சில வைஷ்ணவர்கள் , ஒரு கோஷ்டியாக, சில திவ்ய தேசங்களைத் தரிசனம் செய்துவிட்டுக் காஞ்சிபுரம் வந்தார்கள். வரதராஜப் பெருமாள், யதோக்தகாரி, பாண்டவ தூத கிருஷ்ணன், உலகளந்த பெருமாள், வைகுண்டப் பெருமாள் - கோயில்களில் தரிசனம் செய்து விட்டு ஸ்ரீ மடத்துக்கு வந்தார்கள்.
அந்த கோஷ்டியில் ஒரு தீவிர வைஷ்ணவர். மற்ற பக்தர்கள் பெரியவாளைச் சேவிக்க வந்தபோது, அவர் மட்டும் தொலைவிலேயே கொஞ்சம் அலட்சியமாக நின்றுவிட்டார்.
அதே சமயம் பெரியவாள், தன் அணுக்கத் தொண்டர்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லும்படி உத்திரவிட்டார். (பெரியவா விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லச் சொல்வது வழக்கம் தான். அந்தப் பாராயணத்தில் அசைக்க முடியாத பற்றுதல் பெரியவாளுக்கு. ஆனால், இப்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஏன் என்பது சீடர்களுக்கு விளங்கவில்லை.)
தொலைவில் நின்று கொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர் செவிகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் விழுந்தது. ' அட, இதென்ன, விபூதிச் சாமியாரைச் சுற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் ?' என்று திகைத்தார் போலும்.
அதே சமயம் பெரியவாள், தன் அணுக்கத் தொண்டர்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லும்படி உத்திரவிட்டார். (பெரியவா விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லச் சொல்வது வழக்கம் தான். அந்தப் பாராயணத்தில் அசைக்க முடியாத பற்றுதல் பெரியவாளுக்கு. ஆனால், இப்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஏன் என்பது சீடர்களுக்கு விளங்கவில்லை.)
தொலைவில் நின்று கொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர் செவிகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் விழுந்தது. ' அட, இதென்ன, விபூதிச் சாமியாரைச் சுற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் ?' என்று திகைத்தார் போலும்.
அடுத்த நிமிஷம் அவர் திகைப்பு இன்னும் அதிகமாயிற்று.
தன்னைச் சேவித்துக் கொண்டிருந்த திருமால் அடியார்களைப் பார்த்து, "நாராயண! நாராயண!" என்று கூறி ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் பெரியவாள்.
பெரியவாளை மறுபடியும் பார்த்தார் ஸ்ரீ வைஷ்ணவர். அங்கே உடையவர் (ராமானுஜர்) நின்று கொண்டிருப்பது போலவே தோன்றிற்று, அவருக்கு. பெரியவா அருகில் வந்து, விழுந்து விழுந்து சேவித்தார். பிறகு, "அபசாரம் பண்ணிட்டேன்.. மன்னிக்கணும்" என்று நாத்தழுதழுக்க வேண்டிக் கொண்டார்.
"நீ ஓர் உண்மையான வைஷ்ணவன்" என்று சொல்லி, கல்கண்டு பழங்கள் கொடுத்து அவருக்கு அனுக்ரஹம் செய்தார்கள் பெரியவா
No comments:
Post a Comment