Friday, December 12, 2014

கடி ஜோக்ஸ் 123

   இத படிச்சா வள்ளுவர் தூக்கு போட்டுக்க போறாரு.
..
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...


2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா
இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்... மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்.

7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று.

8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை.

9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோடுதல்.

10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே
லேடியால் கெட்ட மனம்..

11.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன்திருமணத்தன்று தாகசாந்தி செய்யமறுக்கும்.

நண்பனுக்கு.
12.போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.

No comments:

Post a Comment