முருகனுக்கு...அரோஹரா ...
1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.
2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம்,லோபம், மதம், மாற்சர்யம்.
3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்குஅருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப்பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது)அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்தசிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.
4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம்மூன்றாகும்.
1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்ததுபோரூர் ஆகும்.
5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில்சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடுமோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.
6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத்தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால்தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம்,கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறுஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை,தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார்துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக்காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள்கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.
9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:
1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.
10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும்சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப்பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனதுஅருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றனஎன்பது அதிசயமாகும்.
11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள்விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான்முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர்தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.
12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரிஅதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும்நிவர்த்தியாகும்.
13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை,திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.
14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன்என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான்.ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்'' என்றும்சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன்என்றும் பெயர் கொண்டான்.
15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின்வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.
16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன்,குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன்,தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி,பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன்,அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன்ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.
17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்'' நூலினைஇயற்றியவர் அருண கிரிநாதர்.
18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்றுஅருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும்,சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும்சித்திரிக்கப்பட்டுள்ளான்.
21. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில் காவியம்இயற்றியவர் மகாகவி களிதாசர்.
22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப்பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.
24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்றபராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர்,சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன்அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப்பெயர் பெறும்.
26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர்பாடியுள்ளனர்.
27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனைமட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ளஇடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி,குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.
30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகியபெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழாஆகும்.
31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிறமேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும்பேசப்படுகின்றார்.
32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன்வழிபாடு உள்ளது.
33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோருபெயர் உள்ளது.
34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன்என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு.இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளிவடிவில் உணர்த்துவது ஆகும்.
36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறுகுணங்களே ஆறுமுகம்.
37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரமமகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்றுஅழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.
38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப்பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம்தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத்தணிகையாற்றுப் படை கூறுகின்றது.
39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ்,ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலியநாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.
40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா,காந்தன் முதலியவை ஆகும்.
41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.
42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம்வீரபத்திரர்.
43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்தகோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில்உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.
44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில்புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த்திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக்கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாகஉள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில்சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.
45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ.தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப்பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும்முருகனால் உண்டாகும்.
46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன்கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்குசிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.
47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல்இழுக்கப்பட்டது.
48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது.பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்றுஇத னைக் கூறுவார்கள்.
9. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.
50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.
51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதிதிருவண்ணாமலையில் உள்ளது.
52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டுரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.
53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத்தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில்திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ளசின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம்அமைந்துள்ளது.
54. கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.
55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.
56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில்உள்ளார்.
57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.
58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறைஎடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.
59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில்முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானைகிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள்.இப்படி வேறு எங்குமில்லை.
60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.
ஓதி மலை முருகனின் அற்புதம்”
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம் ஓதி மலை, இங்கே முருகன் கோவில் அமைந்துள்ளது. வறட்சியான பகுதி, மரங்கள் அதிகம் இருக்காது, இருக்கும் பெரும்பாலான மரங்களும் முள் மரங்களே. கோவில் 1650+100 செங்குத்தான படிக்கட்டுகளை கொண்டது, நகரத்து வயதானவர்கள் ஏற முடியாது, வயது குறைந்தவர்களே இதில் ஏற திணறி விடுவார்கள், உண்மையிலேயே மிக சிரமம் முதல் முறை எங்கும் உட்காராமல் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் நாக்கு தள்ளி முக்கால்வாசி முக்கி முக்கி போயும் வேறு வழி இல்லாமல் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சம் மறந்து பின்னால் சாய்ந்தாலும் பல்டி போட்டு விடுவோம், அவ்வளோ செங்குத்தான பகுதி. மிகைப்படுத்தி கூறவில்லை. நான் சபரி மலை சென்ற போது கூட இவ்வளோ சிரம படவில்லை. இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே போக முடியும்,வாகன பாதை கிடையாது.
கோவில் மிக எளிமையாக இருக்கும்,எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல். இந்த கோவிலுக்கு வரும் ஐயர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருவார் (படி ஏறி படி ஏறி திடமாக இருக்கிறார்) ஒரு சில நாட்கள் கோவிலிலேயே தங்கி விடுவார். அவர் எப்படி தான் ஏறி போய் பூசை செய்கிறாரோ !! நினைத்தாலே கண்ணை கட்டுது.எந்த வித ஆடம்பர அலங்காரமும் இல்லாமல் எளிமையான முருகன் சிலை, பார்க்கவே அற்புதம். இத்தனை உயர மலையிலும் ஒரு கிணறு உள்ளது. கஷ்டப்பட்டு நடந்து வந்தாலும் மேலே வந்ததும் ஒரு நிம்மதி கிடைக்கிறது.
