Wednesday, July 27, 2016

​"ச்ரார்த்தம்"



​"ச்ரார்த்தம்"ச்ரத்தையுடன் செய்யவேண்டிய பிதுர் கர்மாவாதலால் இது ச்ரார்த்தம் எனப்படுகிறது.
சிராத்தத்தின்போது இறந்த பெற்றோர், பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் ஆகிய மூவரின் பெயர்களைச் சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக் கப்படுவது வழக்கத்திலுள்ளது ..!! ஏன் தெரியுமா?
குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள ”சுக்கிலம்” எனப்படும் தாதுவாகும்.
இந்தத் தாதுவில்எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ளன.அதில் இருபத்து எட்டு அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உண வு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாவன;
பெற்றோரிட மிருந்து இருபத்தியொரு அம்சமும்,
பாட்டனாரிடமிருந்து பதினைந்து அ ம்சமும்,
முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும்,
நான்காம் மூதாதை யிடமிருந்து ஆறு அம்சமும்,
ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்ச மும்,
ஆறாம் மூதாதை யிடமிருந்து ஒரு அம்சமும்
என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை.
எனவே தான் வம்சம் ஏழு தலைமுறைகளாக குறிக்கப் பட்டுள்ளது.
இதில் அதிகமாக தங்கள் அம்சத் தை தங்கள் வாரிசுகளுக்குத் தரு பவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. இவர்கள் முறையே வஸு , ருத்ர, ஆதித்ய ஸ்வரூபர்கள் எனப்படுகின்றனர்.
அதனால்தான், சிராத்தத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்க ப் படுவது வழக்கத்திலுள்ளது..!
மேலும் சிராத்தம் செய்ய வேண்டிய காலமாக அபரான்ன காலமே சிறந்ததாக சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் அலுவலக நிர்பந்தம் என்ற சாக்கிட்டு அவசர அவசரமாக காலை எட்டு மணிக்கே ப்ருஹஸ்பதியை (வாத்யார்) நிர்பந்தித்து வரவழைத்து செய்வதால் கடன் நிறைவேற்றப்படுகிறதேயன்றி பலன் நமது சந்ததியினரை சேர்வதை உத்தேசிப்பதில்லை.
தவிர போக்தாக்களை(ப்ராம்ணாள்) நியமித்தலிலும் கர்த்தாளி(எஜமானன்)ஸ்ரத்தை செலுத்துவதில்லை. அதாவது போக்தாளை ப்ரார்த்தித்து அவர்களை நியமிப்பது கர்த்தா க்களின் தலையாய கடமை ஆகும். ஆனால் இப்போது நடப்பது வாத்யார்ட்ட சொல்லிட்டா அவரே அவர்களை சொல்லிடுவார் என்ற விட்டேற்றித்தநமே நிலவுகின்றது.
மேலும் வைதீக ச்ரத்தை மற்றும் வைதீக ப்ராம்மணனுக்கு ஸம்பாவனை விஷயத்திலும் மிகமிக கேவலமான முறையாக பேரம் பேசப்படுகிறது. இது எந்த சந்தேகமும் இன்றி வேதனை படுவதற்க்குறிய விஷயமே.
பலஆயிரமாயிரமாக நமக்கும் சந்ததியினர்க்கும் ஒன்றுக்கும் உபயோகமில்லாத கேளிக்கைகளுக்கு செலவழிக்கும் நாம் வைதீகர்களிடம் வரும்போது மட்டுமே பேரம் பேசுகின்றோம். இது சுபகாரயங்களிலும் சரி அபர கார்யங்களிலும் சரி இவ்வித போக்கே நிலவுகின்றது.
ஒன்று கூற விழைகின்றேன். வைதீகர்கள் தவிர வேறெவராலும் நமது பாவங்களை ஒழித்து நமக்கும் நமது சந்ததியினர்க்கும் புன்னியம் சேர்க்க இயலாது.
வைதீகர்களே நமது பாபங்களை அவர்களுடையதாகக் கருதி அதனை ஏற்று நமது சார்பில் பரமாத்மாவிடம் நாமும் நமது சந்ததியினரும் நலம்பெற பூஜிக்கின்றனர்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக நமது பாபங்களை எல்லாம் அவர்களும் ஏற்று அதற்க்கான பரிகாரமாய் காயத்ரி மந்த்ரோச்சாடனத்தால் பாபத்தை தீயிலிட்ட ஹவிஸாய்ப் பொசுக்கி விடுகின்றனர்.
இனியாகிலும் வைதீக கர்மாவிலோ வைதீக செலவுகளிலோ பேரம் பேசாமல் நமது சந்ததியினர்க்கு புண்ணியம் சேர்ப்பதோடன்றி நல்லன வற்றை மட்டுமே விட்டுச்செல்வோம்.
இந்த வ்யாஸத்தில் தவறுகளிருப்பின் வாசகபெரியோர்கள் அடியேனை தெரிவித்தருளவும்.
நாராயணா ! நாராயணா ! நாராயணா ! .


No comments:

Post a Comment