Saturday, October 18, 2014

"அடேடே, நீ இங்கேயா இருக்கிறாய் "

பூமியில் நடக்கும் ஒரு திருமணத்தில் மணமகன் தாலி கட்டிய மறு 

நிமிடத்தில் அவன் உயிரை பறித்து வரவேண்டும் என எம தர்மன் புறபட்டான்...
திருமண மண்டபத்தில் நுழையும்போது, அங்கே கதவிடுக்கில் ஒரு சிறிய எலி

, விளையாடி கொண்டு இருந்தது... அதை பார்த்த எமன், "அடேடே, நீ இங்கேயா 

இருக்கிறாய் " என்று கூறியபடி மண்டபத்துக்கு உள்ளே உயிர் பறிப்பு 

வேலையை பார்க்க போய்விட்டான்...
ஆனால், எலி... மிகுந்த பயத்துடன், வீட்டின் ஒட்டு பகுதிக்கு சென்று, எமன்

தன்னை அடையாளம் கண்டு இங்கேயா இருக்கே, என்று கேட்டு விட்டதால்

நம் உயிரை கொண்டு போய்விடுவான் என்று எண்ணி ஓலமிட்டு அழ

துவங்கியது.. அப்போது அங்கே வந்த கருடன் ஒன்று, எலியிடம் என்ன

நடந்தது என்று கேட்க, எலி தனது கவலையை சொல்ல.. உடனே கருடன்,

கவலை படாதே, உன்னை என் கால்களில் சுமந்து சென்று ஊருக்கு வெளியில்

இருக்கும் மலை உச்சியில் இருக்கும் பாறை இடுக்கில் விட்டுவிடுகிறேன்...

ஆக நீ எமன் கண்ணில் மீண்டும் படுவதற்கு வாய்ப்பு இல்லாமல்

போய்விடும்... உன் உயிர் தப்பும் என்று சொல்ல, எலியும் மகிழ்வுடன்,

கருடனின் கால்களுக்கு இடையில் ஏறி தப்பித்தது...
கருடன் ஊரை விட்டு வெளியில் வந்து மலை உச்சியின் மேல் இருந்த

பாறைக்கு இடையில் எலியை இறக்கி விட்டுவிட்டு விடைபெற்று

கொண்டது..... அதே நேரத்தில் பாறையின் இடுக்கில் இருந்து வெளிப்பட்ட

பாம்பு அந்த எலியை விழுங்கத்துவங்கியது...
எலியின் உயிர் எமன் சபைக்கு போனது... அங்கே எமன் சிரித்துக்கொண்டே,

இன்னும் ஐந்து நிமிடத்தில் நீ எப்படி அத்துணை தொலைவில் இருக்கும்

மலையுச்சிக்கு போவாய், அந்த கல்லிடுக்கில் இருக்கும் பாம்புக்கு எப்படி

இரை ஆகி இங்கே வருவாய் என்ற எண்ணத்தில், அங்கே தானே உன் விதி

முடியவேண்டும் என்று கணக்கு இருக்கிறதே என்று கேட்டேன்... ஆக, நீயே

உன் முயற்சியால் காலதேவன் கணக்கு தப்பாமல் நடந்து கொண்டு இங்கே

வந்து விட்டாய்.... என்றான்....
ஆக, விதி என்பது எது எப்போது நடக்கவேண்டுமோ அது அப்போது நடந்தே தீரும்....

No comments:

Post a Comment