Saturday, November 8, 2014

குரு உபதேசம்


சிக்கனம்:
வெறுமனே சொன்னால் போதாது. சந்திரமௌலீஸ்வரர் ஸாக்ஷியாக காபி, சினிமா, பட்டு மூன்றையும் விட்டுவிடுவதாக சத்தியம் பண்ணிக் கொடுங்கள் என்று கேட்கிறேன். ஏன்?
எத்தனை ஏழைக்குடும்பமானாலும், சோற்றுச் செலவை விட ஜாஸ்தியாக இவையே அல்லவா இழுக்கிறது. மேலும், இப்படி ஒரு வழக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பது தப்பு என்பதால் தான்.
கல்யாணத்தில் நாம் பண்ணுகிற ஆடம்பரங்களையெல்லாம் "வேஸ்ட்"களையெல்லாம் குறைக்கவேண்டும்.
பாட்டுக்கச்சேரி, டான்ஸ் கச்சேரி, நாயனம், பாண்டு ஊர்வலம் என்று வேண்டாத விஷயங்களுக்கு வாரி விடுவதைக் குறைக்க வேண்டும்.
வயல் நிறையக் களை மண்டி இருப்பதைப் பார்த்து நன்றாக விளைந்திருப்பதாக ஸந்தோஷப்படுவது போலத்தான், தனக்காகச் செலவழித்து அதில் ஏற்படும் சௌகர்யங்களைப் பார்த்து ஸந்தோஷிப்பது.
களை பிடுங்குவதில் எத்தனை கவனமாய் இருக்கிறோமோ அத்தனை கவனமாக அத்தியாவசியத்துக்கு மேலான செலவுகளை பிடுங்கிப் போட வேண்டும்.
காற்றை உள்ளே வாங்கிக் கொண்டு வெளியே விடுவது வரவும் செலவும் தான்.
அதில் கூடக் கணக்கு வேண்டுமென்று தான் ப்ராணாயாமம், மந்த்ர ஜபம், சோஹம் தியானமென்று பல யோகங்களை வைத்திருப்பது.
புசுக், புசுக்கென்று வேகமாகச் சுவாசித்தால் ஆயுஸும் குறையும் ஆத்மா சுத்தப்பட்டு சாந்தநிலைக்கு வருவதற்கான நாடி சமனமும் ஏற்படாது. அதனால்தான் மூச்சுக்கூட கணக்காக விடனும் என்று வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment