Wednesday, March 8, 2017

ஹையோ ஹயோ

பல்" சுவை.
1. டெண்ட்டிஸ்ட் மொபைல் ஆஸ்பத்திரி வச்சா என்ன பேர் வைப்பார்?
நடமாடும் "பல் கலை" கழகம்
2. "பல்" விழுந்த கிழவனுக்கு பிடிச்ச ஹிந்தி பாட்டு எது?
ஆனே வாலா பல் ஜானே வாலா ஹை.
3. சர்க்கஸ்காரர் டீ எப்படி குடிப்பார்?
"பல்" டி அடிச்சுதான்.
4.என்னங்க கொஞ்ச நாளா "ஆடி"க்கிட்டுருக்கிற "பல்" லை இப்ப பிடுங்கிட்டு வாங்க.
ஏன்?
அந்த டாக்டர் "ஆடி" தள்ளுபடி தராராம்.
5."பல்" வலின்னு சோல்லுறோமே, பல்லுக்கு எங்கே வலிக்கும், பல்லுக்கு அடிலதானே வலிக்கும்.
6. நீங்க, பீர் குடிக்கும்போது பல்லுல படாம குடிங்க.
ஏன்?
பல்லுல பட்டா நீங்க "பல்" பீர் ஆயிடுவீங்க.
7. ஏண்டா பஞ்சாங்கத்துல "பல்" விழும் பலன் போட்டிருப்பாங்களாமே! எங்கே?
அட அது பல் இல்ல "பல்லி"
8. "பல்" இல்லாத கிழவனை இறந்ததும் எரித்தால் அவனுக்கு பல் வந்திடும்.
எப்படி?
அதான் சாம்"பல்"ஆகிடுவாரே.
----------------
​​
1.பாம்புக்கு கால் உண்டா?  உண்டு, இல்லாட்டி அது பம்பு.
2.Initial ulla காது எது?   K.காது (கேக்காது)
3.சிப்ஸ் வ்றுக்
​​
க உகந்த் தின்ம் எது?  ப்ரை டே
4.ஆமைக்கு அலர்ஜி வ்ந்தால் என்ன சொல்லுவோம்?  ஒவ்வாமை.
5.அமீனா வந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்ற் பழ்மொழிக்கு அர்த்தம் என்ன?
வீட்டுக்கு அமீனா வ்ந்தால் எல்லா பொருட்களையும் எடுத்து சென்று விடுவான். அப்போது வீட்டில் உள்ளவ்ர்க்கு ஒன்றும் இல்லாமை அகிவிடும். அது போல் ஆமை இல்லத்திற்கு வந்தால் (இல்லம் + ஆமை ) இல்லாமை ஆகிவிடும்.
---------
FACEBOOK வராமல் ஒருநாளும்இருக்க வேண்டாம் !!

ஒருவருக்கும் comment பண்ணாமல்இருக்க வேண்டாம் !!

 Like பண்ணும் நண்பர்களை மறக்கவேண்டாம் !!

comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம் !!

காலை எழுந்தவுடன் Face Book -


 பின்பு மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post,

மாலை முழுதும் Chatting -என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாபா
-----

இன்று பண்ணிய சாம்பார், நான் குளித்துவிட்டு வருவதற்குள், மேட்டூர் அணயில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்தது மாதுரி ஆயிடுச்சு. அம்புட்டு ருசின்னு எல்லோரும் சாப்பிட்டுட்டாங்க.
யாருக்கு கொடுக்குறோமோ இல்லையோ, எங்க வீட்டு முதல் விருந்தாளி எங்கள் சர்வெண்ட் மெய்ட் தான் ( உடனே அவுங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணறதா நினைக்கக்கூடாது)
என் மனைவி அவளிடம் கேட்டாள், " சாமி செய்த சாம்பார் எங்கன உண்டு" அவள் சொன்னாள்
" நல்ல ரசமாயிட்டு உண்டு அம்மா"
அய்யா சாமி சாம்பார் எப்படி ரசமாச்சுன்னு கேக்கப்படாது. நல்ல ரசமாயிட்டு என்றால் "நன்றாக இருந்தது" என்று மலையாளத்தில் அர்த்தம்.

No comments:

Post a Comment