Friday, September 16, 2016

ஸ்ரீகிருஷ்ணர் வழிபட்ட --- சங்கடஹர சதுர்த்தி!



சிவபெருமான், கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார்.

அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்ட ஸித்திகளையும்,

மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார்.

கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற

பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறின்றி நிறைவேற வேண்டும்‘ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
  
பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு,

உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி,

சந்திரலோகம் சென்றார்.

அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான்.

அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய்.

இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது.

அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக’ என்று சபித்தார்.

சந்திரனும் ஒலி மங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.
   
சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில்,

பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும்,

கணபதியைச் சரணடைவது தான் ஒரே வழி என்றும் கூறினார்.

மேலும் ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று,

பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவற்றுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து,

அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தட்சணைகளை அளித்தால் கேட்ட வரங்களை அளிப்பார் என்று பிரம்மா தெரிவித்தார்.

பிறகு தேவர்கள் குரு பிரகஸ்பதியைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர்.

சந்திரனும் இந்த பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார்.

சந்திரனும் களிப்புற்று, அவரை நமஸ்கரித்தார் என்கிறது புராணம்!

“தவம் காரணம் காரண காரணாநாம் க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்“

என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.

பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர்.

கணபதியும் சாபவிமோசனம் அளித்தார்.

‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி’யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின்,

ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூஜிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்’ என்று விநாயகரே அருளினார்.

இதையே சங்கடஹர சதுர்த்தி என போற்றப்படுகிறது.

பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஒருவருடம் வரை தெடர்ந்து வீண் பிரச்னைகள் சிக்கல்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்!

எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை அமைத்து பூக்களால் பூஜித்த பின்,

இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் துவங்கிய காரியத்தில் வெற்றியையும், சகல சௌபாக்கியங்களையும் தருவேன்’

என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளான ஸ்ரீகிருஷ்ணனுக்கு,

நாரதர் இந்த சரிதத்தை விளக்கிச் சொல்ல,

ஸ்ரீகிருஷ்ணனே சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார்

என்று தெரிவிக்கிறது ஸ்காந்தபுராணம்!
  பிள்ளையார்...

--------------------------------
பிள்ளையார்?

கண்டகி நகரை சக்ரபாணி எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான்.

அவனுக்கும் அவன் மனைவியான உக்ராவிற்கும் குழந்தைகள் இல்லாத குறையைத் தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை!

சௌனக் என்னும் முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்க, சூரியனைக் குறித்துத் தவம் இருக்கச் சொன்னார் அவர்.

இருவரும் தவம் செய்ய அதற்குப் பலன் கிடைத்தது.

சூரிய பகவானின் அனுக்கிரகத்தால், உக்ராவும் கர்ப்பம் அடைந்தாள்.
  
ஆனால் என்ன இது? குழந்தையின் சூடு வயிற்றினுள் நாளாக ஆக அதிகரித்துக் கொண்டே வந்தது.

அவளால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் சூட்டைத் தாங்க முடியவில்லை.

தவித்துப் போனாள்.
கதறினாள். கண்ணீர்விட்டாள்.

ஒருகட்டத்தில், உக்ரா சூடு தாங்க முடியாமல் கடலில் இறங்கிக் கொண்டாள்.

அவள் தவிப்பைக் கண்டு வருந்திய சமுத்திர ராஜனும், அவள் குழந்தையைத் தான் தாங்கி வெளியே கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்தான்.

சமுத்திரராஜனால் குழந்தை வெளியே உலகுக்கு வந்ததால், உக்ராவும், சக்ரபாணியும் குழந்தைக்கு ‘சிந்து’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்!
  
அசுரர்களின் குருவான சுக்ராச்சார்யரிடம் சூரிய பகவானைக் குறித்த மந்திரங்களைக் கற்றான் சிந்து.

சுக்ராச்சார்யரும் சூரியனைக் குறித்துத் தவம் செய்யச் சொல்லிக் கொடுக்க,

சிந்துவும் அப்படியே தவமிருந்து வந்தான்!

சிந்துவின் தவத்தில் மகிழ்ந்த சூரிய பகவான், அவனுக்குப் பரிசாக அமுதக் கலசத்தைக் கொடுத்து,

அதை சிந்துவின் வயிற்றிலேயே அவனை வைத்திருக்கும் படியும்,

இந்த அமுதக் கலசம் இருக்கும் வரை அவனை எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது என்றும் சொன்னார்.

சூரியனிடமிருந்து அமுதக் கலசம் பெற்றுக் கொண்ட சிந்து தன் தகப்பனான மன்னனை, விரட்டியடித்தான்.

தானே ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தான்.

ஆனால், நல்லாட்சிக்கு பதிலாக கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான்.

குடிமக்களைத் தொந்தரவு செய்தான்.

