பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்!”
April 2, 2013 --Sage of Kanchi site
பெரியவாளை
செகந்தராபாத் அருகே உள்ளே ஒரு மலைக்குன்று மேல் உள்ள மஹா கணபதி கோவிலில்
தர்சனம் பண்ணினார் ஒரு பக்தர். அப்போது பெரியவா அவருக்கு தன் படமும்,
திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படமும் குடுத்தார். பக்தருக்கோ பரம
ஆனந்தம்! மெட்ராஸில் ஒரு ஸ்டூடியோவில் குடுத்து அப்படங்களைப் என்லார்ஜ்
பண்ணி, அழகாக frame பண்ணித்தரச் சொன்னார். இரண்டு நாட்களுக்குப் பிறகு
இடிபோல் செய்தி வந்தது….அந்த ஸ்டூடியோவில் தீப்பிடித்து ஏறக்குறைய எல்லாமே
எரிந்துவிட்டது! என்று. அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடினார்…….ஸ்டூடியோ
நிர்வாகி இவரைப் பார்த்ததும், “ஸார்…நீங்க கவலைப்படாதீங்க….நீங்க குடுத்த
பெரியவா படமும், வெங்கடாசலபதி படமும் பத்ரமா இருக்கு. நெருப்பு அதை
கொஞ்சங்கூட தீண்டலைங்க ஸார்…” என்றார். இது ஒரு ஆச்சர்யம்!
சந்தோஷமாக
அந்த படங்களை எடுத்துக் கொண்டு அவரும் ஒரு நண்பரும் காரில் பெரியவா
முகாமிட்டிருந்த கார்டேர் நகருக்கு சென்றனர். போகும் வழியில் ஒரு
பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தபோது அடுத்த
ஆச்சர்யம்……..மடத்து பாரிஷதர் ஒர்த்தர் இவர்களை அங்கே தேடிக் கொண்டு வந்து,
“மெட்ராஸ்லேர்ந்து கார்ல படம் கொண்டு வந்தவாளை பெரியவா ஒடனே அழைச்சிண்டு
வரச்சொல்லி சொன்னார்……..” இது என்ன! எதிர்கொண்டழைப்பது என்பது இதுதானா?
அல்ப ஜீவன்களான நம்மை அந்த மஹாப் ப்ரபு எதிர்பார்த்துக்
கொண்டிருந்திருக்கிறாரா! ஆடித்தான் போனார் பக்தர். இரண்டு கரங்களாலும்
புஷ்பங்களை அள்ளித் தூவினார் அப்படங்கள் மேல், சாக்ஷாத் பெரியவா!
அதே
பக்தர் ஒருமுறை திருக்கடையூர் சென்றார் தன் நண்பருடன். அப்போது
அமிர்தகடேசனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஆனந்தமாக கண்டு களித்துக்
கொண்டிருக்கும்போது, இவருக்கு ஒரு அரிய ஆனந்தமான ஒரு காக்ஷி !………கருவறை
லிங்கத்தின் மேல் பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத்
பெரியவா தெரிந்தார்! இவரோ, தனக்கு பெரியவா மேல் உள்ள பக்தியால் ஏற்பட்ட
மனப்ரமை என்று எண்ணினார். அதே சமயம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நண்பர்
இவர் தோளைத் தட்டினார்……..”ஸ்வாமி….உள்ள பாரும் ஒய்!….பெரியவா தெரியறாளா?
என்ன பாக்யம் ! என்ன பாக்யம்! சங்கரா.சங்கரா..” கண்கள் பனிக்க கன்னத்தில்
போட்டுக் கொண்டார். பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே
தான்தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப்
படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
மனம் திறந்த
பேச்சு - தெற்கே உதித்த சூரியன்
காலை நேரம்.ஒரு கிராமத்தின் சாலை
ஓரமாகப் பரமாச்சாரியார் நடந்து சென்று கொண்டிருக்கிறார் . பக்தர்கள் கூட்டம்
பராக்கு பார்த்துக்கொண்டும் நடு நடுவே ஜய கோஷமிட்டுக் கொண்டும் பின் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
ஒரு பெரிய குளம் . நீர் நிறைந்தும் தாமரை மலர்ந்தும்
காணப்படுகிறது. பின்புறமாக - ஆகாயத்தில் தகத்தகாயமாக சூரியனின் வருகை.
பரமாச்சாரியார் நின்றார்.
குளத்தின் படிகளில் ஒரு காட்சி . கிராமத்து வயது முதிர்ந்த ஏழை விவசாயி , குளத்தில்
குளித்து விட்டு நெற்றியிலும் உடலிலும் திருநீறு அணிந்தவாறு , உதிக்கின்ற சூரியனை
நோக்கி கைகளை உயரத்தூக்கி கும்பிட்டவாறு - கண்களை மூடி தியானத்தில்
இருக்கிறார்.
பரமாச்சாரியார் பரவசத்துடன் சில
நிமிடங்கள் அங்கேயே நின்று அந்த பெரியவரை பார்த்தவாறு இருக்கிறார். பிறகு
திரும்பி
" இது தான்
உண்மையான பக்தி " என்று கூறினார்.
ஆம். பரமாச்சாரியார் விரும்பியதெல்லாம்
ஆணவம் துளியும் கலக்காத எளிய பக்தியைத்தான் !
அவர் மூட நம்பிக்கைகளை ஒரு
போதும் ஆதரித்தது இல்லை . இந்து மதவாதிகள் நடத்திய டாம்பீகமான விழாக்களை தவிர்த்து
விடுவார். ஜாதகம் , வாஸ்து , பல வகையான விசித்திர வழிபாடுகள் ஆகியவற்றைப்பற்றி அவர்
முக்கியத்துவம் தந்தது இல்லை.
ஒரு முறை சாந்தோம் கடற்கரை பக்கம் பக்தர்கள்
சூழ அவர் வந்து கொண்டிருக்கிறார். ஓர் இளைஞர் - மெல்லிய உருவம் கொண்டவர் - முதல்
நாளில் இருந்து காத்திருந்தவர்- பரமாச்சாரியாரை நெருங்கினார். தனக்கு சித்து வேலை
கைவசம் வந்துவிட்டதாக கூறினார். சித்து மூலமாக வரவழைத்த சிறிய தெய்வ உருவங்களை
காட்டினார்.
பரமாச்சாரியார்
அமைதியாகக் கேட்டார். பிறகு அந்த தெய்வ உருவங்களை வெற்றிலை - பாக்கு - தேங்காய்
புஷ்பங்களுடன் சேர்த்து எதிரே அலைகள் கிளம்பும் கடலில் சேர்த்துவிடுமாறு கூறினார்.
" உனக்கு குரல் வளம் இருக்கிறது. தமிழ்நாடெங்கும் ராமாயணம் - பாகவதம் போன்ற
சொற்பொழிவுகளை நிகழ்த்து " என்று கூறி ஆசி வழங்கி அனுப்பினார்.
(ஆனால் அந்த இளைஞர் அப்படி
செய்யவில்லை. இன்று மிகப்பெரிய அளவில் சாமியாராக இருக்கிறார் ! )
அதே போல ,
ஒரு பெரிய அதிகாரி . தன் மனைவிக்கு அம்மன் அருள் கிட்டிவிட்டதாக பரமாச்சாரியாரிடம்
கூறி , மனைவியை அறிமுகப்படுத்தினார். அவர் மீது அம்மன் வந்து , அருள்வாக்கு கூற
ஆரம்பித்துவிடுகிறார். எல்லாம் பலிக்கிறது என்றார் .
பரமாச்சாரியர் பிரசாதம் கொடுத்து
" நல்ல சைக்யாட் ரிஸ்டிடம் காட்டு . பிறகு ரொம்ப முற்றிப்போய்விடும் " என்று
அனுப்பி விட்டார்!
பரமாச்சாரியர் அதிசயங்கள் நிகழ்த்தவில்லை. ஆனால் அவரிடம்
பிரார்த்தனை செய்து கொண்ட பக்தர்களுக்கு , வேண்டியது நிறைவேறியது. சங்கடம் ஏற்படும்
போது , தாங்கமுடியாத சோதனை வரும் போது , ஏழுமலையான் படத்தின் முன்பு நம்பிக்கையோடு
பிராத்தனை செய்து கொள்கிறோம். அது நிறைவேறுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியை தொழுது
" என்னை கைவிடாத தெய்வமே " என்று மலையேறி காணிக்கை செலுத்துகிறோம். வேங்கடாசலபதி -
கடவுள் ' அவர் துணை நிற்பார்' என்று நமக்கு உள்ளம்
சொல்கிறது.
No comments:
Post a Comment