நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி
வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்
வரிசையில் மிகப்பெரிய ஒழுங்கு ஒன்றுஇருப்பதை கூர்ந்துகவனித்த ால்
உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்
வரிசையில் மிகப்பெரிய ஒழுங்கு ஒன்றுஇருப்பதை கூர்ந்துகவனித்த ால்
உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில்
நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.
எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம்
ஏற்பட்டிருக்காது. இதனால்,ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி
போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்தகோயில்களுக்கு
அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு
உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி
என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு
செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து
என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால்,
குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை
வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது
உருவாக்க முடியுமா? அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே
இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல்,
அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம்
வாழ்க்கைப்போக்குஉள்ளது? இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை
மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட
இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல்,
அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம்
வாழ்க்கைப்போக்குஉள்ளது? இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை
மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட
பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு
பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம்
முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ
வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுதரும்.குலதெய்வம் பெரும்பாலும் சிறு
தெய்வமாகவே காணப்படும். ஆனால்அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு
தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.
எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை
எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.அந்த புனித
ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும்
கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு
குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. நம் குடும்பத்தை பற்றி அறிய
யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை
அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே
தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த
மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு
செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர
கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.
மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம்
மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று
விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும்
உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை
வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில்
ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன்
பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம்
முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க
ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது
கிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க வருடத்திற்கு ஒரு
முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும்.
புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை
தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க
வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க
திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.ஒருவரது குலம்
ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவேண்டுமனால் குலதெய்வ
வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற
தெய்வங்களின் அருள்கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது
அனுகிரகம்இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,
யாகம் செய்தாலும்,ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா
என்பது சந்தேகம்தான்.எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு
அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள்செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள்.
பூஜைகள் நடைபெற ஏற்பாடுசெய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கைபோகும் போக்கை…
அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள்செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள்.
பூஜைகள் நடைபெற ஏற்பாடுசெய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது,
அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம்
இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன்
லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது
தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக
வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால
மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது
ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.
ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு
மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....?
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா பெண்ணா
என்பதை முடிவு செய்வது ஆணே.ஒவ்வொரு குழந்தைக்கும்
23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய்
மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்
தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx
க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என
இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x
சேர்ந்தால்பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம்
அறுதியிட்டுக் கூறி உள்ளது. ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது
என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில்
பிறந்த பெண்ணோ, ஆண ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே
இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்
என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில்
பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும்
இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும்
ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி
வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம்
இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம்
தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக. வழிவழியாக
என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார்,
மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது
ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு த் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு
வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள்
ஆண் குழந்தைகளுக்க முக்கியத்துவம் அளித்திருக்கின் றனர்.
என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார்,
மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது
ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு
வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள்
ஆண் குழந்தைகளுக்க முக்கியத்துவம் அளித்திருக்கின்
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி
என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம்
இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக்
கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y
க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்
தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே. ஒரு ஆணால் மட்டுமே இந்த y
க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.
பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.
ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும்
தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர்
பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும்
பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல்
அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு
ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y
க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும்,
பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment