Friday, December 18, 2020

​கோவிலில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு!

 கோவிலில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு!


கோவிலுக்கு செல்பவர்கள் நம்மை அறியாமலே ஒரு சில தவறுகள் செய்கிறோம். அது என்ன என்பதைத் தெரிந்து, அதைத் திருத்திக்கொள்வோம்.
• கோயிலுக்கு செல்லும் முன் குளித்து, சுத்தமாக செல்ல வேண்டும். கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்லாமல் கடவுளுக்குப் படைக்க நம்மால் முடிந்த பூ, பழம் எதையாவதை வாங்கிச் செல்லலாம்.
• சிவன் கோயில் என்றால் வில்வத்தையும், பெருமாள் கோவிலென்றால் துளசியை வாங்கி சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம். கோபுரத்தை வணங்கிவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும்.
• நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.
• விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும்.
• விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
• மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.
• நமது வேண்டுதல்களையெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். சிவன் நாமம், நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.
• கோவிலுக்குள் வீட்டு விவகாரங்களையோ, மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதோ கூடாது.
• ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது. ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.
• ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையைப் போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.
• கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.
• சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடுவது, கைதட்டுவது போன்றவை செய்தல் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.
• சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அண்டாது.
• கோவிலுக்கு சென்று விட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும்.

கோயிலுக்கு செல்பவர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்தால், கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

No comments:

Post a Comment