* எந்த தெய்வத்தின் மூலம் எந்த பலன் கிடைக்க வேண்டுமானாலும் விநாயகரை வணங்கினாலே போதும். அவர் அந்த தெய்வத்திடம் கூறி அருளை பெற்றுத் தருவார்.
* இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம்' குட்டிக் கொள்ள வேண்டும்.
* செம்பைத் தினமும் கழுவி வெளுப்பாக்குவது போல, மனதில் தினமும் சேரும் அழுக்கையும் பக்தியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* ஆசையை விட்டு மனம் கட்டுப்படும் வரை, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பைத்தியமாகத்தான் இருக்கிறான்.
* ராமநாமத்தை தாரக மந்திரம் என்கிறோம். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்குவது' என்று பொருள்.
* நம் துன்பத்தையே பெரிதாக நினைக்கக்கூடாது. அந்த துன்பத்துக்கு மத்தியிலும், நம்மால் உலகத்துக்கு நலம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.
* எந்தக்குற்றமும் செய்யாதவன் பாவமற்றவன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.
* பிறரிடம், நம் அன்பை ஒப்புக்கு காட்டாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்.
* வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டால், பொருளுக்காக எப்போதும் அலைய வேண்டிய அவசியமில்லை.
* வெளிநாட்டு வியாபாரத்தால் அந்நியச் செலாவணி ஒரு தேசத்துக்கு கிடைக்கும். அதுபோல, மனிதனுக்கு மறு உலகத்தில் செலாவணி இறைவனின் திருவருள் ஒன்று தான். அதனைப்பெற வாழும் காலத்திலேயே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
* ஒரு செயலை "நான் செய்கிறேன்' என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம் தான்.
* சிவநாமாவைக் கூறுவதால் பாவங்கள் விலகி மோட்சத்திற்கான வழி கிடைக்கும்.
* வயலில் களை பிடுங்குவது போன்று, வாழ்க்கையில் தேவையில்லாத செலவுகளைப் பிடுங்கிப் போட்டால், புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.
* தங்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு செயலை செய்யும் முன், பகவானுக்கு அனைவரும் சேவை செய்ய வேண்டும்.
* இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம்' குட்டிக் கொள்ள வேண்டும்.
* செம்பைத் தினமும் கழுவி வெளுப்பாக்குவது போல, மனதில் தினமும் சேரும் அழுக்கையும் பக்தியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* ஆசையை விட்டு மனம் கட்டுப்படும் வரை, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பைத்தியமாகத்தான் இருக்கிறான்.
* ராமநாமத்தை தாரக மந்திரம் என்கிறோம். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்குவது' என்று பொருள்.
* நம் துன்பத்தையே பெரிதாக நினைக்கக்கூடாது. அந்த துன்பத்துக்கு மத்தியிலும், நம்மால் உலகத்துக்கு நலம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.
* எந்தக்குற்றமும் செய்யாதவன் பாவமற்றவன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.
* பிறரிடம், நம் அன்பை ஒப்புக்கு காட்டாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்.
* வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டால், பொருளுக்காக எப்போதும் அலைய வேண்டிய அவசியமில்லை.
* வெளிநாட்டு வியாபாரத்தால் அந்நியச் செலாவணி ஒரு தேசத்துக்கு கிடைக்கும். அதுபோல, மனிதனுக்கு மறு உலகத்தில் செலாவணி இறைவனின் திருவருள் ஒன்று தான். அதனைப்பெற வாழும் காலத்திலேயே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
* ஒரு செயலை "நான் செய்கிறேன்' என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம் தான்.
* சிவநாமாவைக் கூறுவதால் பாவங்கள் விலகி மோட்சத்திற்கான வழி கிடைக்கும்.
* வயலில் களை பிடுங்குவது போன்று, வாழ்க்கையில் தேவையில்லாத செலவுகளைப் பிடுங்கிப் போட்டால், புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.
* தங்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு செயலை செய்யும் முன், பகவானுக்கு அனைவரும் சேவை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment