Wednesday, September 7, 2011

அய்யோ பாட்டி வரா ! பாகம் 1


சுமதி பாட்டியைப் பற்றியும் கிச்சா பேமிலி பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சு  கொள்ள "சுதா இல்லம் உள்ளே நுழைவோம் ,வாங்க போகலாம்.  

 சுமதி பாட்டி தாமோதரன் தம்பதிக்கு பன்னண்டு  வருஷம் கழிச்சு பிறந்த ஒரே மகன் பாலாஜி , அந்த பாலாஜிக்கு ஆண்டவன் கிருபையால் ! எட்டு  குழந்தைகள் அதில் ஒரு  இரட்டை ஆண் குழந்தைகள் !!! அவர்கள் குழந்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தபிறகு பாலாஜி நாப்பது வயதை நெருங்கும் போது  எட்டாவதாக  பிறந்தவன் தான் , கிருஷ்ணா [கூப்பிடுவது கிச்சா ]. கிச்சாவிற்கும் அவன் முதல் அண்ணனுக்குமே பதினைந்து வருஷ வித்யாசம் .

இவனுக்கு மூணு அக்காமார்கள் நாலு அண்ணன் மார்கள் , இதில் ஒரு அண்ணன் ஒரு அக்கா மேலோகம் போயாச்சு.மெட்ராஸில் மத்த பேரன் பேத்திகள் இருந்தாலும் பாட்டி கிச்சா   வீட்டில் தான் வந்து இருக்கணும், இருப்பாள் .இதில் துளி   சந்தேகமும் இல்லை.பாலாஜி,வசந்தா தம்பதிகள் இரண்டாவது பெண்ணிடம் கொஞ்ச நாள் இருப்பதற்காக சிங்கப்பூர் போயிருக்கிறார்கள் .

இந்த கிச்சா தான் சுமதி பாட்டிக்கு கொள்ளி போடணும், அதனால அவன் என்ன கஷ்டமா இருந்தாலும் சுமதி பாட்டியை நல்லா பாத்துக்கணும் , சும்மா இல்லை பத்து ஏக்கரா அரிசி சாகுபடி நிலம், இரண்டு பெரிய வீடு , முப்பது சவரன் தங்க நகை ,பத்து கிலோ வெள்ளி பாத்திரம் எல்லாம் இவனுக்கு தான் வரப் போறது .

 சுமதி பாட்டி கிராமத்திலேயே பிறந்து வளர்ந்ததால் ,ரொம்பவே மடி ஆசாரம்.இதெல்லாம் 'ஜான்' க்கோ [ஜானகி  யாருன்னு சொல்லலையே!, ஜானகிங்கறது வேற யாரும் இல்லை, நம்ம நாயகன் கிச்சாவினுடைய தர்மபத்தினி ஜானகிஎன்கிற 'ஜான்'தான். கிச்சா செல்லமாக அவளை 'ஜான்' னு, கூப்பிடுவான், அவளும் அவனை 'கிச்'னு கூப்பிடுவாள். கிட்ட தட்ட வீட்டில்எல்லோருக்கும் செல்லப் பிள்ளை கிச்சா  தான்.அவனை யாரும் குறை கூற மாட்டார்கள் ,ஜானகியையும் கடைக்குட்டி குழந்தை போலே செல்லமாகதான் பார்ப்பார்கள். 

  சுமதி ,தாமோதரன் என்கிற  பெயரின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து   "சுதா  இல்லம் "னு வீட்டிற்கு பெயர் இட்டார்கள் .இந்த வீட்டிற்கு  கிச்சா பாதியும்  சுமதி  பாட்டி மீதி பாதியும் போட்டு கட்டினார்கள்..
*                                                                      *                                                                       *
"காலங்  கார்தாலையிலே யாரு அது போன் பண்ணி உசிரை வாங்குறது?" எரிச்சலோடு சொல்லிக் கொண்டே வந்த கிச்சாபோனை எடுத்து "ஹலோ"சொன்னான்.

 கார்தாலை போன் என்னவாக இருக்கும் , இப்போ யாருக்கு டைம் சரியில்லேன்னு யோசிச்சிண்டே கிச்சா பக்கத்தில் வந்த ஜான் பாரலல் லைனை எடுத்து கூடவே  ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

   எதிர் முனையில் சுமதி பாட்டின்னு  தெரிந்ததுமே , அவளுக்கு வயத்தைக் கலக்க ஆரம்பிச்சிடுத்து.  இது நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை, பாட்டி  ரொம்ப நாளாவே மெட்ராஸ் வரணும்னு சொன்னது ஞாபகம் வந்தது .ஜான் மனதில் நினைத்துக்  கொண்டே இருந்த   சமயத்துக்குள் கிச்சா போனில் பாட்டியுடன்  பேசி முடித்து விட்டான் .

விஷயம் இது தான்  , அடுத்த வாரம் பாட்டியின் நெருங்கிய சிநேகிதி சிந்தாமணியின் கொள்ளு பேரனுக்கு பூணல் அதனால் பாட்டி மெட்ராஸ் வந்து கிச்சா வீட்டில் தங்கி பூணலை  முடித்துக் கொண்டு சில நாள் இருந்துட்டு கணபதிபுரம் திரும்பிப்  போவதாக இருக்கிறாள்.

இனி மேல் தான் இருக்கு வேடிக்கை!!!!!!!!!!!!!!!
.

No comments:

Post a Comment