Tuesday, October 21, 2014

கடி ஜோக்ஸ் 111

சொத்தையே வேணும்னாலும் எழுதித்தர்றோம் அவரை எப்புடியாவது 

காப்பாத்துங்க டாக்டர்!

சரி, சரி கவலைப் படாதீங்க, நாளைக்கு நடத்த இருந்த ஆபரேஷனை 

கேன்சல் செஞ்சிடறேன்!
அப்பா : என்னம்மா சமையல் இது? சாம்பார்ல உப்பே இல்ல. ரசத்தில 

புளிப்பே இல்ல..
மகள் : போதும் நிறுத்துங்கப்பா.....இனிமே ஒரு வார்த்தை என் புருஷன பத்தி 

தப்பா பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்.


,,,,,,,,,,,,,,,,,,,,,

" பையன் வெடியை பாக்கேட்டோட முழுங்கிட்டான், ரொம்பக் கவலையா 

இருக்கு, எடுத்துட முடியுமா டாக்டர்?"
"கவலைப் படாதீங்க, அரை மணி நேரத்துல திரும்ப எடுத்துடலாம், 

பையனுக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது!"

"அதில்ல டாக்டர், அது கொஞ்சம் காஸ்ட்லி வெடி, வெடிக்கு எதுவும் 

பிரச்சனை இருக்குமா?
.......................................
பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க..?

லோராண்டி – னு வச்சிருக்கேன்…!

என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..?

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில்இடம் பெற்ற பேர் சார் 

இது…!

அது என்ன பாடல்?

நந்தவனத்தி லோராண்டி..!
.....................................................................

பையில் கொண்டுவந்த ஒரு பாட்டியிடம்முறுக்கு வாங்க மறுத்த ஒரு 

குடும்பம் ,ஒரு பேக்கரியில் ஐந்து நிமிடத்தில் ஐநூறை காலி செய்தது.

அந்தப் பாட்டி சொன்னது இன்னும் சுடுகிறது...இரண்டு பாக்கெட் 

வாங்கினிங்கண்ணா ஒரு வாய் சோறு சாப்பிடுவேன் '

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ?

பீலிங் proud நாங்க ஒரு பெரியம்மா கிட்ட ஊரில் முறுக்கு வாங்கினது 
.....................................................


வாழ்க்கைத் தத்துவம்

ஒரு ஆண் கல்யாணம்ஆகறதுக்கு முன்னாடி "இட்லி"

மாதிரி....அப்பா அம்மா அவனை பொத்தி பொத்தி வச்சுக்குவாங்க.

அதுவே அவனுக்கு கல்யாணம்ஆயிடுச்சுனா அவன் "தோசை"  
மாதிரி..

..வீட்டுக் க்காரம்மா புரட்டி புரட்டி போடுவா....
.
நீங்க தோசையா இல்ல இட்லியா......நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

.............................................



நோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..


டாக்டர்: கவலையே படாத.. இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்!.. 

இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்....

.........................................................


ஆம்புலென்ஸ் பாத்தவுடனே ஒதுங்கி நிக்கிறவன் வெளிநாட்டுக்காரன்...

ஆம்புலன்ஸ் பின்னாடியே போனா சீக்கிரம் போயிடலாம்னு   

கண்டுபிடிச்சவன் நம்மூர்காரன்...

No comments:

Post a Comment