விசயத்துக்கு வருகிறேன், என்னுடைய அக்கா இந்த கோவில் முருகன் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள், இங்கே சென்று வேண்டினால் நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்பிக்கை, அதை உண்மை ஆக்கும் வகையில் ஒரு சில சம்பவங்கள் நடந்தன, எனவே எனக்கும் மிக ஆச்சர்யம். நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்பதை நான் முழுமையாக நம்புபவன். கடவுள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. நடந்த ஒரு சில விஷயங்கள் என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
என் அக்காவின் கணவர் உறவினர் 4 பேருக்கும் எங்கள் உறவினர் ஒருவருக்கும் இந்த கோவில் சென்ற வந்த பிறகு குழந்தை பிறந்தது (நீண்ட காலமாக குழந்தை இல்லாமல்) மூவரின் நிலை எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் உண்மை. எனக்கு தெரிந்த மீதி இருவர் பற்றி கூறுகிறேன்
ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, பல மருத்துவர்களிடம் காண்பித்து விட்டார்கள் மருத்துவர்களும் ஆணின் விந்தணுவில் சரியான அளவு உயிரணு இல்லை,எனவே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார்கள், திருமணம் ஆகி 5 வருடம் ஆகி விட்டது. அனைவரும் கை விட்ட பிறகு அனைவருக்கும் நினைவு வருவது கடவுள் தானே. எனவே என் அக்காவின் விருப்பத்திற்காக இதையும் முயற்சி பண்ணலாமே என்று அவர்கள் கோவில் சென்று முருகனை வேண்டி வந்தார்கள், அடுத்த மாதமே அவர்கள் கருவுற்றார்கள், தற்போது குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள். இது நம்பவே முடியாத அதிசயம்.
இன்னொரு தம்பதி எனக்கு மிக நெருங்கிய உறவினர் திருமணம் ஆகி 20 வருடம் ஆகி விட்டது ஒரு முறை கருத்தரித்து அழிந்து விட்டது. பிறகு கருவுறவே இல்லை, அவரின் (ஆணின்) விந்தணுவில் உயிரணு இல்லை என்று கூறி விட்டார்கள். இவரும் இந்த கோவில் வந்து வேண்டி கொண்டார், இதற்காக பல விரதங்கள் பல வேண்டுதல்கள் என்று பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. பிறகு என் அக்காவின் ஆலோசனை படி (என் அக்கா மருத்துவர்) சென்னை கமலா மருத்தவரிடம் ஆலோசனை பெற்று செயற்கை முறையில் தற்போது கருத்தரித்துள்ளார்கள்.
இது அறிவியல் தான் இங்கே எங்கே கடவுள் வந்தார் என்றால் என்னிடம் பதில் இல்லை. 20 வருடம் குழந்தை இல்லாமல் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி பல நாட்கள் அழுது, மற்றவர்களின் பேச்சுகளை சமாளித்து இந்த நிலையை அடைந்தவர்களிடம் போய் இது கடவுள் செயல் அல்ல அறிவியல் என்று கூறினால் நம்மை அவர் என்ன கூறுவார் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. வெளியே இருந்து கூறுகிறவர்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம், கஷ்டபடுகிறவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். தற்போது கருவுற்று இருக்கிறார்கள், இன்னும் குழந்தை பிறக்கவில்லை, அவர்கள் நலமுடன் குழந்தை பெற அந்த முருகன் ஆசிவர்த்திப்பானாக (Updated: இவருக்கு குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள்).
இன்னொரு பெண், இவருக்கு திருமணமே ஆகவில்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் சரியான வரன் கிடைக்கவில்லை. என் திருமணத்திற்கு முன்பு இருந்து பார்க்கிறார்கள். தற்போது என் அக்கா கோவிலுக்கு சென்று வர கூறி, போய் வந்த பிறகு தற்போது நல்ல இடத்தில் வரன் கிடைத்துள்ளது.
கோவிலுக்கு போகாமல் இருந்தால் கடவுள் வரன் கொடுக்க வில்லை என்றால், அது என்ன கடவுள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. திருமணம் ஆகாமல் தள்ளி போவது எவ்வளோ பெரிய கொடுமை என்று அந்த நிலையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் அதுவும் குறிப்பாக பெண்கள். அந்த நிலையில் இருப்பவர்கள் கடவுளிடம் உன்னை தேடி வந்தால் தான் கொடுப்பாயா என்றெல்லாம் கேக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.