தன்னிடம் அமுதக் கலசம் இருக்கும் தெம்பில் தேவர்களையும் துன்புறுத்த முனைந்தான். இந்திரனையும், தேவர்களையும் சிறை பிடித்தான்.

அனைவரையும் காப்பதற்காக வந்த மகாவிஷ்ணுவையும் சிறை பிடித்தான்.

கண்டகி நகரிலேயே சிறைவைத்தான்.

மற்ற தேவர்களும் பிரம்மாவும் திருக்கயிலைக்குச் சென்று சிவனாரிடம் முறையிட்டார்கள்.

விநாயகனால் மட்டுமே அனைவரையும் காப்பாற்ற முடியும்.

ஆகவே அனைவரும் அவனைச் சரணடையுங்கள் என்று அருளினார்.

அதன்படி அனைவரும் விநாயரை வணங்கி வேண்ட,

அவரும் தான் மீண்டும் பிறவி எடுக்கும்போதே சிந்துவை அழிக்க முடியும் எனக் கூறினார்.

விநாயகர் மீண்டும் பிறப்பது எப்படி? அனைவரும் கலங்கினர்.

மேருமலையில் ஈசனோ அன்னைக்கு “ஓம்” என்னும் ப்ரணவத்தை உபதேசித்துப் பனிரண்டு வருடங்கள் ஜபிக்கும்படி கூறினார்.

பார்வதிதேவி, களிமண்ணால் விநாயகரை அமைத்து ஈசன் கூறியபடி வழிபடலானாள். அவள் செய்த வழிபாட்டால் உயிர் பெற்றார் விநாயகர்.

ஈசனும் அவரை ஆசீர்வதித்து, விக்னேஸ்வரனை வணங்கிவிட்டு வேலை ஆரம்பிப்பவர்களுக்குத் தடையில்லாமல் வேலை நடக்கும் என அருளினார்!

அனைவரும் மேரு மலையிலிருந்து இறங்கி வரும் வேளையில் கமலாசுரன் என்பவனைக் கண்டார்கள்.

குதிரை மீது அமர்ந்திருந்த அவன், விநாயகரோடு சண்டை போட்டான்.

அப்போது அவனை வெற்றி கொள்ள முடியவில்லை விநாயகரால்.

அவன் உடலில் காயம் பட்டுக் கீழே விழும் ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் மீண்டும் அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருந்தார்கள்.

ஆகவே பிரம்மாவின் மானச புத்திரிகளான ஸித்தியையும், புத்தியையும் அழைத்து,

அந்த ரத்தத் துளிகள் கீழே விழாமல் அப்படியே குடிக்கும்படி விநாயகர் சொல்ல, அவர்களும் அவ்வாறே குடித்தனர்.

அதன்பிறகு, கமலாசுரனை விநாயகர் கொன்றார்.

அதையடுத்து, கண்டகி நகரில் சிறைப்பட்டிருந்த அனைவரையும் விடுவிக்கும்படி சொல்ல,

சிந்து ஆணவத்துடன் முடியாது என்று மறுத்தான்.

ஆவேசமான விநாயகர், சிந்துவுடன் போரிட்டார்.

விநாயகர் தொடுத்த பாணம், சிந்துவின் வயிற்றைக் கிழித்து அமுதக் கலசத்தை உடைத்து நொறுக்கினார்.

சிந்து செத்துப்போனான்.

கண்டகி நகரின் பொறுப்பை விநாயகர் ஏற்றார்.

ஸித்தி, புத்தியை மணந்தார்.

இந்தப் போரில், விநாயகர் மயிலை வாகனமாய்க் கொண்டு போரிட்டாராம்.

இதனால் அவர் மயூரேசர் என அழைக்கப்பட்டார் என்கிறது புராணம்!

புனே & ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் புனேயில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

இன்றைக்கும் அழகும் குறும்பும் ததும்ப அருள்பாலிக்கும் மயூரேசரை, விநாயகப் பெருமானைத் தரிசிக்கலாம்!

விநாயகரின் சில--திருநாமங்கள்-

ஸ்ரீவரஸித்தி விநாயகர், ஸ்ரீஇஷ்டஸித்தி விநாயகர், ஸ்ரீவிக்ன நிவாரண கணபதி, ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீஸித்திபுத்தி விநாயகர்

என்றெல்லாம் பல திருநாமங்கள் ஆனைமுகத்தானுக்கு!

எத்தனை எத்தனை திருநாமங்கள்.

ஆனால் விநாயகரின் தத்துவம் ஒன்றே ஒன்றுதான்!

ஈசன் மைந்தனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம்.

கேட்ட வரங்களை உடனே வாரி வழங்கும் பிள்ளை குணம் கொண்டவர்.

அதனால்தான் இஷ்டதெய்வமாக ஆனைமுகனைக் கொண்டாடி, போற்றி துதிக்கிறோம்!

ஆனைமுகனே உன் திருவடி சரணம்!
[06/09 07:29] Bhaskaran TT: விநாயகரின் 12
-----------------------------
அவதாரங்கள்
----------------------------

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது.

