Monday, August 22, 2011

இது ஏன்


போனில் பேசுகிறவர்கள் அடுத்த பக்கம் இருப்பவர் பார்க்க முடியாது  என்று தெரிந்திருந்தும் கை அசைத்து  சைகையில் பேசுவது ஏன்?

   நம்மிடம் சில்லறை இல்லாவிட்டால் கடைக் காரரிடம் அடுத்த முறை தருவதாகச் சொல்லிவிட்டு அவர் அதை ஒப்புக்கொள்ள எதிர் பார்க்கிறோம். ஆனால் அதே கடைக்காரர் நம்மிடம் சில்லறைஇல்லை  என்றால் நாம் உடனே அந்த சில்லறைக்கு வேறு எதாவது
வாங்கிவிடுகிறோம்.அவர்  நம்மை  நம்பணும் ,ஆனால் நாம்அவரை  நம்புவதில்லை  அது ஏன்?

 நாம் கால் கடுக்க க்யூவில் நிற்கும் சமயம் யாராவது வந்து நடுவில் புகுந்தால் உடனே அவரை திட்டித் தீர்த்து விடுகிறோம். அதே நம்ம பண்ணும் போது யாராவது திட்டினால் நமக்கு பிடிப்பதில்லை. அது ஏன்?

குடை எடுத்துக் கொண்டு போனால் அன்று மழை வருவதில்லை., ஆனால் ஒரு நாள் எடுத்துக்கொண்டு போக மறந்தால், அன்று  மழை   வெளுத்து வாங்குவது ஏன்? 

 வம்பு கிடைக்கும் சமயம் பார்த்து செல் போனில்கரன்சி தீர்ந்தோ அல்லது பாட்டரி கம்மியாவது ஏன்

 ரயிலிலோ ,பஸ்ஸிலோ அல்லது  விமானத்திலோ ,
ஜன்னல் சீட்டுக் கிடைக்குமான்னு மனம் கிடந்து அலைவது ஏன்?

2 comments:

  1. Replies
    1. Re: கரை மேல் தெறித்த அலைத் துளிகள் 12
      http://www.indusladies.com/forums/showthread.php?t=144048#post2096506
      Posted by: Sriniketan
      On: 23rd January 2012 09:53 AM

      ஏன் என்ற கேள்வி, கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற பாட்டு தான் நினைவுக்கு வந்தது, இந்த தொகுப்பை படித்தவுடன்..:-)

      1..நம் பேச்சு உண்மை என்று அவர்கள் நம்புவதற்காக.. (பாவனையோடு பேசினால் தானே expressions நல்லா வரும்)hehe..

      2. முதலில் எதிர்பார்ப்பு,
      இரண்டாவது மற்றவரின் மீது நமக்கு இருக்கும்
      நம்பிக்கை இன்மை--மனித இயல்பு :-(

      3. நம்மளை copy அடிக்க விட்டுடுவோமா நாம..நமக்கு ஒரு rule மற்றவர்க்கு ஒரு rule தானே எப்போதும். :biggrin2:

      4. இதற்கு காரணம், நாம் தப்பு கணக்கு போட்டதுதான்..Weather man ai நம்பக்கூடாது :notthatway:

      5.வம்பு வேண்டாம் என்று தான்..அப்படி ஆகிறதோ..:hide:

      6. மலரும் நினைவுகள்..என்ன செய்ய :biggrin2:

      Sriniketan

      Delete