட்டில் அமர்கிறார், சனி பகவான்.
குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சொத்து தீர்ப்பு சாதகம் ஆகும். ப்ளான் அப்ரூவல், வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளை அரவணைத்துப் போவது நல்லது. மகளின் திருமணத் துக்காக கடன் வாங்க வேண்டி வரும். கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனைப் பிரிய நேரிடலாம். கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங் களைத் தவிருங்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் சஷ்டம பாக்கியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 5ம் வீட்டில் சனி செல்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பண வரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வேலை அமையும். 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், தாய்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள், வீண் பழி வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்கிறார். சிலர், புதுத் தொழில் தொடங்குவார்கள். அடகில் இருந்த நகை மற்றும் வீட்டுப் பத்திரத்தை மீட்க வழி பிறக்கும். உங்கள் சப்தம அஷ்டமாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், செலவுகள் அதிகமாகும். மற்றவர் முன்னிலையில் மனைவியைக் குறைவாகப் பேச வேண்டாம். விமர்சனங் களைத் தவிர்க்கவும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். அரசு அதிகாரிகளை பகைக்காதீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.08.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் திருதியாதிபதியும்விரயாதிபதியு மான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் தன்னம்பிக்கை குறையும். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். இளைய சகோதர வகையில் பிணக்குகள், பயணங்களால் அலைச்சல் உண்டு. பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தி லேயே சனி வக்ரமாக்ச் செல்வதால், இந்த கால கட்டத்தில் தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
சனி 2ம் இடத்தைப் பார்ப்பதால், எவரையும் எடுத்தெறிந்துப் பேச வேண் டாம். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பழகுங்கள். வாக்குறுதிகளை நிறை வேற்றப் போராட வேண்டி வரும். சனி 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனை வியுடன் வாக்குவாதம், அவருக்கு மருத் துவச் செலவுகள் வந்துபோகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார்.
வியாபாரத்தில், புது யுக்திகளால் லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் வாய்ப்பு களும் வரும். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்கள், பாதியிலேயே விட்ட கல்வியைத் தொடர்வார்கள். நினைத்தபடி திருமணம் முடியும். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் பரிசுபாராட்டுகள் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், புதிய திட்டங்களை நிறைவேற்றும் வல்லமையையும், மன நிம்மதியையும் தரக்கூடியதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி அல்லது தசமி திதி நாளில், திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை சென்று ஸ்ரீவக்ரகாளி அம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.
சிம்மம்
எல்லோர் மீதும் நம்பிக்கை கொண்ட சிம்மராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சுக வீடான 4ம் வீட்டில் சனி அமர்கிறார். இந்த காலத்தில் வாழ்க்கை சற்று சவாலாகவே இருக்கும்.
உங்கள் ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டதிபதியாக சனி வருவதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். ஒப்பிடுதலைத் தவிர்க்கவும். எதிலும் முன்யோசனை யுடன் செயல்படவும். செலவுகள் துரத்தும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரங்களை சரிபார்ப்பதுடன், வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படவும். டிரைவிங் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை உரியநேரத்தில் புதுப்பிக்கவும்; அபராதம் செலுத்த நேரிடலாம். சிலர், குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த முற்படுவர். அவர்களின் பேச்சைக் கேட்டு, வீண் சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளா தீர்கள். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் கட்ட வேண்டாம். சாட்சிக் கையொப்பமிட வேண்டாம்.
சனி பகவான் சஞ்சாரப் பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 4ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வழக்கு சாதகமாகும். மகளின் திருமணம் சிறப்புற நிகழும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேற்றுமொழி பேசுபவர் களால் திருப்புமுனை உண்டாகும்.
உங்கள் சஷ்டமசப்தமாதிபதியான சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், வந்து போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிக்கு வேலை கிடைக்கும்.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் உங்களின் புகழ் உயரும். வேலை கிடைக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புதுப் பதவி தேடிவரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக் கும். பூர்வீகச் சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் கடனாகக் கொடுத்ததை வசூலிப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சனி 10ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைப்பளு, விரும்பத் தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துசெல்லும்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டும். யாருக்கும் கடன் தரவேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு களோ, முதலீடுகளோ வேண்டாம். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். திடீர் இடமாற்றங்கள் வந்துபோகும். உங்களை வழக்கில் சிக்கவைக்க சிலர் முயற்சிப்பார்கள்.
கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தாயாரை அனுசரித்துப் போகவும். மாணவர்களே, விளையாடும்போது சிறு காயங்கள் ஏற்படக்கூடும்; கவனம்!
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி வேலைச்சுமை, இடமாற்றங்களை தந்தாலும், தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: உத்திராடம் நட்சத்திர நாள் அல்லது அமாவாசை தினங்களில், திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீகிருபாபுரீஸ்வரரை தீபமேற்றி வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
கன்னி
கலகலப்பான கன்னி ராசிக் காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்கிறார்.
பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்றுசேர்வார்கள். தோல்வி முகம் மாறும். குடும்பத்தில், உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பர். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். மகளுக்கு, நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
சிலர், கடன்பட்டாவது வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோனுக்காக பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்கவேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். வீண் பழிகள் விலகும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவர்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் சுகசப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 3ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் மன வருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
30.4.15 முதல் 1.8.15 வரை குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். எனினும் பழைய கடனை நினைத்துக் குழம்புவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டியாதிபதியுமான சனி, சுயநட்சத் திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இக்கால கட்டத்தில் பூர்விகச் சொத்து கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் பெறுவீர்கள். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செயல்படவும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனி அனுஷத்தில் வக்ரமாவதால், சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பண வரவு இருந்தாலும் செலவு களும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். வீடு, வாகனம் அமையும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், சளி, இறுமல், கழுத்து வலி வந்துபோகும்.
சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்து வழக்கு சாதகமாகும். உயர்கல்வி, பணியின் நிமித்தம் பிள்ளைகளைப் பிரிய நேரிடும். சனி 9ம் வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், கனவுத் தொல்லை, வந்துபோகும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். உணவு, எரிபொருள், வாகனம், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.
கன்னிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உங்களுடைய ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். திருமணம் விரைந்து முடியும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம் பதவியை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவோணம் மற்றும் ஏகாதசி தினங்களில், விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் அருளும் பூவராகவப் பெருமாளை வணங்கி வாருங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.
துலாம்
எல்லோருக்கும் நல்லவர்களாகத் திகழும் துலாம் ராசிக்காரர்களே,
16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான், உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டுக்கு வந்து அமர்வதால், இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவார்கள்.
என்றாலும், பாதச்சனியாக வருவதால், வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிலும் உணர்ச்சிவசப்படாமல், அறிவுபூர்வமான அணுகுவது நல்லது. எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதிசஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம் 2ம் வீட்டில் சனி செல்வதால், எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், இந்தக் காலகட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.15 முதல் 29.04.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், குடும்ப வருமானம் உயரும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால், நம்பிக்கையின்மை, பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பணம் வரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகிச் செல்வதால், மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சனிபகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் செய்யவேண்டி வரலாம். 8ம் வீட்டைப் பார்ப்பதால், வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். லாப வீட்டைப் பார்ப்பதால், திடீர் செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
வியாபாரத்தில், கணிசமான லாபம் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். கடையை விரிவுபடுத்தவோ, புதிய இடத்துக்கு மாற்றவோ செய்வீர்கள். ஸ்டேஷனரி, ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பா். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால், எல்லோரையும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள், மொழி அறிவை வளர்த்துக்கொள்வார்கள். பேருந்து பயணம், விளையாட்டில் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, முடங்கிக் கிடந்த உங்களை முடுக்கிவிடுவதுடன் செல்வம் செல்வாக்கையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் திருபு வனத்தில் அருளும் கம்பகரேஸ்வரரையும் சரபேஸ்வரரையும் அஷ்டமி திதி அல்லது சனிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். அநாதைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.
விருச்சிகம்
நேர்மையை நேசிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு 16.12.14 முதல் 17.12.17 வரை ஜென்மச்சனியாக அமர்கிறார் சனிபகவான். அதற்காகப் பதறவேண்டாம். அவர், உங்களுக்கு திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஓரளவு நல்லதையே செய்வார்.
சமயோசிதமான பேச்சாலும், செயலாலும் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.குடும்பத்தில் அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். எனினும் ஜென்மச் சனி என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்துபோகும். நேரம் தவறி உண்பதால், அல்சர் வரக் கூடும். சிலநேரம் சந்தேகம், மனக்கலக்கத்தால் நிம்மதி பறிபோகும். ஒரு சொத்தை விற்று, மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டி வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர் கள். எவருக்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங் களைச் சாதிப்பீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் தனபூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில், உங்கள் ராசிக்குள்ளேயே சனி செல்வதால் பணம், சொத்து சேரும். வழக்கில் வெற்றி உண்டு. ஆனால் மனஇறுக்கம், வீண் பிரச்னை வந்து போகும். கர்ப்பிணிகள் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. 14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு விரயச் சனியாக 12ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். பழைய கடனை நினைத்துக் கலங்குவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்தில் சனி வக்கரித்து செல்வ தால், திடீர் பணவரவு உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் திருதியாதிபதியும்சுகாதிபதியுமா ன சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று, புதிதாக வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமா வதால், கூடாப் பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் அஷ்டமலாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், வேலைகள் தடையின்றி முடிவடையும். வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 8.4.17 முதல் 5.8.17 வரை
புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய நபரால் ஆதாயம் அடைவீர்கள்.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால், சவால்களைச் சமாளிக்க வேண்டி வரும். வீடு மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரும். 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
10ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத் தில் வேலை அதிகமாகும். சுயதொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களால் பிரச்னைகள் வரும். அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், உணவு வகைகளால் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப்பெண்கள், இணையதளத் தில் கவனமுடன் செயல்படுங்கள்.பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். மாணவர்கள் தகாத நட்புகளைத் தவிர்க்கவும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி ஒருவித அச்சத்தைத் தந்தாலும், ஓரளவு பணவரவையும், அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்.