வக்ரதுண்ட விநாயகர்

இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி,

மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை

பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.

கஜானனவிநாயகர்

சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.

விக்கிரனபராஜர்

காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.

மயூரேசர்

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.

உபமயூரேசர்

சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.

பாலச்சந்திரர்

தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.

சிந்தாமணி

கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான்.

உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.

கணேசர்

பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.

கணபதி

கஜமுகாசுரனை வென்றவர்.

மகோற்கடர்

காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர்.

இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது.

அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

துண்டி

துராசதன் என்ற அசுரனை வென்றவர்.

வல்லபை விநாயகர்

மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.


விநாயகர்சதுர்த்தி விழா தத்துவம் இதுதான்.*

இறைவனை தனது விருந்தினராக கருதி வழிபாடும் முறை இது.

ஒரு #இந்து  இறைவனை, தான் விரும்பும் உருவத்தில்(இஷ்ட தேவதை) சிலையாக வடிக்கிறான்.

அந்த சிலையை தனது வீட்டில்,அல்லது ஒரு பொது இடத்தில்
பிரதிஷ்டை செய்கிறான்.( #சிம்மாசனம்-அமர்வித்தல்)

அந்த சிலையில் எழுந்தருளுமாறு இறைவனை வேண்டுகிறான்.தன் வேண்டுதலை ஏற்று தன் விருந்தினராக அந்த சிலையில் எழுந்தருளியுள்ள இறைவனை வரவேற்கிறான்.இதுவே #ஆவாஹனம்(உருவேற்றுதல்) எனப்படும்.

அடுத்து, தன் வேண்டுதலை ஏற்று தனது விருந்தினராக வந்துள்ள இறைவனை பல்வேறு வகையான சடங்குகளைச் செய்து விருந்தோம்புகிறான்.
இதுவே #உபச்சாரம்(விருந்தோம்புதல்)  ஆகும்.

இறுதியாக அந்த தெய்வத்துக்கு விடை கொடுத்து வழியனுப்புகிறான். இதுவே #விஜர்சனம் (வழியனுப்புதல்) ஆகும். (விநாயகர் சிலையை நீரில் விடுதல்)

இந்த மூன்றும் சேர்ந்ததுதான் #பூஜை ஆகும்.
இது புறப் பூஜை வகையை சேர்ந்த வழிபாடு ஆகும்.

(அகப் பூஜை முறை என்ற வேறுவிதமான பூஜை முறையும் உள்ளது)

இதில் இரண்டாவதாகக் கூறிய உபசார   முறைகள் பல
உள்ளன. மூன்று அங்க வழிபாடு,ஐந்து அங்க வழிபாடு,16 அங்க வழிபாடு,64 அங்க வழிபாடு என பல வகை உபசார முறைகள் உள்ளன.

மூன்று அங்க வழிபாடு

தூபம்-நறுமண புகை காட்டுதல்
தீபம்-தீபத்தை இறைவன் உருவம் முன்பு  காட்டுதல்
நைவேத்தியம்- உணவுகளை இறைவனுக்கு படைத்தல்.

மேலே சொன்ன மூன்றுடன்

சந்தனம்-சந்தனம் பூசுதல்
புஷ்பம்-பூமாலை சாற்றுதல்

ஆகியவையும் சேர்ந்தது ஐந்து அங்க உபசார வழிபாடு ஆகும்.

16 அங்க வழிபாடு கீழ்கண்டவை
சேர்ந்த வழிபாடு ஆகும்.

தியானம்-ஒன்றுதல்
ஆவாஹனம்-உருவேற்றுதல்
சிம்மாசனம்-அமர்வித்தல்
பாத்யம்-திருவடிகளை வணங்குதல்
அர்க்யம்-கைகூப்பி வணங்குதல்.
வஸ்த்ரம்-ஆடை அணிவித்தல்
ஸ்நானம்-குளிப்பாட்டுதல்
சந்தனம்-சந்தனம் பூசுதல்
புஷ்பம்-பூமாலை சாற்றுதல்
தூபம்-நறுமண புகை காட்டுதல்
தீபம்-தீபத்தை இறைவன் உருவம் முன்பு  காட்டுதல்
நைவேத்தியம்- உணவுகளை இறைவனுக்கு படைத்தல்.
தாம்பூலம்-வெற்றிலை வழங்குதல்
நீராஞ்சனம்- விளக்கால் ஆரத்தி எடுத்தல்.
ஸ்வர்ண புஷ்பம்-தங்கத்தால் அலங்கரித்தல்.

இந்து தத்துவம்

அனைத்தும்_இறைவனே! அவன்_ஒருவனே!

என்பதே இந்து மத கொள்கை.

இந்த தத்துவத்தை உணர்த்துவதே விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் நிகழ்வாகும்.

No comments:

Post a Comment