Thursday, October 30, 2014

பக்தி பக்தி செய்வது எதற்காக?

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)


ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு விளைவு இருக்கிறதுபௌதிக விஞ்ஞானம் முழுவதும் இந்தக் காரணம் - விளைவு(cause & effect) பற்றிய விதிகளைக் குறித்ததேயாகும்மாற்ற முடியாத இந்த விதிகளாலேயே உலகம் ஒழுங்குடன்இயங்குகிறதுஏதோ ஒரு பேரறிவு இருப்பதால்தான் இப்படிப்பட்ட விதிகள் உண்டாகிஅவை எல்லாம் ஒழுங்காகஇணைந்துஉலகவாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறதுபௌதிக உலகில் காரணம் - விளைவு என்கிற தவிர்க்கமுடியாத சங்கிலி இருந்ததால் மனித வாழ்க்கையிலும் அது இருந்துதானே ஆகவேண்டும்நாம் செய்கிற சகலகாரியங்களுக்கும் விளைவு இருந்துதான் ஆகவேண்டும்நல்ல காரியங்கள் செய்தால் அதற்குச் சமமான நல்லவிளைவுகளை பெறுவோம்கெட்டதைச் செய்தால் அதற்கு சமமான கெட்ட பலன்களைப் பெறுவோம்இப்படி பலன்களைதருகிற 'பலதாதாதான் பிரபஞ்சத்தை நடத்தி வைக்கிற மகா சக்திஈஸ்வரன்பகவான்ஸ்வாமிகடவுள்பரமாத்மாஎனப்பட்டவன்.
மனசு இருக்கிற வரையில் அது சஞ்சலித்துக் கொண்டேதான் இருக்கும்நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான்செய்யும்புண்ணியத்தோடு பாபத்தையும் செய்து கொண்டேயிருக்கும்இந்தப் பாபத்துக்கு விளைவாக கஷ்டங்ளைப்போக்கடிப்பதற்காகவே பொதுவில் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள்இதைத்தான் பக்தி என்று நினைக்கிறார்கள்.ஈசுவரன் மனசு வைத்தால் நம் பாபத்துக்குப் பிரதியான கஷ்டத்தை தராமலும் இருக்கலாம்ஆனால் அவன் கஷ்டத்தைப்போக்கத்தான் வேண்டும் என்று நிற்பந்தம் செய்ய நமக்கு யோக்கியதை இல்லைஏனென்றால் நம் கர்மாவுக்கு பலனாகஇந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருப்பவனே அவன்தான்ஆகையினால் கஷ்டம் வந்தாலும்அதைப் பொருட்படுத்தாமல்இருக்கிற மனோபாவத்தைப் பிரார்த்திப்பதே இதைவிட உத்தமமாகும்ஆனால் இந்தப் பிரார்த்தனைகூட நிஜமான பக்திஅல்ல.
நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக ஆகிறதுஅதாவதுஈஸ்வரனுடைய எல்லாம் அறிந்த ஸர்வஞானத்துக்குக் குறை உண்டாக்குகிறோம். 'இந்தக் கஷ்டத்தைப் போக்குஅல்லதுகஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்றுஎன்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான்என்று ஆகிறதுஅதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம்இப்படி ஞானசமுத்திரமாககிருபா சமுத்திரமாக இருக்கிற ஈஸ்வரனுடைய ஞானம்கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிறபிரார்த்தனை உண்மையான பக்தி இல்லைஆனால் இப்படிப்பட்ட பிரார்த்தனையால் மனச்சுமை தற்காலிகமாகவாவதுலேசாகிகொஞ்சம் சாந்தி பிறக்கிறதுநாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டுஈஸ்வரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமேஅதுவும் நல்லதுதான்அவனும்நாம் அவனுடையஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூடப் பொருட்படுத்தாமல்நம் கர்மாவையும் மீறிப்பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம்ஆனாலும் ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்றுலோக வாழ்க்கையில் வந்துகொண்டேதான் இருக்கும்ஆகையால் லௌகிகமான கஷ்ட நிவிருத்திக்காக பிரார்த்தனைபண்ணுவதற்கு முடிவே இராது.

