ஸ்ரீசீதா தேவி தந்த மந்திரம்
பெண்கள் தங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற துன்பங்களையும், சச்சரவுகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள் எனில், அவைகளின் விளைவுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலுமல்லவா? ஆனால், இது நடைமுறையில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழலாம்.
மந்திரம்
மாமாத்ய தேவோ வடமூல வாஸிம்
க்ருபா விசேஷாத் க்ருதஸன்னிதான :
ஓம்கார ரூபாம் உபதிஸ்ய வித்யாம்
அவித்ய கத்வாந்தம் அபாகரோது.”
இச்சுலோகத்தை உச்சரிப்பவர் இல்லத்தில் சுற்றுப்புற சூழ்நிலையின் தீய சக்திகள் தணிகின்றன. இந்த ஆன்மீக்ச் சூழ்நிலையில் இந்த சுலோகத்தின் மஹிமையால் நமக்கு வரவிருக்கின்ற பிரச்சனைகளை, மனோரீதியில் முன்னரே அறியும் மன ஆற்றல் உருவாகிறது. ”
இவ்வாறு மனோரீதியாக உணர்ந்தபின் நம்முடைய பூஜைகளை நெறிப்படுத்தி ஜப தப முறைகளைப் பெருக்கி, அவற்றை எதிர்கொள்ளத் தயாராகிறோம்.
இது அபரிமிதமான மனோ வலிமையையும், எத்துயர்வரினும் சாந்தத்துடன் அணுகும் தன்மையையும் அளிக்கின்றது. இந்த ஸ்லோகம் கலியுகப் பெண்களுக்கு நலன்கள் அனைத்தையும் தரவல்ல ஒரு வரப்பிரசாதமாகும்.
No comments:
Post a Comment