Wednesday, October 29, 2014

கோவிலில் காணும் அதிசயங்கள்


அந்தக் காலத்தில் கோவில் அமைக்கும்  போது  ஒவ்வொரு  கோவிலிலும் ஏதாவது  ஒன்றை  தனித்தன்மையுடன்   அமைத்தனர். 
ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவதுஒரு  தனிச்சிறப்பு உண்டு!  
அவைகளில்  சிலவற்றைக் காணலாம்:

 1. உற்சவர்  அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது  சிதம்பரம் கோயில்- நடராஜர்
2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும்சுக்ரவனும் சண்டை இடும் காட்சி  உள்ளது.இங்கிருந்து பார்த்தால் இராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது.ஆனால் இராமன் அம்பு   தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால்  வாலிசுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

 3.தர்மபுரி மல்லிகார்ஜுன  கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு   தூண்களின் அடி  பூமியில்  படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில்இரட்டை
 நடராஜர் தரிசனம்  செய்யலாம்.

5. கருடாழ்வாரின்  நான்கு  கரங்களுள்  இரண்டு கரங்களில்சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும்  ஸ்தலம்,கும்பகோணம்  அருகே வெள்ளியங்குடி. 108  திவ்யதேசத்தில்இங்குமட்டும் இது போல் காட்சி  தருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன்  சன்னதியில் முதலில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8, 16, என்று.ஆனால் கோவில் வாயிலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனின் முகத்தில்வியர்வை துளிர்ப்பதைக் காணலாம்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள  ராமானுஜர் உருவம் விக்ரஹமோ,வேறு 
உலோகப்  பொருளால் ஆன வடிவமைப்போ  இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டமூலிகைப் பொருளால்  ஆனதாகும்..

8.
திருநெல்வேலிகடையம் அருகே நித்ய கல்யாணி  உடனுறை விஸ்வநாதர்கோயிலில் உள்ள  வில்வமரத்தில்  லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத்திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு  வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர்.

10.விருதுநகர்,சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர்   ஆலயத்தில் உள்ள  நந்திக்கு கொம்போ,காதுகளோ இல்லை.

11.ஆந்திராவில் சாமல்  கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில்
சந்திப்பில் உள்ள  72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்சில நூறு மைல்களுக்கு அப்பால்  உள்ள பத்ராசல ஆலயத்தில்  உள்ள ஸ்ரீராமன் திருவடிகளும்  ஒரே மட்டத்தில்   உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள   விருஞ்சிபுரம் என்ற  தலத்தில்உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த  சந்திரவடிவில் 1முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின்  வழியேஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணில்விழுகிறதோ அதுதான் அப்போதுள்ள  நேரம் ஆகும்.

 13. சென்னைதிருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேதநாராயண பெருமாள்தலையிலிருந்து  இடுப்புவரை மனிதஉருவமும் ,  கிழே  மீன்வடிவமும்  கொண்டுள்ளார்.
14. 
தருமபுரி பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீஅபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில்  நவக்கிரகங்கள் பெண்  வடிவில் உள்ளன

உமா பாலசுப்ரமணியன்.


No comments:

Post a Comment