Friday, December 12, 2014

எல்லோருக்கும் வளையல்

                                                                                       
அன்று  ஒரு  வெள்ளிக்கிழமை. 
அப்போது  மே மாத கடுங் கோடை  காலம்.   வெய்யில் கடுமையாக  தஹித்துக்கொண்டிருந்தது.   காஞ்சியில்  மடத்தில்   சந்திரமௌலீஸ்வரர்  பூஜையைமுடித்துவிட்டு முன்பக்கத்தில் மகாபெரியவா அமர்ந்திருந்தார்.
அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத்தாங்காமல்  வயதான ஒரு வளையல்வியாபாரி மடத்துக்குள் வந்து தன் வளையல்பெட்டியை ஒர் ஓரமாகஇறக்கி  வைத்துவிட்டு ஓய்ந்துபோய்உட்கார்ந்தான். அவருடைய சோர்ந்த முகம்மகானின் கண்களில் பட்டதுமடத்து  ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியைதன் அருகே அழைத்து வரச் செய்தார்.மெதுவாக வியாபாரியை விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்
''சாமி   எனக்கு   இதே ஊரு  தானுங்க''

வளையல் வியாபாரம் எப்படி நடக்கிறது
ஒன்னும்  சரியில்லீங்க  ஆருமசமாவே  ரொம்ப  டல்.சோத்துக்கே  வழ்யில்லேன்னா  பாத்துக்குங்களேன். எல்லோரும் கடையிலே பொய்  வாங்கறாங்க.  வீடு  தேடி  வந்தா  விலை  குறைச்சு கேக்காறாங்க.  நஷ்டத்துக்கு  விக்கமுடியலீங்க.   சமயத்துலே கொடுத்துடறேன்.  சாப்பாட்டுக்கு காசு  வேணாமுங்களா?

உனக்கு எத்தனை குழந்தைகள்?"
வீட்டிலே    என்னோட சம்சாரம்,  4  குழந்தைங்க.  எங்கம்மா   ரொம்ப வயாசானவங்க  என்கூட  இருக்காங்க. 

அப்போது மகாப் பெரியவாள், பக்கத்திலே  இருந்தவர்களிடம்   "இந்தவளையல் வியாபாரியின் பாரத்தை இன்றுநாம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.   இன்று வெள்ளிக்கிழமை இவரிடம்ருக்கும் எல்லா  வளையல்களையும்மொத்தமாக வாங்கி, மடத்துக்கு  வரும்எல்லா சுமங்கலிகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும் கொடுத்தால்புண்ணியம்இந்த ஏழையிடமிருந்து வாங்கி  அவர்களுக்குக் கொடுப்பதுவிசேஷமல்லவாஇந்தப் புண்ணியகைங்கர்யத்துக்கு அளவு கோலேகிடையாது!"
மடத்துக்கு   வந்திருந்த பக்தர்  ஒருவர்   தான்  வளையல்  எல்லாவற்றையும்  வாங்கும் புண்யத்தை ஏற்க  முன்வந்தார். 
'' நீங்க  வளையல்  அத்தனையும்  வாங்கிட்டேள்  இப்போ.   அதில் ஒரு டஜன்வளையலை எடுத்து வளையல்காரரிடமேகொடுங்கோ.''

ஏன்  பெரியவா  இப்படி சொல்றான்னு புரியலே.  அவாளே  சொன்னப்புறம்  தான்  புரிஞ்சுது.  

''இன்னிக்கு  வெள்ளிக்கிழமையில்லையா?  வளையல்பெட்டி காலியாக  இருக்கவே கூடாது.அந்தவளையல்களை அவன்
வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.''

பிறகு வளையல்காரருக்கு மடத்தின்மூலமாக வேஷ்டிபுடவைகளைக் கொடுத்துஅவருக்கு சாப்பாடும் போட்டு
அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

"இன்று வளையல் காரருக்கு தலைபாரமும்,மனபாரமும்நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள்எதிர்பாராத  விதமாக உதவியைச் செய்துவிடுகிறார் மகான் என்று
அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ  அன்றுமடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப்பெண்களுக்கும் வளையல்கள். அதுவும் நடமாடும் தெய்வம்  கையால் தொட்டுக்கொடுத்த வளையல்கள்அந்த பாக்கியம்
அன்று  வந்த  சுமங்கலிகள்  எல்லோருக்கும்  கிடைத்தது.  

No comments:

Post a Comment