........................
தனுசு
கூடி வாழ ஆசைப்படும் தனுசு ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலான காலம், விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் அமைகிறது. எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
சனி உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால், ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12ல் சனி மறைவதால், உங்கள் அடிப்படை நடத்தையை மாற்றிக் கொள்ளாதீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வீண் செலவுகள் வேண்டாம்.
இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்றுத் தாமதமாகி முடியும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள். என்றாலும், அவ்வப்போது வீண் அவநம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயம் வந்துபோகும். எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் ராசி நாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால், குடும்பத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும்.14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், நினைத்த காரியம் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு. 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்கள் விஷயத் தில் தலையிடவேண்டாம்.
உங்கள் தனசேவகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சப்தமஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலை கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பொருள் இழப்பு, வீண் டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
சனி 2ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு இருந்தாலும் பற்றாக் குறையும் ஏற்படும். பேச்சில் கடுமை வேண்டாம். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். சனி 9ம் வீட்டைப் பார்ப் பதால், தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வந்து நீங்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங் களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, லாட்ஜ், வாகன உதிரிபாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். என்றாலும் பெரிய பொறுப்புகள் கிட்டும். சம்பளம் உயரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். கன்னிப்பெண்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமா கும். மாணவர்கள், போட்டித் தேர்வு களில் போராடி வெற்றி பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஓரளவு நன்மையையும், பணவரவை யும், பிரபலங்களின் நட்பையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாதிரை நட்சத்திர நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை நெய் தீபமேற்றி வழிபடுங்கள். புற்றுநோயால் அவதிப்படும் ஏழைகளின் மருத்துவத்துக்கு உதவி செய்யுங்கள்.
..........................................மகரம்
போராடி ஜெயிக்கும் மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான், 16.12.14 முதல் 17.12.17 வரை, லாப வீட்டில் அமர்வதால், உங்கள் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.
கடினமான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். கணவன்மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சேமிக்கத் துவங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 11ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், புது பொறுப்புகள், தேடி வரும். எனினும் உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று திரும்பக் கிடைக்கும்.
உங்கள் ராசிநாதன் சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், நீண்ட ஆசைகள் நிறைவேறும்.
15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், விரயம் உண்டு. ஆனால் உங்கள் வளர்ச்சி தடைப்படாது.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சஷ்டம பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், இழுபறியான வேலைகள் அனைத்தும் இனி தடையின்றி முடியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் நண்பர்கள், உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.
சனி ராசியைப் பார்ப்பதால் ஒருவித படபடப்பு, பதற்றம் வந்து நீங்கும். சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் விஷயங்களில் சிற்சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பூர்வீகச் சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தில் செல்லும்போதும், சாலைகளைக் கடக்கும்போதும் கவனம் தேவை. அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். தொந்தரவு தந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார். தடைப்பட்ட கல்வியில் வெற்றியுண்டு. பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு படிப்பு மேம்படும்.எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு, பாராட்டு உண்டு.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீரைப்போல், உங்களின் செயல் வேகத்தை அதிகரிப்பதுடன், பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சதுர்த்தி தினங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள். பிள்ளைகள் இல்லாத முதியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்..............................................கும்பம்
|
மீனம்
எதிலும் மாற்றத்தை விரும்பும் மீன ராசிக்காரர்களே,16.12.14 முதல் 17.12.17 வரை, 9ம் வீட்டில் சனி பகவான் அமர்கிறார். நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள்.
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எந்த விஷயத்திலும் சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். நிம்மதியும், தன்னம்பிக்கையும் உண்டு. குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வுகள் நீங்கும். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களை மீட்பீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். வீடு இடம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கு சாதகமாகும். தந்தையின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும்.
பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 9ம் வீட்டில் சனி செல்வதால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நாடாளுபவர்கள், தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு
அஷ்டமத்துச் சனியாக 8ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், வீண் பிரச்னைகள், காரியத் தடைகள், பண இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனிபகவான் சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், திடீர் யோகம், பண வரவு உண்டாகும். புது வேலை கிடைக்கும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், உற்சாகம் கூடும். சிக்கனம் தேவை. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சுகசப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் மனைவிக்கு வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் சொத்து கைக்கு வரும்.
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், கணவன் மனைவிக்குள் விவாதம் எழும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடைவீர்கள். சனி லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் இருக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன், புரோக்கரேஜ் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், வேலை குறையும். அதிக சம்பளத்துடன் வேறு வாய்ப்புகளும் வரும். பணி சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்வி விஷயங்களில் சாதகமான சூழல் நிலவும். கல்யாணம் கூடிவரும். புது வேலை கிடைக்கும். மாணவர்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விரும்பிய கோர்ஸில் சேருவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், அடுத்தடுத்து வெற்றிகளை பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதிநாட்களில் குன்றக்குடி சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு உதவுங்கள்.
No comments:
Post a Comment