Wednesday, March 26, 2014

தந்தையின் அன்பை உணராத சிறுவன்


ஒரு சிறுவன் அவன் மீது அன்பு காட்டிய
தந்தையை அவர்  இவ்வுலகில்
உள்ளவரை வெறுத்து ஒதுக்கினான்

காரணம் அவர் அவனுக்கு கைசெலவிற்கு
 பணம் கொடுப்பதுபோல் கொடுத்து உடனே வாங்கி
அங்கு வைத்திருக்கும் உண்டியலில் போட்டுவிடுவார்.

அதே சமயம் அவரும் அதே தொகையை
தன் பங்காக உண்டியலில் போட்டுவிடுவார்.

அவர் அடிக்கடி தன் மகனிடம் சொல்வது
நாம் பிறருக்கு கொடுக்கத்தான் வேண்டுமே ,
பிறருக்கு உதவத்தான் வேண்டுமே தவிர 
நமக்கே அனைத்தையும் செலவு
செய்துகொள்ளக் கூடாது என்பார்.

இதை புரிந்துகொள்ளாத அந்த மகன்
அவர் இறந்தபின் ஒரு அநாதை விடுதியிலிருந்து
அவர் தந்தையைப் பாராட்டி வரப்பெற்ற நன்றி கடிதங்களைப் பற்றி அறிந்துகொண்டு தான் தந்தையை தவறாக புரிந்துகொண்டுவிட்டதாக வருந்துகிறான்.

தந்தையைப் போல் அவனும் பிறருக்கு
உதவும் பணியில் ஈடுபடத் தொடங்குகிறான.

அவசியம் அனைவரும்
காணவேண்டிய காணொளி இது.

இணைப்பு. கீழே. 
http://vitaminl.tv/video/3149?ref=fbsm

No comments:

Post a Comment