Wednesday, November 26, 2014

" பூரானை ஒண்ணும் செய்யாதே .

சாயங்காலம் ஐந்து மணி. பெரியவாள், ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.

அவர்கள் வஸ்த்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார். பரபரப்புடன் கைகளை நீட்டி , காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.

"என்ன அவசரம் ? " என்றார்கள் , பெரியவாள்.

"பெரிய சடைபூரான் இருக்கு வஸ்திரத்திலே..."

பெரியவா, கண்ணனிடம் வஸ்த்திரத்தைக் கொடுத்தார்.

" பூரானை ஒண்ணும் செய்யாதே .. ஹிம்ஸை செய்யாதே ... ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு. ... பூரான் , ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை... ஒண்ணை அழிச்சாலும், ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி ..."

பூரான் - ஒரு விஷ ஜந்து. அந்த உயிரிடமும் கருணை , பெரியவாளுக்கு.

Source: Book titled 'கச்சிமூதூர் கருணாமூர்த்தி'

No comments:

Post a Comment