Tuesday, July 28, 2015

குட்டிக் கதை

       
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க்கொண்டிருந்தான்அவனுக்குப் பசியெடுத்ததுஒருமரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்கண்டான்மரத்தின் மேல் சரசரவென்று ஏறிஅவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்மிகக்கனிந்த வாசனையுள்ள பழங்கள் ிளைகளின்நுனியில் இருந்தனஅவற்றை எட்டிப் பறிக்கக்கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனதுபாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒருகிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கஆரம்பித்தான்குனிந்து பார்த்தால் தரை வெகு கீழேருந்ததுஏற்கெனவே பயந்து போயிருந்த அவன்மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவதுகாப்பாற்றுங்கள்என்று திரும்பத் திரும்ப அலறஆரம்பித்தான்உள்ளங்கை வியர்த்து வழுக்கஆரம்பிக்கும் ிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர்வந்தார்மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப்பார்த்தார்அவன் மேல் ஒரு சிறி கல்லை விட்டுஎறிந்தார்கல் ட்டவுடன் வலியில் கீழேபார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே,உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே.அறிவில்லையா உமக்குஎன்று கோபத்துடன்கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லைஎடுத்து அவன் மேல் எறிந்தார்மேலும் கோபமுற்றஇளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை ீசிமேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு"நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்"என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சிஎடுத்து கிளைமேல் ஏறி விட்டான்விடுவிடுவெனஇறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச்செய்தீர்உம்மை ான் உதவிதானே கேட்டேன்?"என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் ொண்டே "தம்பி..நான் உனக்கு உதவிதான் செய்தேன்என்றார்.இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில்பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.உன் மூளை வேலை செய்யவில்லைநான் கல்லைவிட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னைஎப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக்காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்று ன் அறிவுக்கு முதலில்புலப்படவில்லைஉன் பயம் உன் கண்ணைமறைத்துக் கொண்டிருந்ததுஅதிலிருந்து உன்னைநான் திசை திருப்பினேன்என்று சொல்லி விட்டுத்தன் வழியே அவர் போய் விட்டார்...

No comments:

Post a Comment