'நீ எப்படி விட்டாயோ அப்படி ஆகட்டும்என்று சரணாகதி செய்வதுதான் பக்திதனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால்மனஸின் அழுக்குகள் நீங்கிஅது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும்அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம். 'எனக்கு என்று ஒன்றுமில்லைஎன்று யாரிடம் சரணாகதி செய்துவிட்டாலும் ஒரு பதியிடம் பத்தினி சரணாகதிசெய்தாலும் (அவன் தூர்த்தனான பதியாகக்கூட இருக்கலாம்); ஒரு குருவிடம் சிஷ்யன் சரணாகதி செய்தாலும் (அந்த குருபோலியாக இருந்தாலும்கூடச் சரி) - அப்புறம் நிச்சிந்தைதான்அதன் முடிவான பலனாக மோஷம்தான்ஆனால் ஏதோபுராணங்களில் இப்படிப் பதியிடம்ஆசாரியனிடம் சரணாகதி செய்தே தெய்வமாகி விட்டவர்களைப் பற்றிச்சொல்லியிருந்தாலும்பிரத்த்யக்ஷத்தில் இப்படி நம் மாதிரி குற்றம் குறை இருக்கக்கூடிய ஒரு மனுஷ்யனிடம் சரணாகதிபண்ணுவது என்றால் முடியத்தான் இல்லைநாம் சரணாகதி பண்ண லாயக்குள்ளவன் என்று தோன்றுகிற குரு கிடைத்து,அவனிடம் சரணாகதி செய்துவிட்டால் அப்புறம் ஸ்வாமிகூட வேண்டாம்தான்ஆனால் வாஸ்தவத்தில்நிஜமாகவேதிரிபுவனங்களும் யஜமானனாகஎல்லாம் தன் சொத்தாகக் கொண்டுள்ள ஸ்வாமியிடம்தான்நம்மால் கொஞ்சத்தில்கொஞ்சமாவது, 'எல்லாம் உன் உடைமையேஎனக்கென்று ஒன்றுமில்லைஎன்று சரணாகதி செய்துஅதனால் நிம்மதிபெற முடிகிறது.

பக்தி செய்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் ஆனந்தமே இல்லைஅன்பிலேஉள்ள ஆனந்தம் வேறேதிலும் இல்லை என்று அநுபவத்தில் தெரிகிறதுஆனால் நாம் யாரிடம் அன்பு வைத்தாலும்,என்றோ ஒருநாள் ஒன்று நாம் அவரைவிட்டுப் பிரிகிறோம்இல்லாவிட்டால் அவர் நம்மைவிட்டுப் பிரிகிறார்ஆனந்தஹேதுவாக இருந்த அன்பு அனைத்தையும் அழுகை மயமாகி விடுகிறதுநம்மை விட்டுப் பிரியாத ஒரே சாசுவதமானவஸ்து ஈஸ்வரன்தான்அவனிடம் அன்பு வைத்துவிட்டால்இந்த அன்பு என்றும் சாசுவதமாக ஆனந்தம் தந்து கொண்டேஇருக்கும்இந்த அன்பு முற்றுகிறபோது யாவுமே அவனாகத் தெரியும்ஒன்றிடம் அன்பு-அது காரணமாகவேஇன்னொன்றிடம் துவேஷம் என்றில்லாமல்எல்லாம் அவனானதால் எல்லாவற்றிடமும் ஏற்றத் தாழ்வில்லாமல் அன்பாகஇருப்போம்அன்பற்ற வாழ்வு வாழ்ந்து மனுஷ்ய ஜன்மாவை விருதாவாக்கிக் கொள்ளாமல் இருக்க பக்தியே உதவுகிறது.
பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போக்கடித்துக் கொள்ளலாம்அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்தாதநிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக் கொள்ளலாம்மனத்தின் அழுக்கைப் போக்கிக்கொள்ளலாம்அலைகிற மனஸைஒருமுகப்படுத்தலாம்ஈஸ்வரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம்என்றும் அழிவில்லாத சாசுவதமானஅன்பைப் பெற்று ஆனந்திக்கலாம்இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்ம பலனைத் தருகிறவனைத் தஞ்சம்புகுந்தால்தான் அவன் கர்மகதிக்குக் கட்டுப்பட்ட ஸம்ஸாரத்திலிருந்து நம்மை விடுவித்து முடிவில் முக்தி தருவான்.அதாவது அவனேதான் நாமாகியிருப்பதுஎல்லாமுமாகி இருப்பது என்று அநுபவத்தில் அறிந்துகொண்டுஅப்படியேஇருக்கச் செய்வான்இந்த அத்வைத ஞானத்தையும் முக்தியையும் அவன் கிருபையாலேயே பெறலாம்பக்திசெலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது.
இனி காரணமே இல்லாத பக்தி ஒன்றும் இருக்கிறது.

No comments:

Post a Comment