1.
மகாவிஷ்ணுவாக
அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
2.
மாசி
மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித
தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி
காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல
புரிந்தது மாசிமாதத்தில் தான்.
5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம்
பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.
6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச
நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது
மாசி மகம் தான்.
8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று
தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப்
போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
10. உயர் படிப்பு படிக்க விரும்பு
பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால்
அதில் சிறந்து விளங்கலாம்.
11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற
தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.
12. காரடையான் நோன்பும் சாவித்ரி
விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா
நடைபெறுகிறது.
13. மாசி மாதத்தில் வீடு குடி போனால்
வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே
இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும்
கூறுவர்.
15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர்
ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில்
பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர்
மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில்
பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர்
தெப்பம் எனப் பெயர்.
18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து
குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில்
இடம் கிடைக்கும்.
19. மாசிமக நாளில் அம்பிகையை
குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும்
வெற்றியும் தேடி வரும்.
20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி
தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில்
சிறந்து விளங்குவர்
No comments:
Post a Comment