Monday, November 10, 2014

கடி ஜோக்ஸ் 118

ஆபிசில இருந்து டீசாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளியபார்த்தாஒரே டிராபிக்சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுலநாலு என்னசுத்துபோட்ட ஓரமா கூட்டிட்டு போனாக. 

போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?

மங்கு : சார் மரியாதையா கேளுங்க ?


போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?


மங்கு : லைசென்ஸ் இந்தாங்க


போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?


மங்கு : ஆர்சி புக் இந்தாங்க


போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?


மங்கு : இன்சூரன்ஸ் இந்தாங்க


போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம்கரக்டா வச்சுருக்காரு


சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!!


ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?


மங்கு : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான்நடந்து வந்தேன்


சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?


மங்கு : பைக் ஆபிசுல இருக்கு சார்


சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , 
ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம்

எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு

!!!!!!!
மங்கு : @#@$!@$!$#!$
(எப்படித்தான் நம்மள கரக்ட்டா கண்டு புடிக்கிறாங்களோ ???

அவ்வ்வ்வவ்வ்வ்வ் )
......................................................

புருஷன் தன பொண்டாட்டி திடீர்னு மயக்கம்போட்டு விழுந்துட்டா என்பதால்
ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போய்எமெர்ஜென்சி வார்டுல அட்மிட் பண்ணினான்.
ஆபரேஷன் தியேட்டருல ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருந்துச்சி. புருஷன் வெளிய
உக்காந்து இருந்தான்.
*
*
*
*
*
*
கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே வந்த டாக்டர்அட்டெண்டரை பாத்து, 'ஸ்பேனர் இருந்தா சீக்கிரம்எடுத்துட்டு வா' என்று கத்தினார்.
*
*
*
*
*
அட்டெண்டர் கொண்டு போய்கொடுத்துட்டு வந்தான்.மறுபடியும் டாக்டர் வெளியே வந்து, '
ஸ்க்ருடிரைவர் இருந்தா சீக்கிரம் கொண்டு வா'என்று கத்தியதும் அட்டெண்டர் கொண்டு போய்கொடுத்தான்.
*
*
*
*
*
புருஷன், 'எதுக்கு டாக்டர் ஸ்பேனர்,ஸ்க்ரு டிரைவர் எல்லாம் கேக்குறார், என்ன பண்றாங்கன்னு புரியலியே'என்று தவித்து போனான்.
*
*
*
*
கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வந்து, 'அந்தபெரிய சுத்திய எடுத்துட்டு வா'
என்று கத்தியதும் புருஷன் பயந்து போய்டாக்டரிடம் கேட்டான்.


புருஷன்:- என்ன டாக்டர், ஸ்பேனர்,ஸ்க்ருடிரைவர், இப்போ சுத்தி எல்லாம்
கேக்றீங்க..உள்ள ஆப்பரேஷன் தானே பண்றீங்க..இல்ல வேற எதாச்சுமா..
*
*
*
*
*
*
*
*

*
டாக்டர்:- ஆபரேஷன் தான் செய்யணும்..ஆபரேஷனுக்கு தேவையான கத்தி, சிஸ்சர் எல்லாம்வச்சிருக்கிற பெட்டியோடபூட்டு சாவி காணாமல் போய்டுச்சி..அதான் பெட்டிய திறக்க முயற்சி பண்ணோம்.. முடியல.. கடைசியா பூட்டை உடைக்கலாம்னு இருக்கோம்..
............................................................
ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான
அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு . உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான் . அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் . ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான் . மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான
உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார் . இவனும் வந்துட்டான..

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது . அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது . இவனும் மறு நாள் காரணம் கேட்டான் . ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார..
மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான் . அவர் அப்பவும் மறுத்தார் . உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு . ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க . ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .
உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான் . வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார் . இவனும் பண்ணினான
ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி . அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார் . இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார் . இவன் தொறந்தான் . அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி . ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான்
அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் .
..
.
அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.
( பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க )

No comments:

Post a Comment