நான் மூன்று முறை இதோடு சென்று வந்துள்ளேன் எனக்கும் பல நன்மைகள் நடந்ததாகவே கருதுகிறேன். என் பகுதியை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் ஏன் கூறினேன் என்றால் இதை போல கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள், பல முயற்சிகளை செய்து இருப்பார்கள், கடைசியாக இதையும் ஏன் முடிந்தால் முயற்சித்து பார்க்க கூடாது, நல்லது நடக்கவில்லை என்றாலும், கெட்டது நடக்க வாய்ப்பில்லையே. நம்பிக்கையோடு எதை செய்தாலும் அதற்க்கு பலன் உண்டு, அது கடவுளுக்கு எனும் போது கொஞ்சம் கூடுதல் சக்தி இருப்பதாகவே உணருகிறேன்.
கடவுள் நம்பிக்கை பற்றி பேசும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது நமது பதிவர் அனுராதா அவர்கள் கூறியது தான். “நான்கு பக்கமும் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்”
தூரத்தில் இருந்து ஒரு கிளிக்
பார்க்குறதுக்கு சின்ன மலையா இருக்கேன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, ஏறும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
மலையின் ஆரம்பம்
ஒவ்வொரு 300 படிக்கட்டிற்கும் ஒரு இளைப்பாறும் மண்டபம் இருக்கும் (850 படிக்கட்டு வரை)
சமதரையே கிடையாது முழுவதும் படிக்கட்டே தான்
850 வது படிக்கட்டு அருகே ஒரு சிறு கோவில்
இதன் பிறகு இளைப்பாறும் மண்டபம் கிடையாது
உயரத்தில் இருந்து ஒரு கிளிக்
கோவிலை அடைந்த பிறகு கோவிலின் முகப்பு பகுதி
கடைசி 100 படிக்கட்டு இங்கே தான்
முருகனை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கோபுரம் மட்டுமே எடுத்தேன்
தூரத்தில் தெரிவது பவானி சாகர் அணையின் தண்ணீர்
மேக மூட்டம் ஒரு சில இடங்களில் இருப்பது மேலே இருந்து பார்க்கும் போது அழகாக தெரிந்தது
வெய்யில் நேரத்தில் காலில் செருப்பு இல்லாமல் ஏற இறங்க முடியாது, ஒரு முறை என் அக்கா இருவர் கோவிலுக்கு போகும் போது வெய்யில் இல்லாததால் செருப்பு போடாமல் சென்று விட்டு வரும் போது வெய்யில் கொளுத்தி, நடக்க முடியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது தனி கதை. கருங்கல் என்பதால் சூடு தாறுமாறாக இருக்கும்.
“ஓதி மலை செல்க முருகன் அருள் பெருக“
Happy moments, praise God. Difficult moments, seek God. Quiet moments, worship God. Painful moments, trust God. Every moment, thank God
மேலும் சில:
ReplyDeleteமுருகன் பாடல்கள் பலவும் அமைந்த ராகம் ஷண்முகப்ரியா.
முருகனின் தொண்டர் எம் ஏ சின்னப்பா தேவர் .
இந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும் தமிழ் கடவுள் என அறியப்படுவது முருகன் மட்டுமே.
அறுபடை வீடுகளின் மகத்துவம்:
பழனி - ஆண்டி கோலம் -மாம்பழம் கிடைக்காத கோபத்தில் .
திருப்பரங்குன்றம் - தெய்வானையை மணந்த கோலம்.
திருத்தணி - வள்ளியை மணந்த இடம்.
திருச்செந்தூர் - குன்றில் இல்லாமல் கடலோரத்தில் அமைந்த, சூரபத்மனை வதம் செய்த இடம்.
சுவாமிமலை - தகப்பனுக்கு பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பனுக்கே ஸ்வாமியான சுவாமிநாத கோலம்.
பழமுதிர் சோலை - வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை .
விஜி
ReplyDeleteஉன்னுடைய எக்ஸ்ட்ரா தகவல்கள் ரொம்ப அருமை .அறுபடை வீட்டைப் பற்றிய விளக்கங்கள் ரொம்ப எளிமை அறுபடை வீட்டின் மகிமையை எடுத்துக்காட்டுகின்றன .தேங்க்ஸ்
நன்றி மாதங்கி. முருகப் பெருமானைப் பற்றி நீங்கள் கொடுத்துள்ள 60 தகவல்களும் அருமை.கமலா அவர்களே எல்லாம் வேண்டாம். கமலா என்றே கூப்பிடலாம்.-கமலா
ReplyDelete