Wednesday, July 27, 2016

சின்ன சின்ன அன்பில் தானே​ ​ ஜீவன் இன்னும் இருக்கு .


ஒரு இளைஞர் தினமும் ஒருபாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை
வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கிபணம் செலுத்திய பின் அந்தபழங்களில் இருந்து ஒன்றை எடுத்துபிய்த்து வாயில் போட்டு விட்டு,

இந்த பழம் மிகவும் புளிப்பாக​ ​
உள்ளது என்று அந்த பாட்டியிடம்
கொடுத்து சாப்பிட சொல்லி​ ​
புகார் செய்வார்.

உடனே பாட்டி ஒரு சுளையைவாயில் போட்டு விட்டு​,​
இல்லையேப்பா, நல்லா தானேஇருக்கு" என்பார்,

உடனே அந்தஇளைஞர் எதுவும் பேசாமல் மீதிபழங்களை எடுத்துக் கொண்டுசெல்வார்.இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவர் மனைவிஅவரிடம், ஏங்க.. பழங்கள் நல்லாஇனிப்பாக தானே உள்ளது, என்தினமும் இப்படி நல்லா இல்லைனுசொல்லி டிராமா போடறீங்க" என்றுகேட்ப்பார்.

உடனே அந்த இளைஞர் சிரித்துகொண்டு மனைவியிடம், அந்த
பாட்டி நல்ல இனிப்பான பழங்களைதான் விற்கிறார், ஆனாலும்
தனக்கென்று ஒரு பழத்தைக் கூடசாப்பிட மாட்டார். நான் இப்படி
குறை கூறி கொடுப்பதால் தினம்அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தைசாப்பிடுகிறார் என்றார்.

தினமும் நடக்கும் இந்த நாடகத்தைஅருகில் இருந்த காய்கறி
வியாபாரி கவனித்து விட்டு, அந்தபாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன்பழங்களை குறை கூறுகிறான்,

இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடைஅதிகமாக போட்டு பழங்களை
கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.

உடனே அந்த பாட்டிபுன்னகைத்துவிட்டு, அவன்
என்னை தினமும் ஒரு பழத்தைசாப்பிட வைப்பதற்காக இப்படி
குறை கூறுவது போல கூறிகொடுத்து சாப்பிட வைக்கிறான்,

இது எனக்கு தெரியாது என்று​ ​
நினைக்கிறான், நான் எடை
அதிகமாக பழங்களைபோடுவதில்லை

மாறாக அவனதுஅன்பில் எனது தராசு கொஞ்சம்சரிந்துவிடுகிறது என்றார்அன்போடு.

சின்ன சின்ன அன்பில் தானே​ ​
ஜீவன் இன்னும் இருக்கு .

No comments:

Post a Comment