Thursday, November 3, 2011

நேர்மை

நேர்மை என்பது நீதிநெறி  தவறாமல்  இருப்பது.  உண்மையாகவும் வெளிப்படையாகவும்  பேசுவதும் ஒரு வகை நேர்மை . ஒரு சில சமயம் பொய்  பேசுவது நல்லதுக்கே என்றால் உண்மையை மறைப்பது  நல்லதே.பொய் சொல்லாதவர்கள் இருப்பது அரிது. ஆனால் அதே பொய்யை நேர்மை தவற சொன்னால், அது அநியாயம் மட்டும் இல்லை,அதர்மமும் கூட.கண்டிப்பாக அது கஷ்டத்தில் கொண்டு போகும்.

நம் மனதுக்குள் உண்மையைச் சொன்னால் ,அது கண்ணியமாக இருப்பது. அதையே மற்றவர்களிடமும்சொன்னால் அது  நேர்மையாக இருப்பது.
சில சமயம் உண்மையை மனசு ஒத்துக்க் கொள்ளாது.நம் தவறையோ ,தப்பையோ,குறைகளையோ ஒத்துக் கொள்வது என்பது மிகக் கடினமான விஷயம். அதுவும் எல்லோர் முன்னிலும் பகிங்கரமாக  ஒப்புக் கொள்வதற்கு மிகப் பெரிய மனசு வேண்டும்.

உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் ஒருத்தனே ஒருத்தன் நின்றாலும் போறும், உண்மை வாழும்.

1 comment:

  1. Sriniketan

    Correct dhan, yaar andha oruthar..just kidding, naam nimmadhiyudan vaazhavum pirarai vaazha vaikkavum, nermaiyaiyaai vaazhvadhu dhan romba seriyaana paadhai.


    Don't forget to visit at your leisure and enjoy http://www.indusladies.com/forums/bl...n/index39.html

    ReplyDelete