Wednesday, March 8, 2017

துளசி புகை சிறந்தது.



அலர்ஜியால் வரும் ஒவ்வாமையை நீக்குவதுடன், நுரையீரலையும் துளசி பலப்படுத்தும். இது, சுவாசப் பாதையில் உள்ள தொற்று நோய் கிருமிகளை செயலிழக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, கட்டுப்பாட்டில் வைக்கிறது. அத்துடன், வயிற்றுவலியை போக்குவதுடன், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ஜுரத்தை போக்கும் சஞ்சீவி, துளசி; நீரில், துளசி இலையைப் போட்டு காய்ச்சி ஆவி பிடிக்க ஜூரம் குறையும். இது, ஆஸ்துமா மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோயை போக்கும்.
பதினைந்து துளசி இலைகளை, துவரம் பருப்புடன் சேர்த்து கஷாயம் வைத்து, மூன்று மாதம் அருந்த, மனச் சோர்வு நீங்கி, உடல் பலம் அடையும். சுக்கு, துளசி, பனை வெல்லத்துடன், பால் சேர்த்து டீ தயார் செய்து அருந்த, சோர்வு நீங்கும்.துளசி மற்றும் இஞ்சி சாறு சம அளவு எடுத்து, அத்துடன், 

மிளகு தூ

ள் ஒரு சிட்டிகை சேர்த்து சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல் மற்றும் நெஞ்சு சளி பிரச்னை வராது. கொசுக்களை ஒழிக்கவும், துளசி புகை சிறந்தது.

No comments:

Post a Comment